Friday, November 25, 2011

நெய் கொண்டு செல்வது ஏன்?

நெய் கொண்டு செல்வது ஏன்?

ஐயப்பனுக்கு காணிக்கையாய் கொடுக்க நெய் கொண்டு செல்வது காலம் காலமாய் இருந்து வருகிறது. இந்த வழக்கம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

இருமுடியில் நெய்த்தேங்காய் சுமந்து செல்வதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகிறது.

முதல் காரணம்: பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர். வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான். அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான். இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது. இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.

இரண்டாவது காரணம்: ஐயப்பனின் வளர்ப்புத் தந்தை பந்தளமகாராஜா ராஜசேகரன் ஐயப்பனை விட்டு பிரிந்து செல்லும் காலம் வந்தது. ஐயப்பன் பிரியும் நேரத்தில் மணிகண்டா, நீ காட்டுக்குள் குடியிருக்கப் போவதாய் சொல்கிறாய். அங்கே மலைகளைக் கடந்து வரவேண்டும். அவை சாதாரண மலையல்ல. வயதான நான் உன்னைக் காண எப்படி வருவேன் என்றார். அதற்கு மணிகண்டன் உங்களுக்கு ஒரு கருடன் வழிகாட்டும். அந்த வழிகாட்டுதலின்படி நீங்கள் எனது இடத்திற்கு வந்து விடலாம் என அருள்பாலித்தார். அதன்படி ஆண்டுக்கு ஒருமுறை ஐயப்பனைக் காண பந்தளராஜா மலைக்குச் செல்வார்.மகனை வெறுங்கையோடா பார்க்கச் செல்ல முடியும். அவனுக்கு பிடித்தமானவற்றை எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டாமா? என்ன கொண்டு செல்வது என யோசித்தார். நெய் இலகுவில் கெட்டு போகாத ஒன்று.

எனவே நெய்யில் செய்த பலகாரங்களை கொண்டு செல்வார். மேலும் தனி நெய்யை தேங்காய்க்குள் ஊற்றி கொண்டு சென்றால் இன்னும் பல நாள் கெடாமல் இருக்கும். ஐயப்பனைக் காணப் செல்வதென்றால் எளிதான காரியமா? இன்று போல அன்று பஸ், ரயிலெல்லாம் கிடையாதே! எனவே பந்தளத்திலிருந்து நடந்தே மலை ஏறுவார். மலையை அடைய பல நாட்களாகும்.எனவே கெட்டுப் போகாத நெய்யை எடுத்துச் செல்லும் வழக்கம் உருவானது. இருமுடிகட்டில் முக்கியமானது நெய் தேங்காய்தான். அத்துடன் ஐயப்பன் அரண்மனையில் இருந்த போது அணிந்த நகைகளையும் எடுத்துச் சென்ற பழக்கம் நாளடைவில் உருவானது. அது இப்போது பெரும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்று கருடன் வழிகாட்டுவது விசேஷ அம்சம். வயதான அவர் மலை ஏற முடியாமல் ஐயோ அப்பா என்று சொல்லியபடியே பல இடங்களில் உட்கார்ந்தும் விடுவார். இந்தச் சொற்களே திரிந்து ஐயப்பன் என ஆனதாகவும் சொல்லப்படுவதுண்டு.

ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)

ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)


நான், எனது என்று இல்லாத இடத்தில் ஆனந்த சித்தன் இறைவன் ஐயப்பன் பிரகாசிக்கிறார் சுவாமியே சரணமய்யப்பா.

விநாயகர் வணக்கம்

கலை நிறை கணபதி சரணம் சரணம்
கஜமுக குணபதி சரணம் சரணம்
தலைவநின் இணையடி சரணம் சரணம்
சரவண பவகுக சரணம் சரணம்
சிலைமலை யுடையவ சரணம் சரணம்
சிவசிவ சிவசிவ சரணம் சரணம்
உலைவரு மொருபரை சரணம் சரணம்
உமைசிவ அம்பிகை சரணம் சரணம்
அரஹர சிவசுத கணபதி சரணம்
அடியவர் வினை கெட அருள்பவ சரணம்
நினைபவர் பவமற நினைபவ சரணம்
நெடியவன் விழிதரு நெடியவ சரணம்
வலவையை மருவிய புயதர சரணம்
வடிவினி லுயரிய பெரியவ சரணம்
முறைதெரி மறையவ நிறையவ சரணம்
முடியடி தெரிவரு முதியவ சரணம்
சரணம் சரணம் கணபதி சரணம்
சரணம் சரணம் கஜமுக சரணம்

வரலாறு, மாலை அணியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்,

ஞானமுத்ராம் சாஸ்த்ரு முத்ராம் குரு முத்ராம் நமாம்யஹம்
வனமுத்ராம் சுத்த முத்ராம் ருத்ர முத்ராம் நமாம்யஹம்
சாந்த முத்ராம் சத்ய முத்ராம் வ்ருத முத்ராம் நமாம்யஹம்
சபர் யாச்ரச சத்யேன முத்ராம் பாது சதாபிமோ
குரு தக்ஷிணயா பூர்வம் தஸ்யா நுக்ரஹ காரிணே
சரணாகத முத்ராக்யம் த்வன் முத்ராம் தாரயாம் யஹம்
சின் முத்ராம் கேசரி முத்ராம் பத்ர முத்ராம் நமாம்யஹம்
சபர்யாசல முத்ராயை நமஸ்துப்யம் நமோ நம

ஐயப்பன் 108 சரணக் கோவை

ஓம் கன்னிமூல கணபதியே சரணம் ஐயப்பா
ஓம் காந்தமலை ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் ஹரிஹர சுதனே சரணம் ஐயப்பா
ஓம் அன்னதானப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் ஆறுமுகன் சோதரனே சரணம் ஐயப்பா
ஓம் ஆபத்தில் காப்போனே சரணம் ஐயப்பா
ஓம் இன்தமிழ்ச் சுவையே சரணம் ஐயப்பா
ஓம் இச்சை தவிர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஈசனின் திருமகளே சரணம் ஐயப்பா
ஓம் உண்மைப் பரம்பொருளே சரணம் ஐயப்பா

ஓம் உலகாளும் காவலனே சரணம் ஐயப்பா
ஓம் ஊமைக்கருள் புரிந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் ஊழ்வினை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எளியோர்க்கு அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் எங்கள் குல தெய்வமே சரணம் ஐயப்பா
ஓம் ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா
ஓம் ஏகாந்த மூர்த்தியே சரணம் ஐயப்பா
ஓம் ஐங்கரன் தம்பியே சரணம் ஐயப்பா
ஓம் ஐயமெல்லாம் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் ஒப்பில்லாத் திருமணியே சரணம் ஐயப்பா

ஓம் ஒளிரும் திருவிளக்கே சரணம் ஐயப்பா
ஓம் ஓங்காரப் பரம்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஓதும் மறைபொருளே சரணம் ஐயப்பா
ஓம் ஒளடதங்கள் அருள்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சௌபாக்கியம் அளிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் கலியுக வரதனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிமலை சாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் சிவன்மால் திருமகனே சரணம் ஐயப்பா
ஓம் சைவ வைணவ ஐக்கியமே சரணம் ஐயப்பா
ஓம் அச்சங்கோயில் அரசே சரணம் ஐயப்பா

ஓம் ஆரியங்காவு ஐயாவே சரணம் ஐயப்பா
ஓம் குளத்துப்புழை பாலனே சரணம் ஐயப்பா
ஓம் பொன்னம்பல வாசனே சரணம் ஐயப்பா
ஓம் வில்லாளி வீரனே சரணம் ஐயப்பா
ஓம் வீரமணிகண்டனே சரணம் ஐயப்பா
ஓம் உத்திரத்தில் உதித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் உத்தமனே சத்தியனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பையில் பிறந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் பந்தள மாமணியே சரணம் ஐயப்பா
ஓம் சகலகலை வல்லோனே சரணம் ஐயப்பா

ஓம் சாந்தம் நிறை மெய்ப்பொருளே சரணம் ஐயப்பா
ஓம் குருமகனின் குறை தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருதட்சினை அளித்தவனே சரணம் ஐயப்பா
ஓம் புலிப்பாலைக் கொணர்ந்தவனே சரணம் ஐயப்பா
ஓம் வன்புலி வாகனனே சரணம் ஐயப்பா
ஓம் தாயின் நோய் தீர்த்தவனே சரணம் ஐயப்பா
ஓம் குருவின் குருவே சரணம் ஐயப்பா
ஓம் வாபரின் தோழனே சரணம் ஐயப்பா
ஓம் துளசிமணி மார்பனே சரணம் ஐயப்பா
ஓம் தூயவுள்ளம் அளிப்பவனே சரணம் ஐயப்பா

ஓம் இரு முடிப்பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் எரிமேலி தர்மசாஸ்தாவே சரணம் ஐயப்பா
ஓம் நித்ய பிரம்மச்சாரியே சரணம் ஐயப்பா
ஓம் நீலவஸ்திர தாரியே சரணம் ஐயப்பா
ஓம் பேட்டை துள்ளும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பெரும்ஆணவத்தை அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா

ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் சாஸ்தாவின் நந்தவனமே சரணம் ஐயப்பா
ஓம் சாந்தி தரும் பேரருளே சரணம் ஐயப்பா
ஓம் பேரூர்த்தோடு தரிசனமே சரணம் ஐயப்பா
ஓம் பேதமையை ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் காளைகட்டி நிலையமே சரணம் ஐயப்பா
ஓம் அதிர்வேட்டுப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் அழுதைமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் ஆனந்தமிகு பஜனை பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் கல்லிடும் குன்றமே சரணம் ஐயப்பா

ஓம் உடும்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் இஞ்சிப்பாறைக் கோட்டையே சரணம் ஐயப்பா
ஓம் கரியிலந் தோடே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா
ஓம் கரிமலை இறக்கமே சரணம் ஐயப்பா
ஓம் பெரியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் சிறியானை வட்டமே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா நதித் தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் பாவமெல்லாம் அழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் திரிவேணி சங்கமே சரணம் ஐயப்பா

ஓம் திருராமர் பாதமே சரணம் ஐயப்பா
ஓம் சக்தி பூஜை கொண்டவனே சரணம் ஐயப்பா
ஓம் சபரிக்கு அருள் செய்தவளே சரணம் ஐயப்பா
ஓம் தீபஜோதித் திருஒளியே சரணம் ஐயப்பா
ஓம் தீராத நோய் தீர்ப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் பம்பா விளக்கே சரணம் ஐயப்பா
ஓம் பலவினைகள் ஒழிப்பவனே சரணம் ஐயப்பா
ஓம் தென்புலத்தார் வழிபாடே சரணம் ஐயப்பா
ஓம் திருப்பம்பையின் புண்ணியமே சரணம் ஐயப்பா
ஓம் நீலிமலை ஏற்றமே சரணம் ஐயப்பா

ஓம் நிறைவுள்ளம் தருபவனே சரணம் ஐயப்பா
ஓம் அப்பாச்சி மேடே சரணம் ஐயப்பா
ஓம் இப்பாச்சி குழியே சரணம் ஐயப்பா
ஓம் சபரி பீடமே சரணம் ஐயப்பா
ஓம் சரங்குத்தி ஆலே சரணம் ஐயப்பா
ஓம் உரல்குழி தீர்த்தமே சரணம் ஐயப்பா
ஓம் கருப்பண்ணசாமியே சரணம் ஐயப்பா
ஓம் கடுத்த சாமியே சரணம் ஐயப்பா
ஓம் பதினெட்டாம் படியே சரணம் ஐயப்பா
ஓம் பகவானின் சந்நிதியே சரணம் ஐயப்பா

ஓம் பரவசப் பேருணர்வே சரணம் ஐயப்பா
ஓம் பசுவின் நெய்யபிஷேகமே சரணம் ஐயப்பா
ஓம் கற்பூரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் நாகராசப் பிரபுவே சரணம் ஐயப்பா
ஓம் மாளிகைப் புரத்தம்மனே சரணம் ஐயப்பா
ஓம் மஞ்சமாதா திருவருளே சரணம் ஐயப்பா
ஓம் அக்கினி குண்டமே சரணம் ஐயப்பா
ஓம் அலங்காரப் பிரியனே சரணம் ஐயப்பா
ஓம் பஸ்மக் குளமே சரணம் ஐயப்பா
ஓம் சற்குரு நாதனே சரணம் ஐயப்பா

ஓம் மகர ஜோதியே சரணம் ஐயப்பா
ஓம் மங்கள மூர்த்தியே சரணம் ஐயப்பா

ஓம் ஐயப்பா! நாங்கள் தெரிந்தும் தெரியாமலும் அறிந்தும் அறியாமலும் செய்த சகல குற்றங்களையும் பொறுத்து காத்து ரட்சிக்க வேண்டும். ஓம் சத்தியமான பொன்னு பதினெட்டாம்படி மேல் வாழும் வில்லாளி வீரன் வீர மணிகண்டன் காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சாமியே சரணம் ஐயப்பா!

ஐயப்பன் கவசம்

கணபதி துதி

அரியின் மருகோனே ஆறுமுகன் சோதரனே
இனிமைத் தமிழோனே ஈசனின் பாலகனே
உமையவளின் செந்தேனே ஊழ்வினை யழிப்பவனே
எவ்வுயிருக்கும் காப்பவனே ஏழையை ஆட்கொண்டே
ஐங்கரனே அருள் புரிவாய்.

காப்பு

ஹரிஹரபுத்ரனை ஆனந்த ரூபனை
இருமூர்த்தி மைந்தனை அறுமுகன் தம்பியை
சபரிகிரீசனை, சாந்த ஸ்வரூபனை
தினம் தினம் போற்றிப் பணிந்திடுவோம்
ஐயப்ப தேவன் கவசமிதனை
அநுதினம் சொல்ல அல்லல்கள் ஒழியும்
தினம் தினம் துதிக்கத் தீரும் வினையெல்லாம்
நாடிய பொருளும் நலமும் வருமே

நூல்

மண்ணுலகெல்லாம் காத்தருள் செய்ய
மணிகண்ட தேவா வருக வருக
மாயோன் மைந்தா வருக வருக
ஐங்கரன் சோதரா ஐயப்பா வருக
புலிவாஹனனே வருக வருக
புவியெல்லாம் காத்திட வருக வருக
பூரணை நாதனே வருக வருக
புண்ணியமூர்த்தியே வருக வருக
பூத நாயகா வருக வருக
புஷ்களை பதியே வருக வருக

பொன்னம்பலத்துறை ஈசா வருக
அடியாரைக் காக்க அன்புடன் வருக
வருக வருக வாசவன் மைந்தா
வருக வருக வீர மணிகண்டா
வஞ்சனை நீக்கிட வருக வருக
வல்வினை போக்கிட வருக வருக
ஐயம் தவிர்த்திட ஐயப்பா வருக
அச்சம் அகற்றிட அன்பனே வருக
இருவிளை களைந்தே எனையாட்கொள்ள
இருமூர்த்தி மைந்தா வருக வருக

பதினென்படியை மனத்தில் நினைக்க
பண்ணிய பாவம் பொடிப்பொடியாகும்
ஐயப்பா சரணம் என்றே கூறிட
ஐம்பூதங்களும் அடிபணிந்திடுமே
சபரிகிரீசனை நினைத்தே நீரிடத்
துன்பங்கள் எல்லாம் தூள் தூளாகும்
சரணம் சரணம் என்றே சொல்லிட
சித்திகள் யாவும் வந்தடைந்திடுமே
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பகைவர்கள் எல்லாம் பணிந்தே வணங்குவர்

ஐயப்பன் பாதம் அநுதினம் நினைக்க
அவினியிலுள்ளோர் அடிபணிந் தேத்துவர்
சரணம் சரணம் ஐயப்பா சரணம்
சரணம் சரணம் சபரி கிரீசா
சரணம் சரணம் சத்குரு நாதா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்.

வேண்டுதல்

சிவனார் மகன் என் சிரசினைக் காக்க
நெடுமால் மைந்தன் நெற்றியைக் காக்க
கஜமுகன் தம்பிஎன் கண்ணிணைக் காக்க
நாராணன் பாலன் நாசியைக் காக்க
இருமூர்த்தி மைந்தன் இருசெவி காக்க
வாபரின் தோழன் வாயினைக் காக்க
பம்பையின் பாலன் பற்களைக் காக்க
நான்முகப் பூஜீயன் நாவினைக் காக்க
கலியுக வரதன் கழுத்தினைக் காக்க
குமரன் தம்பி என் குரல்வளை காக்க

புஷ்களை நாதன் புஜங்களைக் காக்க
முக்கண்ணன் பாலன் முழங்கையைக் காக்க
வீரமணி கண்டன் விரல்களைக் காக்க
கயிலை மைந்தன் மார்பினைக் காக்க
மணிகண்ட தேவன் மார்பினைக் காக்க
வன்புலி வாகனன் வயிற்றினைக் காக்க
முழுமுதற் கடவுள் முதுகினைக்காக்க
இருமுடிப்பிரியன் இடுப்பினைக் காக்க
பிரம்பாயுதன் என் பிட்டங்கள் காக்க
தர்மசதஸ்தா என் துடைதனைக் காக்க

முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
முருகன் சோதரன் முழங்கால் காக்க
கற்பூர ஜோதி என் கணைக்கால் காக்க
பந்தள பாலன் பாதத்தினைக் காக்க
விஜயகுமரன் விரல்களைக் காக்க
அன்னதானப் பிரபு அங்கமெல்லாம் காக்க
ஆரியங்கா ஜோதி அன்புடன் காக்க
காட்டாளரூபி காலையில் காக்க
நவக்ரஹ நாதன் நடுப்பகல் காக்க

மாலின் மகனார் மாலையில் காக்க
ஹரிஹர சுதனார் அந்தியில் காக்க
இன்பமய ஜோதி இரவினில் காக்க
எருமேலி சாஸ்தா என்றுமே காக்க
ஹரியின் மகனார் அநுதினம் காக்க
நடராஜன் பாலன் நாள்தோறும் காக்க
வாசவன் செல்வன் வலப்புறம் காக்க
இருமுடி ஈசன் இடப்புறம் காக்க
காக்கக் காக்க கருணையால் காக்க
பார்க்கப் பார்க்க பாபம் பொடிபட

இம்மையும் மறுமையும் இல்லா தொழிந்திட
ஈசன் மகன்எனை என்றுமே காக்க
கொடிய விஷயங்களும் கொள்ள நோய்களும்
குருதியைக் குடிக்கும் துஷ்டப் பேய்களும்
காந்தமலைதனைக் கருத்தில் கொண்டிட
கலங்கி மறைந்திடக் கருணை புரிவாய்
பில்லி, சூனியம் பலவித வஞ்சனை
பம்பையின் பாலன் பெயர் சொல்லிடவும்
பஞ்சாய்ப் பறக்க வரமெனக் கருள்வாய்
பயங்களைப் போக்கி அபயம் அளிப்பாய்

வாதம், பித்தம் சிலேட்சுமத் துடனே
வாந்தியும், பேதியும் வலிப்பும் சுளுக்கும்
எவ்வித நோயும் எனையணுகாமல்
என்றுமே காப்பாய் எருமேலி தேவா
கல்வியும், செல்வமும் கள்ளமில்லா மனமும்
நல்லோர் உறவும் நாளும் அருள்வாய்
நல்ல மனத்துடன் உனைநான் துதிக்க
நித்தமும் அருள்வாய் சபரி கிரீசா
காமம், குரோதம், லோபம் மோஹம்
மதமாச்சர்ய மெனும் ஐம்பெரும் பேய்கள்

என்றுமே என்னை அணுகிவிடாமல்
ஐயப்ப தேவா வரமெனக் கருள்வாய்
சூது, பொறாமை, பொய் கோபமில்லாமல்
சோரம், லோபம் துன்மார்க்கம் கல்லாமல்
வேத நெறிதனை விலகி நில்லாமல்
வீரமணி கண்டா வரமெனக் கருள்வாய்
மூப்பும், பிணியும், வறுமையும், பசியும்
வந்தனை வாட்டி வதை செய்யாமல்
உள்ளன் புடனே உன்திருநாமம்
அநுதினம் சொல்ல அருள் தருவாயே

நமஸ்காரம்

ஹரிஹரபுத்ரா அன்பா நமோ நமோ
சபரிகிரீசா சாஸ்தா நமோ நமோ
பதினென் படிவாழ் பரமா நமோ நமோ
ஐயங்கரன் சோதரா ஐயப்பா நமோ நமோ
பொன்னம் பலத்துறை புண்ணியா நமோ நமோ
புலிப்பால் ஈந்த புண்ணியா நமோ நமோ
மஹிஷி மர்த்தனா மணிகண்டா நமோ நமோ
சரணம் சரணம் சபரிகிரீசா
சரணம் சரணம் சத்ய ஸ்வரூபா
சரணம் சரணம் சர்வ தயாளா
சரணம் சரணம் ஸ்வாமியே சரணம்

அகஸ்தியர் அருளிய ஐயப்ப மாலை

1. விருப்பமும் வெறுப்புமின்றி வினைப் பயன் எல்லா முந்தன்
திருப்ப தம் தன்னில் வைத்து திருப்தியும் திறனு முற்று
ஒருப்பவர் மீதும் த்வேஷம் உற்றிடாது அன்பே பூண்டுன்
திருப்பணி செய்து வாழத் திருவருள் செய்குவாயே

2. வையமும் வானும் வாழ மறை முதல் தருமம் வாழ
செய்யும் நற் செயல்கள் வாழத் திருவருள் விளக்கம் வாழ
நையும் ஊழுடையார் தத்தம் நலிவகன்றினிது வாழ
ஐயனாய் அப்பனானான அவர் பதம் வணக்கம் செய்வோம்

3. மெய்யெல்லாம் திரு நீறாக வழியெலாம் அருள் நீராக
பொய்யில்லா மனத்தராகி புலனெல்லாம் ஒருத்தராகி
வெய்ய வேறற்றவுள்ள விளக்க முற்றான் பால் விம்மி
ஐயனே ஐயப்பா என்பார் அவர் பாதம் வணக்கம் செய்வோம்

சபரிமலை மகாத்மியம்

4. சக்தியெல்லாம் சபரிமலை தத்வமெலாம் சபரிமலை
சித்திமெலாம் சபரிமலை மோனமெலாம் சபரிமலை
முக்தியெலாம் சபரிமலை சிற்பரமாம் சபரிமலை
புத்தியெலாம் சபரிமலை போற்றிடுவாய் நீ மனமே

5. ஓங்காரமான மலை ஓதுமறை ஓங்குமலை
ஹ்ரீங்கார மந்த்ரமலை ரிஷிகணங்களேத்து மலை
ஆங்காரம் அழிக்கும் மலை ஆனந்தம் கொழிக்கும் மலை
பாங்கான சபரிமலை பல்வளஞ்சேர் மலை வளமே

6. கோடி மலைகளிலே கொழிக்கும் மலை எந்த மலை
வஞ்சி மலை நாட்டினிலே உயர்ந்த மலை எந்த மலை
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை
ஜனகாதி முனிவ ரெல்லாம் தேடி வரும் சபரிமலை

7. ஹரிஹர புத்ரா போற்றி
அன்பான குருவே போற்றி
புஷ்களை ரமணா போற்றி
எனையாள் குருவே போற்றி
கண்கண்ட நாதா போற்றி
சபரிமலை வாசா போற்றி
கஞ்சமலர்ப் பாதா போற்றி
ஐயனே போற்றி போற்றி
முந்திய சிவனார் போற்றி
மூர்க்கனும் அசுரன் போற்றி
இந்திர வரவும் போற்றி
ஈசனார் வேசம் போற்றி
பந்தடி கமலம் வெற்றி
வந்ததோர் விரதம் போற்றி
சந்ததியான மூர்த்தி தர்ம சாஸ்தாவே போற்றி போற்றி

ஓம் தேவ தேவோத்தம தேவதா ஸார்வ பௌம
அகிலாண்ட கோடி ப்ரஹ்மாண்ட நாயக
ஸ்ரீ பூர்ணா புஷ்களா ஸமேத ஸ்ரீ ஹரிஹரபுத்ர
சுவாமின்.........ஜெய விஜயீ பவ

விருத்தம்

1. ஆனைமுகத்தோன் தம்பி அருள் குமரனுக் கிளையோன்
வானவர் போற்றும் வாணி வந் தெனக்கு அருள வேனும்
சேனையில் தலைவர் போற்றும் தென் குளத்தூரிலையன்
கானக விளையாட்டெல்லாம் கருத்துடன் போற்றாய் நெஞ்சே

2. அந்தணர் முனிவர் சூழ் அற்புத சபையைப் போற்றி
மந்திரம் கையிலேந்தும் வாழ்குளத்தூரான் மீதில்
சிந்தையில் உதித்த செல்வம் செப்புமென் கவி விளங்க
கந்தனும் குருவும் வாணி கஜமுகன் காப்பதாமே

3. சாஸ்தா நமக்குண்டு தாய் போல் வருவார் இந்தத் தனி வழிக்கே
பார்த்தால் நமக்கு பயமேது மில்லை பயந்து பயந்து
ஆற்றாமல் சொல்லி அபய மிட்டோடி வரும் சுரர்தமை
கார்த்தே வரும் கடிய குன்றேறிய காவலனே

4. வாழையும் தெங்கும் வரிகை பலாவுடனே மாங்கனியும்
சோலையும் அருள் வண்டுலாவும் குளத்தூர் பதியில் சென்றால்
கங்கா நதிக்கும் ஹிமசேது மட்டுக்கும் இந்த கலியுகத்தில்
உன் காலில் அதிசயம் போல் கண்டதில்லை என்பவர்க்கு
சிங்கார வஞ்சிமலையேறி சனிவாரம் தொழுதவர்க்கு
மங்காத சர்வ பீஷ்டமும் கொடுப்பதாமே

பிரார்த்தனை

1. குளத்தூரிலேயிருந்து குடியிருந்து அவதரித்து
வளர்த்ததொரு தாய் பெற்றெடுத்த மாதா உமக்கினையோ
களத்தூரில் பதின்குலக் கன்னியர்கள் தந்தசெல்வம்
குளத்தூரிலே அய்யனென்றால் குற்றமொன்றும் வாராதே

2. மாணிக்க மாலை மகிழ்மாலை பூமாலை
காணிக்கைக் கொண்டு வந்து காண்பார் தினந்தோறும்
ஆனிப் பொன் மார்பன் அழகன் குளத்தூரானை
பேனித் தொழாய் நெஞ்சே பிழைகளொன்றும் வராதே.

3. கற்சரடு பொற்பதக்கம் கனத்த முத்துச் சுவடியுமாய்
மெய் கனியாய் அணிந்திருக்கும் விரகா உன் திருமேனி
தக்க மிட்டு வரும் பேயைத் தடியெடுத்து தான் விரட்டும்
மிக்க நல்ல குளத்தூரான் வெள்ளைக் கல்லாதிபனே

4. தூங்கும் செவி யொதிக்கி துதிக்கை யொரு கொம்பில்
நீங்காத மலைபோல் நிற்கு மந்தக் குஞ்சரங்காள்
பூங்காவிலே இருந்து புண்ணியரைத்தான் நினைத்தால்
பாங்கான மத கரிகள் பனிமலை போல் அகன்றிடுமே

5. பாரச் சுமடெடுத்துப் பதினெட்டாம் குன்றேறி
ஏத்தமெல்லாம் ஏறி இளைத்து வரும் அந்நேரம்
வேர்த்த தெல்லாம் பன்னீராய் வென்சாமரை வீச
கதித்த வல்லி குளத்தூரான் காந்தமலை காவலனே

6. செண்டார்ந்த கையன் எங்கள் ஸ்ரீமான் எங்கள் பிரான்
வீரமணிகண்டா அநுதினமும் காத்தருள வேணுமையா
தந்தாமரை வளரும் தவமுனிவர் வான வரும்
கொண்டாடும் தென்னிசை கூடபர சாஸ்தாவே

7. சீருடன் புவியில் செழுத்தவே மன்னரைக் காக்க
வீருடன் புலியைத் தாங்கி விண்ணவர் மேய்க்க வந்தாய்
ஆவினில் பெரியோனாகி ஆரியங்காவையா னென்றும்
பூர்ணமாக ஐயன் பொற்பாதம் போற்றுவோம்.

விடுதிகள்

1. நாள் கேட்டு முகூர்த்தமிட்டு நல்ல நாள் என்று சொல்லி
வீட்டைவிட்டு சுமடெடுத்துச் சிவசைலம் வீதியிலே
கூட்டமெல்லாம் கூடி குளத்தூரிலே நினைவாய்
தாஷ்டிகமாய் வழிநடத்தும் தர்மகுளத்தூரில் ஐயா

2. உற்றார் இருக்க உடன்பிறப்புத் தானிருக்கப்
பெற்றோரிருக்கப் புறப்பட்டேன் உன் காவல்
என் தந்தை மனமுருக சோதரன் கண்ணீர் பெருக
பந்து ஜன முருக பெற்ற மக்கள் தானுருக.

3. சொந்த மனையாள் தூண்டில் மச்சம் போல் துடிதுடிக்க
இந்த பிறவிகள் தீர்க்க இறக்க மில்லையோ சுவாமி
வியர்த்த தெல்லாம் பனிநீராம் வெண் சாமரம் வீச
காத்தவனே குளத்தூரான் சிவ காந்தமலை காவலனே

4. கல்லான மலையேறித் தடலேறிக் குன்றேறி
இல்லாமையால் அல்லவோ இந்த மலை ஏறுவதும்
வல்லான பக்ஷிகளும் பாண்டி பரதேசிக்களைக்
கொல்லாமல் காத்தருள் வாய் குளத்தூரில் ஐயனே

5. மேகம் இருண்டு வர விடுதிகளும் காணாமல்
காகம் போல் உமதடியேன் கலங்குவது கானீரோ
ஆக்கம் மிகத் தளர்ந்தேன் ஐயனே தென் குளத்தூர்
நாகம் அணிந்தவனே நல்லமலை சாஸ்தாவே

6. எதிர்காற்றும் மழையும் எடுத்தடி வைக்கவொட்டாமல்
பெரியாற்றின் கரையினிலே பரதவிக்கும் அந்நேரம்
அலையரமல் தோணிக் கட்டி அக்கரைக்கே கடத்திவிடும்
பலம் உமக்கு சாஸ்தாவே பரதேசிக் காவலனே

7. நம்பி வந்தேன் சன்னதியில் நன்மை தர வேண்டுமென்று
பாடி வந்தேன் உன் பெயரைப் பாக்கிய மிக தந்தருள்வாய்
பெற்றோரை போல் என் பிழை பொருத்து ஆதரிப்பாய்
விஸ்தார மணிமார்பா வெள்ளைக்கல் ஆதிபனே

8. உன்னை நம்பும் எங்களுக்கு ஒரு வினையும் வாராதுதென்று
நினைத்திருந்து காலமெல்லாம் ஏங்குதையா என் மனம்
ஓங்கி எனது மனம் ஒன்று பத்து நூராகும்
சங்கைக் கொண்டு திரு வாரியங் காவுவை யாவே

9. கச்சை கட்டி முண்டுத்தி மூங்கில் தடி பிடித்து
பதினெட்டாம் குன்றேறிப் பார்க்க வந்தேன் உன் மகிமை
பாரசுமடெடுத்து பதினெட்டாம் குன்றேறி
ஏற்றமெல்லாம் கடந்து இளைப்பாறும் அந்நேரம்

10. பொல்லாத மழைப் பெய்ய புனலாறு பெருகிவர
கல்லானை மிதந்துவர காட்டெருமை மிரண்டோட
மெய்யாகும் கன்னீயர்கள் மேதினியிற் குரவையிட
ஐயன் திருவுள்ளம் திரு ஆரியங்காவு ஐயாவே

11. ஐயா உன் சன்னதியில் நம்பிவந்தேன் ஆண்டவனே
அக்ஷணமே வந்துதவும் சபரிமலை சாஸ்தாவே
ஆதியந்தம் இல்லாத அற்புதனே குரு நமக்கு
வேத ஒளியாம் சபரி மெய்யனும் ஆண்டவனே

ஐயப்பன் பிரார்த்தனை விருத்தம்

1. கலியுகம் தன்னிலே கண்கண்ட கடவுளென்று
காத்திருக்கிறோம் ஐயா
ஏழையான அடியேனுக்கு நின் திருப்பாத தரிசனம்
தந்தருள தாமதம் ஏனோ
அனாத ரக்ஷகன் என்று அனவரதமும் போற்றிடும்
அடியார்க்கு நீர் அருள் ஞான
மெய்த் தருவாய் வந்து நல்லாதரவு அளித்து ஆட்கொண்டருள்வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச்ரமஸ்தான மெய் ஞான குருவே

2. பரதேசியான அடியேன் அனுதினமும் வேண்டுவது
பாடினால் நின் சரண கீதங்கள் பாட வேண்டும்
உடுத்தால் உன் நீல ஆடை உடுக்க வேண்டும்
அணிந்தால் நின் துளஸி மாலை அணியவேண்டும்
சுமந்தால் நான் இரு முடி சுமக்க வேண்டும்
ஏறினால் நின் சபரிகிரி ஏற வேண்டும்
இரு முடிச் சுமையதும் சுமக்க முடியாமல் நான்
சரிமலை ஏறி வருந்துகின்ற சமயம்
தயவுடன் வந்தெனக்கு பாத பலமும் தந்து
திருவடி தந்தருள் வாய்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரமஸ்தான
மெய் ஞான குருவே

தாயாகி தந்தையுமாய்

தாயாகி தந்தையுமாய் நீயும் வளர்த்தாய்
தரணியிலே உன்னைப் போல தெய்வம் இல்லை ஐயப்பா
மானிடரை வாழவைக்கும் தெய்வமன்றோ நீயே
மனதை யெல்லாம் அடங்க வைக்கும் சக்தியன்றோ நீயே
இச்சையெல்லாம வென்றுவிட்ட வீரனன்றோ
இம்மையிலும் மறுமையிலும் குருவுமய்யா
ஹரிஹரனின் மைந்தனாக கலியுகத்தில் பிறந்தாய்
பந்தளத்து பாலகனாய் பாரினில் நீ வளர்ந்தாய்
அரக்கிதனை வதம் செய்து சபரிமலை மீது
அமர்ந்து என்னை ரக்ஷிக்கும் ஐயப்பா தெய்வமே

சபரி பஞ்சங்கம்

கருணாகரக் கடவுள் ஹரனாரிடம் சூர்ப்பகா ஸுரன்
தவமிருந்து கை வைத்த பேர் சிரஸுதுய்ய
நீறாகவே கருதினான் ஒரு வரத்தை
பரம குருவாம் ஹரன் அருளினோ மென் ரவுடன் அவன்
சிரஸினில் கரம் வைத்திடச் சென்றடுத்தான்
வள்ளல் ஐவரளியில் ஒளிந்தா ரென்று மாலறிந்து ஓடிவந்து
தருண மோஹினியாய் அஸுரனை வெண்ணீறாக்கிச்
சம்புவை அணைந்து பெற்ற ஸந்ததிப் பொருளாக வந்த
என் கண்மணியே! ஸங்கடம் தீரும் ஐயா!
சரணம் அய்யப்பா என்று உருகும் அன்பர்க்கு நீர்
ஸகல ஸெள பாக்கியமும் தந்து உதவும்
தவயோக சித்தாந்த சபரி பீடாச் ரம ஸ்தான
மெய் ஞான குருவே!

பால் குருநாதர்

1. பால் குருநாதா சரணமய்யப்பா
எங்கள் குருநாதனே சரணமய்யப்பா
நல்ல வழி தந்திடுவார் சரணமய்யப்பா - எங்கள்
நடமாடும் தெய்வமே சரணமய்யப்பா (பால்)

2. திருமந்திர நகர மதில் மகிழும் பாலன் - ஈசன்
திருவருளை பெற்றவராம் சரணமய்யப்பா
அன்புள்ளம் கொண்டவராம் சரணமய்யப்பா - எங்களை
ஆதரிக்கும் தெய்வமாம் சரணமய்யப்பா (பால்)

3. இல்லை இல்லை இல்லை என்றும் ஏங்கும் மாந்தரின்
உள்ளம் தனைக் குளிர வைப்பார் சரணமய்யப்பா
பிணியகல வழி வகுக்கும் என் குருநாதன் - ஞான
பணிபுரிய அருள் புரிவார் சரணமய்யப்பா (பால்)

4. வினை யறுத்து பவமழிக்கும் என் குருநாதன்
நம்மைத் துணை இருந்து காத்திடுவார் சரணமய்யப்பா
பக்தி முக்தி தாயகனே சரணமய்யா - நம்
பக்தர்களை காத்திடுவார் சரணமய்யப்பா (பால்)

ஓம் நமோ ஐயப்ப தேவா

1. ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ நமோ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ ஐயப்ப தேவ
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ (ஓம்)

2. எனது நான் எனச் செருக்கி மமதை உற்றலைந்த என்னை
இனியனாக்கி இணைய வைத்த இன்ப மூர்த்தியே
ஒருகனத்துள் என துளத்தை உருக வைத்த எனது நாமம்
ஓம் நமோ ஐயப்ப தேவ ஓம் நமோ நமோ (ஓம்)

3. அரியுமான சிவனுமான ஆண்டவனின் மைந்தனாகி
அல்ல லெல்லாம் தீர்க்க வந்த அன்பு தெய்வமே
அன்பினாலே ஆளவந்த அன்பர்களைக் காத்திடவே
அவதரித்து பூவுலகம் வந்த சாமியே (ஓம்)

4. ஆதியோடு அந்தமாகி ஆரியங்காவு பாலனாகி
ஆதிசக்தி மகனுமாக வந்த மூர்த்தியே
ஆண்டவனின் பிள்ளையான எங்களையே காத்திடவே
ஆவலோடு வந்த எங்கள் காந்த ஜோதியே (ஓம்)

5. எரிமேலி சாஸ்தாவாகி எல்லோர்க்கும் தேவனாகி
எங்கள் குல தெய்வமாக வந்த ஜோதியே
எந்தன் துயர் போக்கி நீயும் எங்களைக் காத்திடவே
ஏகாந்த மூர்த்தியாக வந்த தெய்வமே

6. பதினெட்டாம் படியனாகி பம்பைநதி வாசனாகி
பக்தர்களைக் காக்க வந்த எங்கள் ஜோதியே
பக்தியுடன் பூஜை செய்து சுத்தமான மனதுடனே
நித்தமும் காத்தருள்வாய் நீதிதேவனே

கற்பூர ஹாரத்தி ஹீதம்

பாஹி பாஹி மணிகண்டா
மாமலைவாசா மணிகண்டா
வன்புலி வாகனா மணிகண்டா
வானவர் பூஜித மணிகண்டா
மகிஷி மர்த்தனா மணிகண்டா
மோகன நாசனா மணிகண்டா
மோகினி சுதனே மணிகண்டா
மத கஜ வாகனா மணிகண்டா
மார்க்க பந்தோ மணிகண்டா
சபரிகிரீஸ்வரா மணிகண்டா
சாஸ்தவ ரூபா மணிகண்டா

சுவாமியே சரணம் ஐயப்பா

மங்கள ஆரத்தி

மங்களனே மாதவனே
சங்கரனே சதாசிவனே
பாண்டியனார் பாலகனே
காந்தமலை வாசனே

ஸ்ரீ சக்ரபீடமதில் கொலுவிற்கும் எங்கள் ஐயப்பனே

ஐயப்பனை வேண்டுதல்

1. ஓங்காரத்தின் தத்துவ ரூபனே
2. தாரகப் பிரம்மமே
3. சத்திய ரூபனே
4. பூத கண நாதனே
5. புண்ணிய மூர்த்தியே
6. அரனுர் மைந்தனே
7. பந்தளத்தரசன் மகிழ் பாலகனே
8. தேவ தேவனே
9. மணிகண்ட பொருளே
10. அசுரர் காலனே
11. அன்பின் வடிவமே
12. கருணை கண்ணனே
13. கிருபைக் கடலே
14. துன்பம் துடைப்பவனே
15. கலியுக வரதனே
16. ஐயனே மெய்யனே
17. ஸச்சி தானந்தனே
18. மோகினி சுதனே
19. சுந்தர வடிவமே
20. மெய் ஞான பொருளே

உனது திவ்ய பாதார விந்தங்களுக்கு எங்களது ஆனந்த கோடி நமஸ்காரம்.

சகல செல்வங்களும் தரும் இமையகிரி ராஜ தன்ய மாதேவனே நின்னைச் சத்தியமாய் நித்தமும் உள்ளத்தில் துதிக்கும் எழியோர்களுக்கு இரங்கி அருளி அகிலமதில் நோய்ன்மை, கல்வி, தனம், தான்யம், அழகு, புகழ், பெருமை, இளமை, அறிவு, சந்தானம், வலிவு, துணிவு, வாழ்நாள் வெற்றி ஆகும். நன்னூல் நுகர்ச்சி தொகை தரும் பதினாறும் பேரும் தந்தருளி நீ சுகானந்த வாழ் வளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலனே அநுகூலனே மங்கள வாசனே மகவு நாங்கள் தந்தை நீர் அத்தனையும் எங்களுக்கு அளிக்க வொண்ணாதோ மகிமை வளர் திரு சபரிகிரியில் வாழும் எங்கள் ஐயப்ப தெய்வமே, சரணம் சரணம் ஐயப்பா

தீப மங்கள ஜோதி நமோ நம
தூய சபரி கிரிஷா நதோ நம
பூர்ணை புஷ்கலை நாதா நமோ நம
அருள் தாராய் சுவாமி

சாந்தி சாந்தி சாந்தி

ஓம் த்ரியம்பகம் பஜா மஹே ஸுகந்தீம்
புஷ்டி வர்த்தனம்
உர் வாருக மிவ பந்தனாத் மிருத்யோர்
மூக்ஷிய மாம் ரு தாத்
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
சாந்தி சாந்தி சாந்தி ஓம்

என் நினைவிலும் ஐயப்பா

1. என் நினைவிலும் ஐயப்பா என் கனவிலும் ஐயப்பா-எங்கள்
நீலகண்டன் கண்ணில் வந்தாய் நிர்மலனே ஐயப்பா

2. மாயன் அன்று மோகினியாய் மகிழ்ந்தனைத்த ஐயப்பா-எனத்
தூயவனே துணைவனே என் தோழனே ஐயப்பா

3. மலைமகளும் கலைமகளும் அனைத்தெடுத்த ஐயப்பா....பல
கலைகளிலே விளையாடும் கண்மணியே ஐயப்பா

4. சபரிமலை தெய்வமே என் சாஸ்தாவே ஐயப்பா-நீ
அபயமளித்துக் காத்திடுவாய் ஐயாவே ஐயப்பா

5. நித்திய வஸ்துவாகி எங்கும் நிறைந்தவனே ஐயப்பா-உன்
தத்துவ காட்சி காணத் தனித்து வந்தேன் ஐயப்பா

6. கலியுகத்தின் கடவுள் என்றே காண வந்தேன் ஐயப்பா-உன்
கலிகள் நீங்கக் கண்திறந்தே காத்தருள்வாய் ஐயப்பா

7. பாண்டிபதி நாயகனே பாலகனே ஐயப்பா-உன்னை
வேண்டி நின்றே வரம் கேட்பேன் வேதியனே ஐயப்பா

8. மன்னவர்க்கு மன்னவனே மக பதியே ஐயப்பா-இந்த
மானிலத்தை ஆள்பவனே மறையோனே ஐயப்பா

9. பொன்னுரங்க பூபதியே பூசுரனே ஐயப்பா-என்றும்
எண்ணுள்ளே விளையாடி இன்ப மருள் ஐயப்பா

10. வண்ண வண்ணக்களஞ்சியமே வடிவழகா ஐயப்பா-என்
எண்ணமதில் கலந்திருப்பாய் என் துரையே ஐயப்பா

11. காவியத்தில் கலந்து நின்றாய் காரணனே ஐயப்பா-உன்னை
ஓவியத்தில் அமர்த்தி என்றும் ஓதுகிறேன் ஐயப்பா

12. நீரணிந்த மேனியனே நிறைமதியே ஐயப்பா-நல்ல
நீல வண்ணக் கட்டழகா நீ வருவாய் ஐயப்பா

13. ஆடுகின்ற அன்பருள்ளே ஆடுகிறாய் ஐயப்பா-உன்னைப்
பாடுகின்ற பண்களிலே பரவி நிற்பாய் ஐயப்பா

14. ஜாதிபேதம் அறியாத சாஸ்தாவே ஐயப்பா- எங்கும்
நீதியிலே நிறைவு காண நீ வருவாய் ஐயப்பா

15. கற்பூர ஜோதி கரைந்து நின்றாய் ஐயப்பா-உன்
பொற்பாதம் காண வந்தேன் பூரணனே ஐயப்பா

16. காடுமலைகள் ஆறுதாண்டி காணவந்தேன் ஐயப்பா-என்
ஒடுமனதை உள்ளடக்கி உணர வைப்பாய் ஐயப்பா

17. மலைகளிலே பல மலைகள் தாண்டி மகிழ்ந்து வந்தேன் ஐயப்பா
மகரஜோதி காணவந்தேன் மணிகண்டனே ஐயப்பா (நான்)

18. பம்பா நதியில் நீராடிப்பணிந்து வந்தேன் ஐயப்பா-ஸ்ரீ
ஜெகதாம்பாள் மகிழும் தேவனே என் ஐயப்பா

19. நீரணிந்துன் நினைவில் வந்தேன் நிதிபதியே ஐயப்பா-இப்
பாரினிலே பாடியாடிப் பார்க்க வந்தேன் ஐயப்பா

20. பனிமலைமேல் பவனிவரும் பரம்பொருளே ஐயப்பா-இப்
பதினெட்டாம் படியேறிப் பணிந்து வந்தேன் ஐயப்பா

21. கோழை எந்தன் குணமறிந்து குறைத் தீர்ப்பாய் ஐயப்பா-நான்
ஏழை என்று அறியாயோ ஏகனே என் ஐயப்பா

22. யானை புலிக் கூட்டம் கண்டால் சரணம் என்பேன் ஐயப்பா-நீ
எதிரில் வந்து காத்தருள்வாய் என் ஐயனே ஐயப்பா

23. தாய் தந்தையும் நீயல்லவோ தாரகனே-ஐயப்பா இதை
ஆய்ந்தறிந்தே அண்டி வந்தேன் ஆதரிப்பாய் ஐயப்பா

24. குருவெனக் கொண்டாடி வந்தேன் குணமணியே ஐயப்பா-என்
குலதெய்வம் நீயல்லவோ குணநிதியே ஐயப்பா

25. கருணையுள்ள கற்பகமே கலிவரதா ஐயப்பா-நல்ல
களைத்து வரும் நடுவழியில் கை கொடுப்பாய் ஐயப்பா

26. வருந்துகின்றேன் வாடுகின்றேன் வாழ்வளிப்பாய் ஐயப்பா-நல்ல
மருந்தாகி நீ வருவாய் மலையரசே ஐயப்பா

27. வருமை நீக்கி வரந்தருவாய் வரதனே என் ஐயப்பா-என்
சிறுமை கண்டு இறங்காயோ சீலனே என் ஐயப்பா

28. அடியார்க்கு எளியவனே ஆனந்தனே ஐயப்பா-உன்
அடிபணிந்தேன் ஆதரிப்பாய் ஐயாவே ஐயப்பா

29. அன்னதானம் செய்திடவே அருள் புரிவாய் ஐயப்பா-என்
கருமவினை தீர்த்தருள்வாய் கலிவரதா ஐயப்பா

30. வாழி சொல்லி வாழ்த்தி வந்தேன் வரம் அளிப்பாய் ஐயப்பா-என்
ஊழ்வினையைத் தீர்த்தருள்வாய் உத்தமனே ஐயப்பா.

காக்க ... காக்க ...

சுவாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா

எப்போதும் என் தலை நின் தாழ் பணிந்திட தப்பாது காக்க வேண்டும்
கொட்டிக் கொடுக்கின்ற திருநீறு அணிந்திட நெற்றியை காக்க வேண்டும்
தத்துவம் காட்டிடும் முத்திரை திருக்கரம் நிற்புருவம் காக்க வேண்டும்
சத்திய தயாநிதி அன்னதானப் பிரபு சபரிமாமலை சுவாமியே

விழிகளால் நின் பேரழகினைப் பருகிட விழிகளை காக்க வேண்டும்
இமை சற்றும் அசையாமல் இருக்கின்ற பாலனே இமைகளை காக்க வேண்டும்
மொழிகளால் நின் திருப்புகழினைப் பாடிட இதழ்களைக் காக்க வேண்டும்
அழியாத செல்வமே அகலாத தெய்வமே அழுதமலையின் அதிபனே

நந்தா விளக்காக நெஞ்சிலே நின்றவா நாசியைக் காக்க வேண்டும்
நாவுள்ள வரையிலும் நடுநிலை தவறாமல் வார்த்தையை காக்க வேண்டும்
செந்தாமரைக்கரம் செந்தேந்தி அமர்ந்தவா செவிகளை காக்க வேண்டும்
சித்துக்கள் விளையாடும் அற்புதக் கற்பகம் அச்சங்கோவில் அரசே

முத்துச் சிரிப்பினால் பித்தாக்கும் மூர்த்தியை பற்களை காக்க வேண்டும்
தப்பித் தவறி நான் சொல் பிதறி பேசாமல் சொற்களை காக்க வேண்டும்
கட்டுக் கடங்காத கட்டழகு காளையே கன்னங்கள் காக்க வேண்டும்
எட்டுத் திசைகளிலும் கொடி கட்டி ஆள்கின்ற ஏகாந்த தீப ஒளியே

பின்னாலி ருந்து தெவரும் பிடித்தெனை தள்ளாமல் பிடரியை காக்க வேண்டும்
என்பாட்டு தேனாக எங்கும் முழங்கிட கழுத்தினை காக்க வேண்டும்
பொன்னாரம் மணியாரம் நின்னுருவம் அசைந்திட நெஞ்சினை காக்க வேண்டும்
பொன்னம்பலம் தன்னில் என்னாளும் அணைக்கின்ற பூங்காவனத் தேவனே

அன்னபூரணி எந்தன் இல்லத்திலே தங்கி அருசுவைகள் பெருக வேண்டும்
அரை வயிறு கால் வயிறு எனும் குறைகள் இல்லாது நிறைவயிறு காக்க வேண்டும்
வன்புலி வாகனன் என் தோளில் வழுவேற்றி தோள்களை காக்க வேண்டும்
வாழ்வெல்லாம் சுவாமிய சரணமென ஓதுவேன் வாபரின் தோழனே

வணங்கத் தவறாத வள்ளலே ஐயனே முழங்கைகள் காக்க வேண்டும்
வருக என வரவேற்க அருளாசி தந்து நீ முன்கையை காக்க வேண்டும்
முழு முதற்கடவுளே இருமுடிப்பிரியனே முதுகினை காக்க வேண்டும்
முருகனின் தம்பியே அரிகரன் புதல்வனே கலியுக கடவுள் நீயே

உள்ளம் கலங்காது ஊருக்கு உதவிட உள்ளங்கை காக்க வேண்டும்
வில்லாளி வீரனே நெய்விளக்கு ஏற்றிடும் விரல்களை காக்க வேண்டும்
நல்லதோர் இதயத்தை தந்து நான் நலமுற நகங்களை காக்க வேண்டும்
நாதமே, வேதமே, ஞானமே, மோனமே காந்தமலை ஜோதி நீயே

இடையிலே என் பெயரில் பழிஏதும் வாராமல் இடையினை காக்க வேண்டும்
துவண்டு நான் வீழாமல் துணிவுடன் வாழ்ந்திட துடைகளை காக்க வேண்டும்
அறியாது நான்செய்த பிழைகளை மன்னித்து குறிகளை காக்க வேண்டும்
கருணையின் வடிவமே கற்பூர ஜோதியே கரிமலை ஆளும் சீலா

கீழோர்கள் தயவுக்கு மண்டி போடாமல் என் முழங்கால்கள் காக்க வேண்டும்
காட்டுவழி சென்றாலும் நின் சங்கு சக்கரம் கணுக்கால்கள் காக்க வேண்டும்
நீ வாழும் மலையேற இறுதிவரை தளராது பாதங்கள் காக்க வேண்டும்
நிழலாக குளிர்தந்து நினைத்ததை கொடுத்திடும் சமரச குருநாதனே

காலையிலும் மாலையிலும் அந்தி சந்தி வேளையிலும் கால்விரல்கள் காக்க வேண்டும்
காலன் எனைப்பாராமல் போவதற்கு வழி சொல்லி கவலைகள் தீர்க்க வேண்டும்
யாருக்கும் குனியாமல் ஐயப்பா எனும் நாமம் அச்சத்தை போக்க வேண்டும்
சீர்மேவு சபரிமலை வீரமணிகண்டனே நீதான் என் கவசமய்யா...எனைக் காக்கும் கவசமய்யா..

சுவாமியே சரணம் ஐயப்பா
சபரிகிரி வாசனே சரணம் ஐயப்பா
சரணம் ... சரணம்.... ஐயப்பா

பஜனை பாடல்கள்

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச

ஜெய்கணேச ஜெய்கணேச ஜெய்கணேச பாஹிமாம்
ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ஸ்ரீ கணேச ரக்ஷ்மாம்

சரவணபவ சரவணபவ சரவணபவ பாஹிமாம்
சுப்ரமண்ய சுப்ரமண்ய சுப்ரமண்ய ரக்ஷ்மாம்

வேல்முருகா வேல்முருகா வேல்முருகா பாஹிமாம்
வேலாயுதா வேலாயுதா வேலாயுதா ரக்ஷ்மாம்

கலாவல்லி கலாவல்லி கலாவல்லி பாஹிமாம்
கலைவாணி கலைவாணி கலைவாணி ரக்ஷ்மாம்

ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி ஜெயசரஸ்வதி பாஹிமாம்
ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ஸ்ரீ சரஸ்வதி ரக்ஷ்மாம்

மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி மஹாலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ஸ்ரீ தேவி ரக்ஷ்மாம்

ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி ஜெயலெக்ஷிமி பாஹிமாம்
ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ஸ்ரீ லெக்ஷிமி ரக்ஷ்மாம்

பராசக்தி பராசக்தி பராசக்தி பாஹிமாம்
மஹாசக்தி மஹாசக்தி மஹாசக்தி ரக்ஷ்மாம்

ஓம் சிவாய ஓம் சிவாய ஓம் சிவாய பாஹிமாம்
ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ஸ்ரீ சிவாய ரக்ஷ்மாம்

சம்புகுமார சம்புகுமார சம்புகுமார பாஹிமாம்
சபரிகிரீச சபரிகிரீச சபரிகிரீச ரக்ஷ்மாம்

வெங்கடேச வெங்கடேச வெங்கடேச பாஹிமாம்
ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ஸ்ரீ நிவாசா ரக்ஷ்மாம்

ஜெயராம ஜெயராம ஜெயராம பாஹிமாம்
ஸ்ரீ ராம ஸ்ரீராம ஸ்ரீராம ரக்ஷ்மாம்

ஆஞ்சனேய ஆஞ்சனேய ஆஞ்சனேய பாஹிமாம்
அனுமந்த அனுமந்த அனுமந்த ரக்ஷ்மாம்

கணேசா சரணம்

1. கணேசா சரணம் சரணம் கணேசா
கணேசா சரணம் சரணம் கணேசா (கணேசா)

2. கதியெனக் கருள்வாய் சரணம் கணேசா
கருணையின் வடிவே சரணம் கணேசா (கணேசா)

3. சங்கடம் தீர்ப்பாய் சரணம் கணேசா
சண்முக சோதரா சரணம் கணேசா (கணேசா)

4. சக்தியின் மைந்தா சரணம் கணேசா
சாஸ்தா சோதரா சரணம் கணேசா (கணேசா)

5. முதல்வனும் நீயே சரணம் கணேசா
முனிதொழும் தேவா சரணம் கணேசா (கணேசா)

6. அகந்தை அழிந்திடும் சரணம் கணேசா
அன்பில் உறைந்திடும் சரணம் கணேசா (கணேசா)

7. கரிமுகன் நீயே சரணம் கணேசா
கதியெனத் தொழுவோம் சரணம் கணேசா (கணேசா)

8. மூஷிக வாகனா சரணம் கணேசா
மோதக ஹஸ்தா சரணம் கணேசா (கணேசா)

9. பார்வதி பாலா சரணம் கணேசா
பாகவதப் பிரியா சரணம் கணேசா (கணேசா)

பிள்ளையார் துதி

1. பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்
பிள்ளையார் பிள்ளையார் பெருமை வாய்ந்த பிள்ளையார்

2. ஆற்றங்கரை மீதிலே அரசமரத்து நிழலிலே
வீற்றிருக்கும் பிள்ளையார் வினைகள் தீர்க்கும் பிள்ளையார்

3. ஆனைமுகம் கொண்டவர் ஐந்து கரங்கள் உடையவர்
பானை வயிறு படைத்தவர் பக்தர் குறைத்தீர்த்தவர்

4. மஞ்சனிலே செய்யினும் மண்ணனாலே செய்யினும்
ஐந்தெழுத்து மந்திரத்தை நெஞ்சில் ஆழ்த்தும் பிள்ளையார்

5. ஆறுமுக வேலனுக்கு அண்ணனான பிள்ளையார்
நேரும் துன்பம் யாவையும் நீக்கி வைக்கும் பிள்ளையார்

6. அவல் பொரிக்கடலையும் அரிசிக் கொழுக்கட்டையும்
கவலை யின்றித் திண்ணுவார் கஷ்டங்களை போக்குவார்

7. கலியுகத்து விந்தையைக் காணவேண்டி அனுதினம்
எலியின் மீது ஏறியே இஷ்டம்போல் சுற்றுவார்.

அரிஹரோ ஹரா சுவாமி

அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா
அர ஹரோ ஹரா சுவாமி அரஹரோஹரா

1. திருப்பரங் கிரி தீரனுக்கு அரஹரோஹரா
தெய்வயானை மணாளனுக்கு அரஹரோஹரா
செந்தில் வளர் கந்தனுக்கு அரஹரோஹரா
செஞ்சுடர் வேல் வேந்தனுக்கு அரஹரோஹரா

2. பழனிமலை வேலனுக்கு அரஹரோஹரா
பாலா பிஷேகனுக்கு அரஹரோஹரா
சுவாமிமலை நாதனுக்கு அரஹரோஹரா
சுப்ரமண்ய மாணவர்க்கு அரஹரோஹரா

3. தணிகைமலை செல்வனுக்கு அரஹரோஹரா
தனித்து நின்ற குமரனுக்கு அரஹரோஹரா
சோலைமலை முருகனுக்கு அரஹரோஹரா
சொகுசுக்கார வேலனுக்கு அரஹரோஹரா

4. கந்தன் கடம்பனுக்கு அரஹரோஹரா
கதிர்காம வேலனுக்கு அரஹரோஹரா
சிக்கல் சிங்காரனுக்கு அரஹரோஹரா
சிங்கார வேலனுக்கு அரஹரோஹரா

5. எட்டுக்குடி வேலனுக்கு அரஹரோஹரா
எங்குள் குல தேவனுக்கு அரஹரோஹரா
மருதமலை மன்னனுக்கு அரஹரோஹரா
மாந்தர் தொழும் மாறனுக்கு அரஹரோஹரா

6. வெள்ளிமலை வேலனுக்கு அரஹரோஹரா
வள்ளி மணாளனுக்கு அரஹரோஹரா
அபிஷேகப் பிரியனுக்கு அரஹரோஹரா
ஆனந்த வடிவனுக்கு அரஹரோஹரா

ஐயப்பசாமி - ஆறுமுகசாமி

1. சரணம் சாமி சரணம்சாமி ஐயப்பசாமி
அரோகரா அரோகரா ஆறுமுகசாமி

2. பம்பையிலே உதித்தவராம் ஐயப்பசாமி
பொய்கையிலே உதித்தவராம் ஆறுமுகசாமி
திருமாலின் திருமகனாம் ஐயப்பசாமி
திருமாலின் மருமகனாம் ஆறுமுகசாமி

3. சபரிமலை மீதிருப்பார் ஐயப்பசாமி
பழனிமலை மீதிருப்பார் ஆறுமுகசாமி
புலிக் கொடியைக் கொண்டவராம் ஐயப்பசாமி
சேவற்கொடி அழகனையப்பா ஆறுமுகசாமி

4. ஐந்து மலைக் கதிபதியாம் ஐயப்பசாமி
ஆறு மலைக் கதிபதியாம் ஆறுமுகசாமி
வில்எடுத்து வருபவராம் ஐயப்பசாமி
வேல் எடுத்து வருபவராம் ஆறுமுகசாமி

5. காடுமலை நாடியவர் ஐயப்பசாமி
குன்றேறி நின்றவர்தான் ஆறுமுகசாமி
வாபரைத் துணைக்கொண்டார் ஐயப்பசாமி
பாகுவைத் துணைக்கொண்டார் ஆறுமுகசாமி

6. சரண கோஷ பித்தராம் ஐயப்பசாமி
அரோகர பித்தராம் ஆறுமுகசாமி
மகிஷியைக் கொன்றவராம் ஐயப்பசாமி
சூரனை வென்றவராம் ஆறுமுகசாமி

7. இன்று வரை பிரம்மச்சாமி ஐயப்பசாமி
இருதாரம் கொண்டவராம் ஆறுமுகசாமி
இருமுடி பிரியனையா ஐயப்பசாமி
காவடி பிரியனையா ஆறுமுகசாமி

8. நெய்யா அபிஷேகராம் ஐயப்பசாமி
பாலா அபிஷேகராம் ஆறுமுகசாமி
ஊமைக் கருள் புரிந்தவராம் ஐயப்பசாமி
ஒளவைக்கு உபதேசித்தவர் ஆறுமுகசாமி

9. புலியேறி வருபவராம் ஐயப்பசாமி
மயிலேறி வருபவராம் ஆறுமுகசாமி
பாணக்க பிரியராம் ஐயப்பசாமி
பஞ்சாமிர்தப் பிரியராம் ஆறுமுகசாமி

10. தை மகர கீர்த்தியவர் ஐயப்பசாமி
தை பூச மூர்த்தியவர் ஆறுமுகசாமி
அருள் வழங்கும் வள்ளலவர் ஐயப்பசாமி
அழகு தமிழ் ஆனழகர் ஆறுமுகசாமி

சமயபுரம் மாரியம்மா

1. சமயபுரத்தாளே மாரியம்மா - அம்மா
சங்கரியே எங்கள் முன்னே வாருமம்மா

2. மல்லிகைச் சரம் தொடுத்து மாலையிட்டோம் - அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலும் வைத்தோம்

3. துள்ளியே எங்கள் முன்னே வாருமம்மா - அம்மா
தூயவனே என் தாயே மாரியம்மா

4. பட்டு பீதாம்பரத்தில தாவணியும் - உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

5. எட்டு திசைகளையும் ஆண்டவனே - அம்மா
ஈஸ்வரியே என் தாயே மாரியம்மா

6. கத்தி கதறுகிறோம் கேட்கலையோ - தாயே
கல்லேதான் உன் மனமும் கரையலையோ

7. உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பில் - எங்கள்
உமையவளே தாயே மாரியம்மா

8. காலிற் சதங்கை ஒலி காதைத் துளைக்குதம்மா
பாவாடை தாவணியும் தானாக ஆடுதம்மா

9. பூவாடை வீசுதம்மா அம்மா
பூமகளே என் தாயே மாரியம்மா

தாயே சமயபுரத்தாளே!
எல்லாம் உன் அடிமையே!
எல்லாம் உன் உடமையே!
எல்லாம் உன் செயலே!

செல்லாத்தா செல்ல மாரியாத்தா

செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா - எங்கள்
சிந்தையில் வந்து அருவிநாடி நில்லாத்தா
பொன்னாத்தா உன்னைக் காணாட்டா - இந்த
கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)

தென்னை மரத்தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தென்னை மரத் தோப்பினிலே தேங்காயை பறிச்சிக்கிட்டு
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா - நாங்கள்
தேடி வந்தோம் உந்தனையே சின்னாத்தா
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
நீ இளநீரை எடுத்துக்கிட்டு எங்க குறை கேட்டுப்புட்டு
வளமான வாழ்வு கொடு மாரியாத்தா - நல்ல
வழிதனையே காட்டி விடு மாரியாத்தா (செல்)

பசும்பாலை கறந்துகிட்டு கறந்த பாலை எடுத்து கிட்டு
புற்றினிலே ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நாங்கள் பக்தியுடன் ஊற்ற வந்தோம் மாரியாத்தா
நீ பாம்பாக மாறி நீ பாம்பாக மாறி அதை
பாங்காக குடித்து விட்டு தானாக ஆடிவா நீ மாரியாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகத்தில்
எடுத்துப் பாடாட்டா - இந்த ஜென்மம் எடுத்து
என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா (செல்)
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா - எங்கள்
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா

சன்னதியில் கட்டுங்கட்டி

1. சன்னதியில் கட்டுங்கட்டி தன்னே னானான - நாங்க
சபரிமலை பயணமுங்க தில்லேலே லேலோ

2. கார்த்திகையில் மாலைப்போட்டு தன்னே னானான - நாங்க
கடும் பயணம் போறோமுங்க தில்லேலே லேலோ

3. மார்கழியில் கட்டுந்தாங்கி தன்னே னானான - நாங்க
மணிகண்டனைப் பார்க்க போறோம் தில்லேலே லேலோ

4. எரிமேலியில் பெட்டை துள்ளி தன்னே னானான - நாங்க
ஏறிடுவோம் சபரிமலை தில்லேலே லேலோ

5. அழுதையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
அன்னதானம் மிட்டிடுவோம் தில்லேலே லேலோ

6. பம்பையிலே ஸ்நானம் செய்து தன்னே னானான - நாங்க
சக்தி பூஜை கொண்டாடுவோம் தில்லேலே லேலோ

7. ஐந்து மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
ஐயப்பனை காணப் போறோம் தில்லேலே லேலோ

8. மலையாம் மலை கடந்து சென்று தன்னே னானான - நாங்க
மகர ஜோதி காணப் போறோம் தில்லேலே லேலோ

9. பதினெட்டாம் படியேறி தன்னே னானான - நாங்க
பாவங்களைத் தீர்க்க போறோம் தில்லேலே லேலோ

தள்ளாடித் தள்ளாடி

தள்ளாடித் தள்ளாடி நடை நடந்து - நாங்க
சபரிமலை நோக்கி வந்தோமய்யா (தள்ளாடி)

1. கார்த்திகை நல்ல நாளில் மாலையும் போட்டுகிட்டு
காலையும் மாலையும் சரணங்கள் சொல்லிகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே
சரணங்கள் சொல்லிக் கொண்டு வந்தோமையா
சபரிமலை நோக்கி வந்தோமையா (தள்ளாடி)

2. இருமுடியைக் கட்டிகிட்டு இன்பமாக பாடிகிட்டு
ஈசன் மகனெ உந்தன் இருப்பிடத்தை தேடிக்கிட்டு (தள்ளாடி)

3. வேட்டைகளும் துள்ளி கிட்டு வேஷங்களும் போட்டுகிட்டு
வேடிக்கையாக நாங்கள் ஆட்டங்களும் ஆடிக்கிட்டு
சாமி திந்தகத்தோம் ஐயப்ப திந்தகத்தோம் (தள்ளாடி)

4. காணாத காட்சியெல்லாம் கண்ணாரக் கண்டுகிட்டு
காடுமலைகளெல்லாம் கால் நடையாத் தாண்டிகிட்டு
பம்பையில் குளித்து விட்டு பாபமெல்லாம் போக்கி விட்டு
பக்தரெல்லாம் கூடி நின்று பஜனைகள் பாடிக்கிட்டு (தள்ளாடி)

5. நீலிமலை ஏற்றத்திலே நின்று நின்று ஏறிக்கிட்டு
நெஞ்சம் உருகி உன்னை நினைச்சுமே பார்த்துகிட்டு
சாமியே ஐயப்போ ஐயப்போ சாமியே (தள்ளாடி)

6. படியேறி போகும் போது பாங்காகக்காய் உடைத்து
பாலனான உந்தனையே பார்த்து சொக்கிகிட்டு
நெய்யிலே குளிக்கும் போது நேரிலேயே பார்த்து கிட்டு
ஐயா சரணம் என்று அலறியடிச்சுக் கிட்டு (தள்ளாடி)

அல்லி மலர் வாசமது

1. அல்லி மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஹரி ஹர புத்திரனின் மேலே மணக்குது

2. அத்தர் புனுகு வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ஐயப்ப சுவாமியின் மேலே மணக்குது

3. மல்லிகை பூ மரிக்கொழுந்து எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மணிகண்ட சுவாமியின் மேலே மணக்குது

4. முல்லை மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
மோகன பாலனின் மேலே மணக்குது

5. ரோஜா மலர் வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
ராஜாதி ராஜனவன் மேலே மணக்குது

6. காட்டுமல்லி நாட்டுமல்லி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
கருணாகர மூர்த்தியின் மேலே மணக்குது

7. பரிமள சாம் பிராணி எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
எரிமேலி சாஸ்தாவின் மேலே மணக்குது

8. கற்பூர வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
காந்தமலை வாசனவன் மேலே மணக்குது

9. சந்தன வாசமது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
சபரி கிரி மலையின் மேலே மணக்குது

10. குங்குமப் பூ ஜவ்வாது எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
குளத்துப் புழை பாலகனின் மேலே மணக்குது

11. பன்னீரும் குல் கந்தும் எங்கே மணக்குது
அது எங்கே எங்கே மணக்குது
பந்தள செல்வனவன் மேலே மணக்குது

12. மகர மாதம் ஜோதியது எங்கே தெரியுது
அது எங்கே எங்கே தெரியுது
கரந்தமலை உச்சியின் மேலே தெரியுது

13. மஞ்ச பொடி மகிமையது எங்கே தெரியுது
அங்கே எங்கே எங்கே தெரியுது
மஞ்ச மாதா தேவியவள் மேலே தெரியுது

14. விபூதி அபி÷க்ஷகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
வீரமணிகண்டன் மேலே நடக்குது

15. நெய்யா அபிஷேகமது எங்கே நடக்குது
அது எங்கே எங்கே நடக்குது
சாஸ்தாவாம் ஐயப்பனின் மேலே நடக்குது

16. சரண கோஷ சப்தமது எங்கே ஒலிக்குது
அது எங்கே எங்கே ஒலிக்குது
சுவாமியாம் ஐயப்பன் மலையில் ஒலிக்குது.

சாமி சாமி ஐயப்பா

1. சாமி சாமி ஐயப்பா சபரிமலை ஐயப்பா
சபரிமலை ஐயப்பா சாஸ்தாவே ஐயப்பா

2. அச்சங்கோயில் அரசனே சாமி சாமி ஐயப்பா
ஆதரிக்க வேண்டுமையா சபரிமலை ஐயப்பா

3. குளத்துப்புழை பாலகரே சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

4. கணபதியின் தம்பியே சாமி சாமி ஐயப்பா
கவலைகளைப் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

5. வாபரின் கோட்டை ஐயாசாமி சாமி ஐயப்பா
வரங்களையே கொடுக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

6. காளைகட்டி ஆஸ்ரமம் சாமி சாமி ஐயப்பா
களைப்பார வந்து நின்றோம் சபரிமலை ஐயப்பா

7. அமுதா நதியிலே சாமி சாமி ஐயப்பா
ஆனந்தமாய் குளித்து வந்தோம் சபரிமலை ஐயப்பா

8. கரிமலை உச்சியிலே சாமி சாமி ஐயப்பா
கடினமாக ஏறிவந்தோம் சபரிமலை ஐயப்பா

9. பம்பா நதியிலே சாமி சாமி ஐயப்பா
பாவமெல்லாம் போக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா

10. நீலிமலை ஏற்றத்திலே சாமி சாமி ஐயப்பா
நிற்க வைத்து பார்க்கிறியே சபரிமலை ஐயப்பா

11. சரங்குத்தி வந்தடைந்தோம் சாமி சாமி ஐயப்பா
சன்னிதானம் கண்டோமே சபரிமலை ஐயப்பா

12. நெய்யப்பிஷேகத்தோடு சாமி சாமி ஐயப்பா
நேரில் காண வந்தோம் சபரிமலை ஐயப்பா

13. குற்றம் குறை எதுவானாலும் சாமி சாமி ஐயப்பா
குறைகளையே நீக்க வேண்டும் சபரிமலை ஐயப்பா.

ஓம் குருநாதா ஐயப்பன்

ஓம் ஓம் ஐயப்பா
ஓம் குரு நாதா ஐயப்பா (ஓம்)

அரனார் பாலா ஐயப்பா
அம்பிகை பாலா ஐயப்பா (ஓம்)

ஆபத் பாந்தவா ஐயப்பா
ஆதி பரா பரா ஐயப்பா (ஓம்)

இருமுடிப் பிரியா ஐயப்பா
இரக்க மிகுந்தவா ஐயப்பா (ஓம்)

ஈசன் மகனே ஐயப்பா
ஈஸ்வரி மைந்தா ஐயப்பா (ஓம்)

உமையாள் பாலா ஐயப்பா
உறுதுணை நீயே ஐயப்பா (ஓம்)

ஊக்கம் தருபவர் ஐயப்பா
ஊழ்வினை அறுப்பவர் ஐயப்பா (ஓம்)

எங்கும் நிறைந்தவர் ஐயப்பா
எங்கள் நாயகா ஐயப்பா (ஓம்)

பம்பையின் பாலா ஐயப்பா
பந்தள வேந்தா ஐயப்பா (ஓம்)

வன்புலி வாகனா ஐயப்பா
வனத்திலிருப்பவர் ஐயப்பா (ஓம்)

சபரிகிரீசா ஐயப்பா
சாஸ்வதரூபா ஐயப்பா (ஓம்)

பதினெட்டாம் படிகளே சரணம்

1. ஒன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

2. இரண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

3. மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

4. நான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

5. ஐந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

6. ஆறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

7. ஏழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

8. எட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

9. ஒன்பதாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

10. பத்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

11. பதினொன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

12. பன்னிரெண்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

13. பதின்மூன்றாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

14. பதினான்காம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

15. பதினைந்தாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

16. பதினாறாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

17. பதினேழாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

18. பதினெட்டாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

19. படி பதினெட்டும் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

20. படி தொட்டு வந்தனம் சரணம் பொன் ஐயப்பா
சாமி பொன் ஐயப்பா - என்
ஐயனே பொன் ஐயப்பா
சுவாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா

வழிநடைப் பாடல்

சாமியே - ஐயப்போ
ஐயப்போ - சாமியே
பள்ளிக்கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - பள்ளிக்கட்டு
கல்லும் முள்ளும் - காலுக்கு மெத்தை
காலுக்கு மெத்தை - கல்லும் முள்ளும்
நெய் அபிஷேகம் - சுவாமிக்கே
சுவாமிக்கே - நெய் அபிஷேகம்
பால அபிஷேகம் - சுவாமிக்கே
தேன் அபிஷேகம் - சுவாமிக்கே
பன்னீர் அபிஷேகம் - சுவாமிக்கே
பகவானே - பகவதியே
பகவதியே - பகவானே
குண்டும் குழியும் - கண்ணுக்கு வெளிச்சம்
கண்ணுக்கு வெளிச்சம் - குண்டும் குழியும்
ஏந்திவிடையா - தூக்கிவிடைய்யா
தூக்கிவிடைய்யா - ஏந்திவிடைய்யா
வில்லாளி வீரனே - வீரமணிகண்டனே
வீரமணிகண்டனே - வில்லாளி வீரனே
பாதபலம் தா - தேக பலம் தா
தேகபலம் தா - பாத பலம் தா
கற்பூர தீபம் - சுவாமிக்கே
அவிலும் மலரும் - சுவாமிக்கே
காணிப்பொன்னும் - சுவாமிக்கே
இருமுடி கட்டு - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - இருமுடி கட்டு
கற்பூரஜோதி - சுவாமிக்கே
சுவாமிமாரே - ஐயப்பமாரே
ஐயப்பமாரே - சுவாமிமாரே
ஈஸ்வரனே - ஈஸ்வரியே
ஈஸ்வரியே - ஈஸ்வரனே
ஐயப்பபாதம் - சுவாமிபாதம்
சுவாமிபாதம் - ஐயப்பபாதம்
தாங்கிவிடப்பா - ஏந்திவிடப்பா
ஏந்திவிடப்பா - தாங்கிவிடப்பா
கடினம் கடினம் - கரிமலை ஏற்றம்
கரிமலை ஏற்றம் - கடினம் கடினம்
தூக்கிவிடப்பா - ஏற்றம் கடினம்
ஏற்றம் கடினம் - தூக்கிவிடப்பா
கதலி பழமும் - சுவாமிக்கே
சுவாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
கட்டுங்கட்டி - சபரிமலைக்கு
சபரிமலைக்கு - கட்டுங்கட்டி
யாரைக்காண - சாமியைக்காண
சாமியைக் கண்டால் - மோட்சம் கிட்டும்
பேட்டை துள்ளல் - சுவாமிக்கே
பெருவழி பாதை - சுவாமிக்கே
கருடன் வருவது - சுவாமிக்கே
ஆபரண பெட்டி - சுவாமிக்கே
தேவன் மாரே - தேவி மாரே
தேவி மாரே - தேவன் மாரே
தேவனே - தேவியே
தேவியே - தேவனே
கடவுள் வணக்கம் - காலை மாலை
காலை மாலை - கடவுள் வணக்கம்
சுவாமியே - ஐயப்போ-ஐயப்போ சுவாமியே

மாலையை அவிழ்த்து விரதத்தினை முடித்துக் கொள்ளும் போது சொல்லும் மந்திரம்

அபூர்வ மசால ரோஹி
திவ்ய தரிசன காரிணே
சாஸ்த்ரு முத்ராத் மகாதேவ
தேஹிமே விரத விமோசனம்.

Thursday, November 24, 2011

வெங்கடேச பெருமாளுக்கு 162 வைரங்கள் காணிக்கை!

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் உண்டியலில், 162 வைரங்களை அடையாளம் தெரியாத பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியுள்ளார். இவற்றின் மதிப்பு 1.5 கோடி ரூபாய் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு விஜயம் செய்யும் பக்தர்கள், உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். உண்டியல் காணிக்கை மூலம், ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் வரை வருமானம் கிடைக்கிறது. இந்த ஆண்டு இதுவரை தங்கம், வெள்ளி மற்றும் பணமாக 600 கோடி ரூபாய் வரை கிடைத்துள்ளது. ஆண்டு வருமானம் ரூ.1,600 கோடியை தாண்டியுள்ளது. இந்நிலையில், அடையாளம் தெரியாத ஒரு பக்தர், விலை உயர்ந்த 162 வைரங்களை, ஒரு வெல்வெட் பையில் வைத்து, கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளார். இந்த வைரங்களின் மதிப்பு, 1.5 கோடி ரூபாய் எனக் கூறப்படுகிறது. திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஒருவர் கூறுகையில், "திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் ஸ்ரீவாரி உண்டியல், திறக்கப்பட்டது. அதிலிருந்த பணம், நகைகள் எண்ணப்பட்ட போது, வெல்வெட் பையில், 162 வைரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என்றார்.

ஐயப்ப தரிசனம் - சன்னதியில் கட்டும் கட்டி...

சன்னதியில் கட்டும் கட்டி...

சன்னதியில் கட்டும் கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
சபரிமலை காடுதேடி... வாரோமப்பா ஐயப்பா...
கட்டுமுடி ரெண்டு கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
காந்தமலை ஜோதிகாண...வாரோமப்பா ஐயப்பா...
சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையாவந்து சேரப்பா...

குருசாமி காலைத்தொட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
கூடியொரு சரணமிட்டு...வாரோமப்பா ஐயப்பா...
புலியேறும் உன்ன நெனச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
புல்லரிக்க சரணமிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

கார்த்திகையில் மாலையிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
கனிவாக விரதம் வெச்சு...வாரோமப்பா ஐயப்பா...
மணி மணியா மாலையிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
மார்கழியில் பூசை வெச்சு...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

குருசாமி சொன்னபடி...வந்தோமப்பா ஐயப்பா...
கூடி நல்ல விரதம் வெச்சு...வாரோமப்பா ஐயப்பா...

கருப்பசாமி உன்ன நெனச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
கால மால பூச வெச்சு...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

கருப்பு பச்ச ஆடை கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
மனசுக்கொரு லாடங்கட்டி...வாரோமப்பா ஐயப்பா...

துளசியில மாலை கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
சரண கோஷ பாட்டு கட்டி...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

நீல வண்ண ஆடை கட்டி...வந்தோமப்பா ஐயப்பா...
நித்தம் உன மனசில் கட்டி...வாரோமப்பா ஐயப்பா...

நெய் போட்டு விளக்கேற்றி...வந்தோமப்பா ஐயப்பா...
நேரம் ஒரு பாட்டு கட்டி...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

உத்தரவு வந்ததுன்னு....வந்தோமப்பா ஐயப்பா...
ஊருக்கெல்லாம் ஓலையிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

உச்சி மலை போறதுன்னு...வந்தோமப்பா ஐயப்பா...
உறவுக்கெல்லாம் ஓலையிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

மூத்ததொரு முடியுங்கட்ட...வந்தோமப்பா ஐயப்பா...
முத்திரையில் நெய் பிடிச்சு...வாரோமப்பா ஐயப்பா...

முன்னுமொரு கட்டுமிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
பின்னுமொரு கட்டுமிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

வீட்டையெல்லாம் தான் மறந்து...வந்தோமப்பா ஐயப்பா...
காட்டை மட்டும் மனசில் வச்சு...வாரோமப்பா ஐயப்பா...

சொந்தமெல்லாம் தான் மறந்து...வந்தோமப்பா ஐயப்பா...
சோதி மட்டும் மனசில் வச்சுவாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

வன்புலிபோல் வாகனத்தில்...வந்தோமப்பா ஐயப்பா...
வாலையாறு வழி கடந்து...வாரோமப்பா ஐயப்பா...

சேரநாடு தான் புகுந்து...வந்தோமப்பா ஐயப்பா...
சேருமிடம் தான் நினச்சு...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

வழியில் பல ஆலயங்கள்...வந்தோமப்பா ஐயப்பா...
வணக்கம் பல சொல்லிக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

பச்சபசேல் தோட்டமெல்லாம்...வந்தோமப்பா ஐயப்பா...
உந்தன் முகம் பாத்துக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

கோட்டயத்த தான் கடந்து...வந்தோமப்பா ஐயப்பா...
கோட்ட வாசல் எருமேலி...வாரோமப்பா ஐயப்பா...

எருமேலி சீமையில...வந்தோமப்பா ஐயப்பா...
எறங்கி சும்மா பேட்ட துள்ள...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

வாபருக்கு சலாம் போட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
வண்ணங்கள பூசிக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

சரக்கோலு ஏந்திக்கிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
சாயங்கள பூசிக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

பச்சிலய கட்டிக்கிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
மேளத்தாளம் கூட்டிக்கிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

திந்தக்கத்தோம் ஆடிக்கிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
சாஸ்தா உனை வணங்கிப்புட்டு வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

பெருவழி தான் திறந்திருக்க...வந்தோமப்பா ஐயப்பா...
குருசாமி முன் நடத்த...வாரோமப்பா ஐயப்பா...

நந்தவனம் தான் வணங்கி...வந்தோமப்பா ஐயப்பா...
பொடிநடையா தான் நடந்து...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா... சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

பேரூரு தோடு மேல...வந்தோமப்பா ஐயப்பா...
பொரி போட்டு பூசை பண்ணி...வாரோமப்பா ஐயப்பா...

கோட்டப்படி அத நெருங்கி...வந்தோமப்பா ஐயப்பா...
எற எடுத்து பூச பண்ணி...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

சிவபெருமான் வந்த இடம்...வந்தோமப்பா ஐயப்பா...
சீர் மிகுந்த காள கட்டி...வாரோமப்பா ஐயப்பா...

காளகட்டி காயொடச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
அடுத்த அடி அழுத நதி...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

அழுதநதி தானறங்கி...வந்தோமப்பா ஐயப்பா...
ஆறுதலா தான் குளிச்சு...வாரோமப்பா ஐயப்பா...

அடியிலொர கல்லெடுத்து...வந்தோமப்பா ஐயப்பா...
ஆழிப்பூசை பண்ணிப்புட்டு...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

அசராம சரணம் சொல்லி...வந்தோமப்பா ஐயப்பா...
அழுதமேடு அதிலேறி... வாரோமப்பா ஐயப்பா...

கல்லெடுத்து குன்றிலிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
கனிவாக சரணம் சொல்லி...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

இஞ்சிப்பாற கோட்டையில...வந்தோமப்பா ஐயப்பா...
இருந்து ஒரு பூச பண்ணி...வாரோமப்பா ஐயப்பா...

உடும்பாற உச்சியில...வந்தோமப்பா ஐயப்பா...
உட்காந்து பூச பண்ணி...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

மூச்சா முழு மூச்செடுத்து...வந்தோமப்பா ஐயப்பா...
முக்குழியும் தான் கடந்து...வாரோமப்பா ஐயப்பா...

பேச்சா உன் பேச்செடுத்து...வந்தோமப்பா ஐயப்பா...
பெரிய மலை கரி மலையும்...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

கடினமப்பா கரிமலையும்...வந்தோமப்பா ஐயப்பா...
கால்கடுக்க உச்சியேறி...வாரோமப்பா ஐயப்பா...

கிடுகிடுவென இறக்கமப்பா...வந்தோமப்பா ஐயப்பா...
குடுகுடுவென கீழிறங்கி...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

சிறியான வட்டத்துல...வந்தோமப்பா ஐயப்பா...
சிலு சிலுன்னு காத்து வாங்கி...வாரோமப்பா ஐயப்பா...


களைப்புத்தீர ஓய்வெடுத்து...வந்தோமப்பா ஐயப்பா...
பாட்டெடுத்து சரணம் சொல்லி...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

பெரிய்ய உன் பேர் சொல்லி...வந்தோமப்பா ஐயப்பா...
பெரியான வட்டத்துல...வாரோமப்பா ஐயப்பா...

சலசலக்கும் பம்பையாறு...வந்தோமப்பா ஐயப்பா...
பெருவழிக்கு நன்றி சொல்லி...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

பம்பையில தல முழுகி...வந்தோமப்பா ஐயப்பா...
பாவங்கள அதில் கழுவி...வாரோமப்பா ஐயப்பா...

அன்னதான படையலிட்டு...வந்தோமப்பா ஐயப்பா...
அழகழகா தீபமிட்டு...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

கன்னிமூல சன்னிதியில்...வந்தோமப்பா ஐயப்பா...
கணபதிய கைத்தொழுது...வாரோமப்பா ஐயப்பா...

அண்ணாந்தா நீலிமலை... வந்தோமப்பா ஐயப்பா...
ஐயா உன் கை பிடிச்சு...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...
(சன்னதியில் கட்டும் கட்டி..)

நீலிமலை ஏத்தமேறி...வந்தோமப்பா ஐயப்பா...
அப்பாச்சி மேடு தொட்டு...வாரோமப்பா ஐயப்பா...

சபரிபீடம் காய் உடைச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
சரங்குத்தி அம்பு விட்டு...வாரோமப்பா ஐயப்பா...

சபரிமலை பயணந்தானப்பா...
சாமி வழித்துணையா வந்து சேரப்பா...

சன்னதிக்கு ஓட்டமாக...வந்தோமப்பா ஐயப்பா...
அம்பலத்தின் வாசலிலே...வாரோமப்பா ஐயப்பா...

பக்கமொரு காய் உடைச்சு...வந்தோமப்பா ஐயப்பா...
பதினெட்டு படியேறி...வாரோமப்பா ஐயப்பா...

காந்தமலை ஜோதியானவா...எங்க காவலாக வந்து சேரப்பா...

பதினெட்டு படியேறி...வந்தோமப்பா ஐயப்பா...
சாஸ்தா உன் முகம் காண...வாரோமப்பா ஐயப்பா...

ஐயா உன் நடை வாசல்...திறந்ததப்பா ஐயப்பா...
நெய்யாடும் திருமேனி...தெரியுதப்பா ஐயப்பா...

ஐயா உன் அழகு முகம்...தெரியுதப்பா ஐயப்பா...
ஆனந்தம் கண்ணீரா...பெருகுதப்பா ஐயப்பா...

அழகுமுகம் கண்டோம் ஐயப்பா...
நாங்க ஆனந்தமே கொண்டோம் ஐயப்பா...

பொன்னான திருமேனி...சாமி சரணம் ஐயப்பா...
கண்ணோடு கலக்குதப்பா...சரணம் சரணம் ஐயப்பா...

பார்க்க பார்க்க சலிக்காதே....சாமி சரணம் ஐயப்பா...
ஐயா உன் திருக்காட்சி....சரணம் சரணம் ஐயப்பா...

சாமி சரணம் சரணம் ஐயப்பா...
உந்தன் திருவடியே சரணம் ஐயப்பா...

ஐயப்ப தரிசனம்-பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ...

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு ...

இருமுடி தாங்கி ஒரு மனதாகி குருவெனவே வந்தோம்
இருவினை தீர்க்கும் அந்த எமனையும் வெல்லும்
உன் திருவடியை காண வந்தோம்...

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
(சுவாமி சரணம் ஐயப்பா சரணம்)

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
(ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

நெய்யபிஷேகம் சுவாமிக்கே கற்பூர தீபம் சுவாமிக்கே
ஐயப்பன் மார்களும் கூறிக்கொண்டு ஐயனை நாடி சென்றிடுவார் சபரி மலைக்கு சென்றிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கார்த்திகை மாதம் மாலையணிந்து
நேர்த்தியாகவே விரதமிருந்து
பார்த்த சாரதியின் மைந்தனே உன்னைபார்க்க வேண்டியே தவமிருந்து (2)

இருமுடி எடுத்து எருமேலி வந்து
ஒரு மனதாகி பேட்டை துள்ளி
அருமை நண்பராம் வாவரை தொழுது
அய்யனின் அருள் மலை ஏறிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

அழுதை ஏற்றம் ஏரும் போது
அரிகரன் மகனை துதித்து செல்வார்
வழி காட்டிடவே வந்திடுவார்
அய்யன் வன்புலி ஏறி வந்திடுவார்

கரிமலை ஏற்றம் கடினம் கடினம்
கருணை கடலும் துணை வருவார்
கரிமலை இறக்கம் வந்தவுடனே
திருநதி பம்பையை கண்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

கங்கை நதி போல் புண்ணிய நதியாம்
பம்பையில் நீராடி சங்கரன் மகனை கும்பிடுவார்
சங்கடமின்றி ஏறிடுவார்
நீலிமலை ஏற்றம் சிவபாலனும் ஏற்றிடுவார்
காலமெல்லாம் நமக்கே அருள் காவலனாய் இருப்பார்

தேக பலம் தா பாத பலம் தா
தூக்கிவிடையா ஏற்றிவிடையா
தேக பலம் தா பாத பலம் தா

தேக பலம் தா என்றல் அவரும் தேகத்தை தந்திடுவார்
பாத பலம் தா என்றல் அவரும் பாதத்தை தந்திடுவார்
நல்லபாதையை காட்டிடுவார் (ஸ்வாமியே அய்யப்போ அய்யப்போ சுவாமியே)

சபரி பீடமே வந்திடுவார் சபரி அன்னையை பணிந்துடுவார்
சரங்குத்தி ஆளில் கன்னிமார்களும் சரத்தினை போட்டு வணங்கிடுவார்

சபரிமலை தனை நெருங்கிடுவார் பதினெட்டு படி மீது ஏறிடுவார்
கதி என்று அவனை சரணடைவார்
மதி முகம் கண்டே மயங்கிடுவார்
ஐயனை துதிக்கையிலே தன்னையே மறந்திடுவார்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
ஸ்வாமியே அய்யப்போ
சுவாமி சரணம் அய்யப்ப சரணம்

பள்ளிக்கட்டு சபரி மலைக்கு
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை
சுவாமி அய்யப்போ அய்யப்போ சுவாமி

சரணம் சரணம் அய்யப்பா சுவாமி சரணம் அய்யப்பா

ஐயப்ப தரிசனம் – ஹரிவராசனம்

ஹரிவராசனம்

ஹரிவராசனம் விஷ்வமோஹனம்
ஹரிததீஷ்வரம் ஆராத்யபாதுகம்
அரிவிமர்த்தனம் நித்யநர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

சரணகீர்த்தனம் பக்தமானசம்
பரணலோலுபம் நர்த்தனாலசம்
அருணபாசுரம் பூதநாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

ப்ரணயசத்யகம் ப்ராணநாயகம்
ப்ரணத்தகல்பகம் சுப்ரபாஞ்ஜிதம்
ப்ரணவமந்திரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

துரகவாகனம் சுந்தரானனம்
வரகதாயுதம் வேதவர்நிதம்
குருக்ருபாகரம் கீர்த்தனப்ரியம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

த்ருபவனார்ச்சிதம் தேவதாத்மகம்
த்ரினயனாம்ப்ரபும் திவ்யதேஷிகம்
த்ருதஷபூஜிதம் சிந்திதப்ரதம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பவபயாப்பகம் ப்ஹாவுகாவஹம்
புவனமோஹனம் பூதிபூஷனம்
தவளவாஹனம் திவ்யவாரணம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

கலம்ருதுஸ்மிதம் சுந்தராணனம்
கலபகோமளம் காத்ரமோஹனம்
கலபகேஷரி வஜிவாஹனம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

ஸ்ருதஜனப்ரியம் சிந்திதப்ரதம்
ஷ்ருத்திவிபூஷனம் சாதுஜீவனம்
ஷ்ருதிமனோஹரம் கீதலாலசம்
ஹரிஹராத்மஜம் தேவமாஷ்ரயே

சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா
சரணம் ஐயப்பா ஸ்வாமி சரணம் ஐயப்பா

பஞ்சாத்ரீஷ்வரி மங்களம்..
ஹரிஹரப்ரேமாக்ருதே மங்களம்..
பிஞ்சாலங்க்ருத மங்களம்..
ப்ரணமதாம் சிந்தாமணி மங்களம்..
பஞ்சாஸ்யத்வஜ மங்களம்..
த்ருஜகதாவாத்யப்ரபோ மங்களம்..
பஞ்சாஸ்த்ரோபம மங்களம்..
ஸ்ருதிஸிரோலங்கார சன்மங்களம்….ஓம்..ஓம்…ஓம்.

Friday, October 28, 2011

TEMPLES IN Tirunelveli

Nellaiappar Temple

This sivasthalam is one of the Pancha Sabha Temples (Copper) of Lord Shiva. This is one of the big temples in Pandiya Naadu measuring 756 in length and 378 feet in breadth. There are 2 temples at Tirunelveli, one for Lord Shiva who is known as Nellaiappar and the other one for Kanthimathi Ammai. Both the temples are located side by side and a corridor joins both the temples. On the southern prakaram of the presiding male deity's temple, the stone statues of Nayak Kings are found who have made immense contributions for the development of this temple. The beautiful statue of Lord Arumugam (Muruga) with His 2 consorts Valli and Deivaanai sitting on His mount Peacock can be seen in the west prakaram. This statue is beautifully carved from single block of big stone. From the eastern prakaram, one has to enter through a series of mandapams to reach the sanctum sanctorum of Nellaiappar.



Kanthimathi Temple

The temple of female deity Kanthimathi Ammai can be reached from the south prakaram and passing through the connecting corridor. The 1000 pillar mandapam inside the female deity's temple is very famous and it is here the celestial wedding of Kanthimathi Ammai with Nellaiappar takes place every year during the festival in the Tamil month of Aippasi corresponding to October 15th to November 15th

Sri Varadharaja Perumal Temple

Sri Varadharaja Perumal Kovil is situated in Tirunelveli Junction, on the banks of the perennial river Thamirabarani. It is an ancient and reputed Vishnu temple.

Mela Thiruvenkatanathapuram Temple

The Mela Thiruvenkatanathapuram temple is located 7 to 10 km south west of Tirunelveli, on the banks of perennial river Thamirabarani. Also known as Thirunankovil, it has Lord Srinivasa as the deity.

Holy Trinity Cathedral

The Holy Trinity Cathedral, Palayamkottai, a big, elegant and beautiful church, was built in 1826 by Rev. CTE Rhenius - the Apostle of Tirunelveli (Charles Theophilus Ewald Rhenius), and opened to public for worship on 26 June 1826. Bishop Corrie named it as Holy Trinity Church on 30 January 1836. Bishop Stephen Neill raised the status of the Church into a Cathedral. Many renovations and additions were made to this structure. This church still serves as a nucleus for this massive Cathedral which developed in later years. Church of glorinda is located one kilometre east to holy cathedral.

Important Places In Tirunelveli

The Tirunelveli City included five important places such places are following here,



District Science Centre

The District Science Centre is located in the land of Tamiraparani and it is an unique institution. Popularizing Science, counting the spirit of enquiry, denoting creative talents, qualifying scientific temper in life, are the facts. There are 124 centres in country among that this is one. In ocean there are two galleries in that 3permanent centres and semi permanent gallery is about popular science and a six acres is filled with science park which has a tremendous help centre for every awareness of scientific development among the people. Generation to the above facilities of District Science Centre is also taking part in conducting following programmes like Mobile Science Exhibition, Planetarium, Film Show, Temporary Exhibition, Science Skit and Rating of Science.

Museum

From Tirunelveli just 2Km travel. It is a multi-use museum situated on Tirunelveli-Thiruvananthapuram Road (NH7) palayamkottai. All varieties of Archaeological remaining can be seen. Entrance free. Museum Open 8.30a.m to 5.30p.m.

Kutrallam

Kutrallam, the " Spa of the south" is situated at an elevation of about 170 m high, on the western Ghats in Thirunelveli district. This is not only a tourist spot but also a health resort too. The waterfall has medicinal properties since the water runs through forests of herbs and the water has therapeutic qualities to cure physical ailments. During the season between June to September every year thousands of tourists visit this place.

Uvari Village

Uvari is a fishing village which is located at shore of way to Bengal at Tirunelveli district, Tamilnadu, South India. This village is just 70 Km from Tirunelveli city. 50 Km east from Nagercoil and 100 Km west from Tuticorin. The total population of that place is nearly 7000. There are around thousands of houses in this village. This village all the needs what they want like electricity, health centre, community centre, schools, bank, hospital, water tanks, ration shop, library and etc., This not like a village nearly a town. There are good bus facilities for the people and it takes just one hour to reach Hindu temple Tiruchendur. Uvari is just 90minutes from railway junction of Tirunelveli and from the beach town of Kanyakumari. From Uvari many private travels are arranged for Tisayanvillai, 7Km away from Uvari. The village is divided into 3types Middle Street, Western Street and Beach Colony.

V.O.C. Mani Mandapam

V.O.Chitambarm with a great personality of Freedom movement in Tamilnadu who struggled in pulling the cooking oil extraction (chekku) in Coimbatore prison, the place he was imprisoned for fighting against British rule. V.O.C. Born at Ottapidaram now in Tuticorin district. But this village was before under Tirunelveli district so that government built a manimandapam for him Tirunelveli and it was honored by our chief minister of Tamilnadu to open it. There is a meditation hall. In this hall V.O.C. statue is kept with the height of 6.5 feet. There is extracted oil kept as a remembrance for his struggle and sacrifice in national freedom fight. At the Entrance of the mandapam two ship shapes are kept which intimate us the V.O.C. brave and intelligent approach against British. V.O.C. also established Navigation Team against British. He was not only sincere to the nation and he was also a leader of labour union. Once there was a strike, in that many labours were starving V.O.C. sold his land and bought food for the labours and Strike continued. His co-mates are Mahakavi Bharathi and Subramania SIVA.



‘Veerar’ Pulithevan Memorial

He was born in 1715. He was the first man to make war of British to cry. He was the only man who refused to pay tax against British. This made a wound to his self respect and in 1755 he was the first herald the freedom movement of defeating the demand of Col. Aaron. He planned a war against the Britishers and defeated them too. At last Britishers planned to attack him while offering prayers at Sankara Nainar Koil but he dis-appeared into a cave and he never returned. Thus to his memorial they kept a Nelkattum Seval at Sivagiri Taluk.



Kalakkaddu Wildlife Sanctuary

You will have to move a little out of the city center as the sanctuary is situated some 47 km away from Tirunelveli. Covering a whopping area of around 223 sq km, the sanctuary is located amidst the western ghats. The sanctuary serves as home to animals like Macaque, common Langur, Nilgiri Tahrs, Sambars, Bears, Elephants, Tigers, Flying Squirrel, Panther, the list goes on. The flora here is also very rich and one can see spreads of tropical wet evergreen forest, tropical dry deciduous and thorn forest. Nature lovers who are also adventure lovers can expect a wonderful outing as trekking is allowed in the sanctuary, but for that prior permission from the forest department is required. Forest Rest House at Sengaltheri proves to be a perfect staying option for tourist who wish to stay a little longer for enjoying the cool and pleasant atmosphere of this serene area.



Kunthakulam Bird Sanctury

It is situated 33 kilometers south of Thirunelveli. Kunthakulam is actually a small and natural scenic village. This village is covered with natural forest and ponds. During winter every year more than 10 thousand birds from various countries like Pakistan, Myanmar, Sri Lanka and Australia migrate here.



Mundanthurai Wildlife Sanctuary

Although this sanctuary is a Project Tiger Reserve you are likely to sight other animals like the leopard, sambhar, sloth bear and the chital apart from a wide variety of Indian primates including the bonnet macaque, common langur, Nilgiri langur and lion-tailed macaque.



Papanasam

Papanasam is located 60 kilometers from Tirunelveli. The famous Shiva temple is located at the bottom of Western Ghats that is very near to the origin of the River Tambraparani. The place is also famous for the Chitrai Vishu festival that is celebrated in the month of April when lacks of people congregate here.

Thursday, September 29, 2011

swami nellaiapper kanthimathi temple tirunelveli

தமிழ் நாட்டில், முக்கியமான ஐந்து சிவசபைகளில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபையாகவும் ஸ்ரீ குற்றால நாதர் ஆலயம் சித்திர சபையாகவும் உள்ளன. திருநெல்வேலி ஜங்சனிலிருந்து சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில். ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தென் வடலாக 756 அடி நீளமும், மேற்கு கிழக்காக 378 அடி அகலமும் கொண்டு ஆசியாவிலேயே மிகப்பெரிய சிவாலயமாக உள்ளது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய பழமை வாய்ந்த தலமாக விளங்குகிறது. சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோயில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும். பாண்டிய நாட்டில் பாடல் பெற்ற 14 தேவாரத் தலங்களில் நெல்லையப்பர் கோயிலும் ஒன்றாகும்.

இக்கோயிலில் நெல்லையப்பர் என்கிற பெயரில் மூலவரும், காந்திமதி என்கிற பெயர் அம்பாளும் வீற்றிருக்கின்றனர். நெல்லையப்பர் கோயில் இரு மூலவரைக் கொண்ட "துவிம்மூர்த்தி' என்ற வகை கோயிலாகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனித்தனி சன்னதியில் பக்தர்களுக்குக் காட்சி தருகின்றனர். காந்திமதி அம்பாள் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

இக் கோயிலின் தலமரம் மூங்கில் ஆகும். 32 தீர்த்தங்களைக் கொண்ட இக் கோயிலில் பொற்றாமரை, கருமாறி, வைரவ தீர்த்தம், சர்வதீர்த்தம், கம்பை, சிந்துபூந்துறை, துர்க்கை தீர்த்தம், குறுக்குத்துறை உள்ளிட்ட 9 தீர்த்தங்கள் முக்கியமானவை.

தல வரலாறு
பாண்டிய நாட்டை முழுவதும் கண்ட ராமபாண்டியன் ஆட்சி செய்யும்போது, ஒரு முறை கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. அக் கால கட்டத்தில் வேணுவனமாகக் காட்சியளித்த திருநெல்வேலியில் வேதபட்டர் என்கிற பட்டர் சிவபெருமானிடம் அதிக பக்தி கொண்டவராக விளங்கினவராக திகழ்ந்தார். தன் மேல் அளவுகடந்த பக்தி வைத்திருக்கும் வேதபட்டரின் பக்தியை சோதிக்க சிவபெருமான் எண்ணினார். அதன் காரணமாக சிவபெருமான் வேதபட்டரை வறுமைக்குள்ளாக்கினார். வேதபட்டரும் தினமும் வீடுவீடாக சென்று நெல் சேகரித்து இறைவனின் நைவேத்தியத்திற்காக பயன்படுத்தி வந்தார். ஒரு நாள் இவ்வாறு பெற்ற நெல்லை சன்னதி முன் உலரப் போட்டு குளிக்கச் சென்றார். அப்போது திடீரென்று மழை பெய்ய ஆரம்பித்தது. குளித்துக் கொண்டிருந்த வேதபட்டர் மழை தண்ணீரில் நெல் நனைந்துவிடப்போகிறது என்று எண்ணி வேகமாக ஓடி வந்து பார்க்கையில் நெல்லைச் சுற்றி மழை நீர் இருந்தும் நெல்லை கொண்டு செல்லாதபடி இருப்பதையும், நடுவே நெல் வெயிலில் காய்வதையும் கண்டு அசந்தார்.

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு ஆச்சர்யப்பட்ட வேதபட்டர் இந்த அதிசயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராம பாண்டியனும் இந்த அதிசயத்தை காணவிரைந்தார். நெல் நனையாமல் இருப்பதைக் கண்ட மன்னனும் அசந்தார். உலகிற்காக மழை பெய்வித்து வேதபட்டரின் நெல் நனையாது காத்த இறைவனின் சிறப்பை உணர்ந்து மெய்சிலிர்த்தார். உடனே நெல் நனையாது காத்த இறைவனின் திருநாமத்தை அன்று முதல் நெல்வேலி நாதர் என்று அழைக்கலானார். அதுபோல் அதுவரை வேணுவனம் என்றிருந்த அப்பகுதியை நெல்வேலி எனவும் மாற்றியமைத்தார். நெல்வேலி தற்போது திருநெல்வேலி என அழைக்கப்படுகிறது. நெல்வேலி நாதர் நாளடைவில் நெல்லையப்பர் என அழைக்கப்படலானார். இப்படிப் புகழ் பெற்ற இத்திருத்தலத்தில் உள்ள இறைவன் சுவாமி வேணுநாதர், வேய்த நாதர், நெல்வேலி நாதர், சாலிவாடீசர் என்றும் அழைக்கப்படுகிறார்.


இத்தலத்தில் உள்ள அம்பாளம் வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். அதுபோல் விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும், முருகன் ஆறுமுகப் பெருமான் என்றும் அழைக்கப்படுகிறார்.

கோயிலின் மூலக்கதை

முன்பொரு காலத்தில் அரண்மனைக்குப் பால் ஊற்றிக் கொண்டிருந்தாராம் பட்டர் ஒருவர். அப்படி ஒருநாள் அவர் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது வழியிலிருந்த கல் ஒன்று அவரின் காலை இடறி விட, பானையில் இருந்த பால் முழுதும் அந்தக் கல்லின் மேல் கொட்டி விட்டது. இந்த நிகழ்வு தொடர்ந்து நான்கைந்து நாட்கள் நடைபெற, பயந்து போன பட்டர் உடனே மன்னனிடம் சென்று முறையிட்டார். மன்னரும் வீரர்களை அழைத்துக் கொண்டு அவ்விடத்திற்குச் சென்றார். அவர்கள் அந்தக் கல்லை அங்கேயிருந்து அகற்ற முயல கோடரி கொண்டு வெட்டினர். அப்போது அந்தக் கல்லிலிருந்து இரத்தம் பீறிட்டுக் கொண்டு வர ஆரம்பித்தது. அனைவரும் செய்வதறியாது அரண்டு போய் நிற்க வானில் ஓர் அசீரிரி கேட்டதாம். அதன்படி அந்தக் கல்லைத் தோண்ட தலையின் இடப்பக்கம் வெட்டுக் காயத்துடன் சிவலிங்கம் வெளிப்பட்டதாம். இன்னமும் மூலவரின் தலையில் வெட்டுக் காயத்தைக் காணலாம். சுயம்புவாகத் தோன்றிய சிவலிங்கத்தை மூலவராகக் கொண்டு கோயில் உருவானது.

கோயிலின் அமைப்பு

கோயிலில் நுழைந்தவுடன் 10 அடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும். அதற்கு மேல் ஒரு துணித்திரை படுக்கை வாக்கில் கட்டப்பட்டிருக்கும். அடுத்து உள்ளே சென்றால் மிகப்பெரிய (சுமார் 9 அடி) ஆனைமுகன் வீற்றிருக்கிறார். மூலவரைச் சுற்றி 3 பிரகாரங்கள் உண்டு. முதல் பிரகாரத்தில் எல்லாக் கோயில்களையும் போல தக்ஷிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சந்நிதிகள் உள்ளன. கோவிந்தப் பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார்.


இரண்டாவது பிரகாரம் சற்றுப் பெரியது. ஆரம்பத்திலேயே “ஏழிசை ஸ்வரங்கள் இசைக்கும் தூண்கள்” உள்ளன. இவற்றைத் தட்டிப் பார்த்தால் ஸ்வரங்களின் ஒலி கேட்கும். இந்தப் பிரகாரத்தில் தான் “தாமிர சபை” உள்ளது. 63 நாயன்மார்களின் சிலைகள், அஷ்ட லக்ஷ்மி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.


மூன்றாவது பிரகாரம் மிகப் பெரியது. மிக அகலமானது. 3 யானைகள் சேர்ந்து நடந்தாலும் மீதம் இடம் இருக்கும். இப்பிரகாரத்திலிருந்து தான் அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்லலாம். இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மா ஆகியோர்க்கு தனிச் சந்நிதிகள் உண்டு. கோயிலின் மிகப் பெரிய உள் தெப்பம் இங்குதான் உள்ளது. வெளித்தெப்பம் ஒன்று கோயிலுக்கு வெளியே அரை கிலோமீட்டர் தள்ளியுள்ளது. தெப்பத்திருவிழாவும் பிரசித்தி பெற்றது.

அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் "தங்கப்பாவாடை" சார்த்தப்படுகிறது. அங்குள்ள ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு வளைகாப்பு நடைபெறும். கார்த்திகை மாதம் திங்கட்கிழமை தோறும் பெண்கள் மாவிளக்கு எடுப்பது மிக விசேஷம்.

மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சந்நிதி உள்ளது. ஆறுமுகமாய், மயில் வாகனனாய், வள்ளி தெய்வானையுடன் சந்தனக்காப்பில் நின்றவாக்கில் இருப்பார். அங்கும் மிகப் பெரிய மண்டபம் உள்ளது. இங்கும் விளக்குப் பூஜைகள் நடைபெறும். அதையடுத்து மேற்கு வாசலைப் பார்த்து அமர்ந்திருக்கிற விநாயகரும், மேற்குவாசலும் வரும். அடுத்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற திறந்தவெளியரங்கம் ஒன்று உள்ளது. அதன் அருகில் யானை இருக்கும். அதன்பின் நவக்கிரகங்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று பக்தர்கள் எள்விளக்கு ஏற்றிப்போட அகண்ட கிழி இருக்கும்.

இக் கோயிலில் மாதம் ஒரு திருவிழா நடைபெறுவது தனிச் சிறப்பாகும். இதில் முக்கியமாக ஆனிப் பெரும் திருவிழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் தொன்று தொட்டு நடைபெறுகிறது. இத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள 2 வது பெரிய தேர் இழுக்கப்படும். இத் தேருடன் 5 தேர்கள் இழுக்கப்படும். மேலும், இக் கோயிலில்தான் நடராஜ பெருமான் திருநடனம் புரியம் தாமிரசபை உள்ளது. இந்த சபையில் மார்கழி மாதம் நடைபெறும் திருவாதிரை திருவிழாவின் கடைசிநாளன்று நடராஜபெருமான் திருநடனம் புரியும் வைபவம் நடைபெறுகிறது. இதே போல, ஐப்பசி மாதம் நடைபெறும் காந்திமதி அம்பாள் திருக்கல்யாண திருவிழாவும் மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும். மேலும் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி நவராத்திரி திருவிழா என்று நிறைய திருவிழாக்கள் இக்கோயிலில் நடைபெறுகிறது.

சுவாமி நெல்லையப்பர் கோயில் பல கட்டங்களில், பல மன்னர்களால் கட்டப்பட்டது. தற்போது இருக்கும் நிலைவரை நின்றசீர் நெடுமாற பாண்டியனால் கட்டப்பட்டிருக்கிறது.

சாந்த சொரூபமாக வீற்றிருக்கும் காந்திமதி அம்பாளை திருமணமாகாத பெண்கள் தரிசித்தால், விரைவில் திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதே போல, சுவாமி சன்னதி அருகே உள்ள பொல்லாப்பிள்ளையாரை வணங்கினால், குழந்தை இல்லாத தம்பதிகள் விரைவில் குழந்தை பெறுவர் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். இதில் குழந்தை இல்லாத தம்பதிகள் தங்களது வேண்டுதல் நிறைவேற, சங்கடஹர சதுர்த்தியன்று பொல்லாப்பிள்ளையாருக்கு 11 வகையான அபிஷேகம் செய்து, மோதகம் வைத்து, அருகம்புல் மாலை சூடி வழிபட்டால், அத் தம்பதியின் வேண்டுதல் உடனடியாக நிறைவேறும். இதே போல, 41 நாள்கள் தொடர்ந்து கணவரும், மனைவியும் தொடர்ந்து பக்தி சிரத்தையுடன், அர்ச்சனை செய்து வழிப்பட்டால் குழந்தை வரம் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

சுவாமி நெல்லையப்பரைத் தரிசிக்க விமானம் மூல வர விரும்புகிறவர்கள் சுமார் 40 கி.மீ. தொலைவில் உள்ள தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையம் வந்து அங்கிருந்து கார் மூலமாகவோ, பஸ் மூலமாகவோ ஆலயம் வரலாம். ரயில் மூலம் வருகிறவர்கள் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து பஸ் மூலமாகவோ அல்லது வேறு வாகனங்கள் மூலமாகவோ கோயிலுக்கு வரலாம்.

கோயிலில் காலை 6.30 மணிக்கு திருவனந்தல் பூஜை, 7.30 மணிக்கு விளா பூஜை, 8.30 மணிக்கு சிறுகாலச் சந்தி, 9.30 மணிக்கு காலசந்தி ஆகியவை நடைபெறும். நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலம், மாலை 6 மணிக்கு சாயரட்சை, இரவு 8.30 மணிக்கு அர்த்த சாமம், இரவு 8.40 மணிக்கு சொக்கர் தீபாராதனை, 9.30 மணிக்கு வைரவர் பூஜை ஆகியவை தினமும் நடைபெறும்.

மேலும் விவ்ரங்களுக்கு
அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி திருக்கோயில், திருநெல்வேலி.
தொலைபேசி: +91-462-2339910

Tuesday, August 2, 2011

திருவாசகம்(சிவபுராணம்) பாடல்கள்

01. மனக்கவலை நீங்கி ஆனந்தம் பெறவும், மீண்டும் பிறவா நிலை அடையவும் ஓத வேண்டிய பதிகம்

பாடியவர்: மாணிக்கவாசகர் தலம்: திருப்பெந்துறை

நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின்ற அண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடி வாழ்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறத்தார்க்குச் சேயோன்தன் பூங்கழல்கள் வெல்க
கரம்குவிவார் உள் மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க

ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தோன் அடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடிபோற்றி
மாயப் பிறப்பறுக்கும் மன்னன் அடிபோற்றி
சீரார் பெருந்துறைநம் தேவன் அடிபோற்றி
ஆராத இன்பம் அருளுமலை போற்றி
சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன்யான்

கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி
எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி
விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
எண்ணிறத் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
பொல்லா வினையென் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
மெய்யேஉன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா என ஓங்கி ஆழ்ந்தஅகன்ற நுண்ணியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்விமலா
பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப்புகுவிப்பாய் நின்தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலோடு நெய்கலந்தாற் போலச்
சிறந்த அடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன் தன்னை

மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டிப்
புறந்தோல் போர்த்தெங்கும் புழு அழுக்கு மூடி
மலஞ்சோறும் ஒன்பது வாயிற் குடிலை
மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலந்தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலந்தன் மேல் வந்தருளி நீள்கழல்கள்கரஅட்டி
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர் அமுதே சிவபுரனே
பாசமாம் பற்றறத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப்
பேராது நின்ற பெருங்கருணைப் பேராரே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கிஎன் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே

அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய்ஞ்ஞானத்தால் கொண்டுணர்வார் தம் கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரியநுண்ணுணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப்புண்ணியனே
காக்கும் எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய்

மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனையுள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
ஆற்றேஎம் ஐயா அரனேஓ என்று என்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
தில்லையுள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித்திருவடிக்கீழ்ச்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து.

திருச்சிற்றம்பலம்

02. ஊமைத் தன்மை, திக்குவாய் நீங்கி நன்றாக பேசவும், சிறந்த பேச்சாளர் ஆகவும் ஓத வேண்டிய பதிகம்

ராகம்: மோகனம் பாடியவர்: மாணிக்கவாசகர்
திருவாசகம் திருச்சாழல் தலம்: தில்லை சிதம்பரம்

பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்குஅரவம்,
பேசுவதும் திருவாயால் மறைபோலும்?காணேடி!
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண்டென்னை?
ஈசன் அவன், எவ்வுயிர்க்கும் இயல்புஆனான்; சாழலோ.

என்அப்பன், எம்பிரான் எல்லார்க்கும் தான்ஈசன்
துன்னம்பெய் கோவணமாக் கொள்ளும்அது, என்னேடீ?
மன்னுகலை, துன்னுபொருள், மறைநான்கே, வான்சரடாத்
தன்னையே கோவணமாச் சாத்தினான்; காண்; சாழலோ.

கோயில் சுடுகாடு கொல்புலித்தோல் நல்ஆடை;
தாயும்இலி, தந்தை இலி; தான்தனியன்; காணேடி!
தாயும்இலி, தந்தை இலி தான்தனியன் ஆயிடினும்,
காயில், உலகு அனைத்தும், கல்பொடி, காண், சாழலோ.

அயனை, அனங்கனை, அந்தகனை, சந்திரனை
வயனங்கள் மாயா வடுச்செய்தான்; காணேடி!
நயனங்கள் மூன்றுஉடைய நாயகனே தண்டித்தால்
சயம்அன்றோ வானவர்க்குத் தாழ்குழலாய்? சாழலோ.

தக்கனையும் எச்சனையும் தலைஅறுத்த, தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்ததுதான் என்னேடீ?
தொக்கனவந் தவர்தம்மைத் தொலைத்தருளி, அருள்கொடுத்தங்கு
எச்சனுக்கு மிகைத்தலைமற்று அருளினன்காண், சாழலோ.

அலரவனும் மால்அவனும் அறியாமே, அழல்உருஆய்,
நிலமமுதல், கீழ்அண்டம்உற நின்றது தான், என்னேடீ?
நிலம்முதல் கீழ்அண்டம் உற நின்றிலனேல், இருவரும்தம்
சலமுகத்தால் ஆங்காரம் தவிரார், காண்; சாழலோ.

மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே, மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையில் பாயும் அது, என்னேடீ?
சலமுகத்தால் அவன் சடையில் பாய்ந்திலளேல், தரணிஎல்லசாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து, பெருங்கேடாம்; சாழலோ.

கோலாலம் ஆகிக் குரைகடல்வாய்; அன்று எழுந்த
ஆலாலம் உண்டான்; அவன் சதுர்தான் என்னேடீ?
ஆலாலம் உண்டிலனேல், அன்றுஅயன் மால் உள்ளிட்ட
மேல்ஆய தேவர்எல்லாம் வீடுவர்காண்; சாழலோ.

தென்பால் உகந்து ஆடும் தில்லைச்சிற் றம்பலவன்,
பெண்பால் உகந்தான் பெரும்பித்தன் காணேடீ!
பொண்பால் உகந்திலனேல் பேதாய், இருநிலத்தோர்
விண்பால் யோகுஎய்தி வீடுவர்காண்; சாழலோ.

தான்அந்தம் இல்லான் தனைஅடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்தான்; காணேடீ!
ஆனந்த வெள்ளத்து அழுத்துவித்த திருவடிகள்,
வான்உந்து தேவர்கட்கு ஓர் வான்பொருள்; காண்; சாழலோ.

நங்காய், இது என்னதவம்? நரம்போடு எலும்பு அணிந்து
கங்காளம் தோள்மேலே காதலித்தான்; காணேடீ?
கங்காளம் ஆமாகேள் கால அந்தரத்து இருவர்,
தம்காலம் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.

கான் ஆர் புலித்தோல் உடை; தலை ஊண்; காடுபதி
ஆனால் அவனுக்கு இங்கு ஆட்படுவார் ஆரேடீ!
ஆனாலும் கேளாய் அயனும் திருமாலும்,
வான் நாடார் கோவும், வழி அடியார் சாழலோ.

மலை அரையன் பொற்பாவை, வாள்நுதலாள், பெண்திருவை,
உலகுஅறியத் தீ வேட்டான் என்னும், அது என்னேடீ!
உலகுஅறியத் தீ வேளாது ஒழிந்தனனேல், உலகு அனைத்தும்
கலைநவின்ற பொருள்கள் எல்லாம், கலங்கிடும், காண், சாழலோ.

தேன்புக்க தண்பணைசூழ் தில்லைச்சிற் றம்பலவன்
தான்புக்கு நட்டம் பயிலும் அது என்னேடீ!
தான்புக்கு நட்டம் பயின்றிலனேல், தரணிஎல்லாம்
ஊன்புக்க வேல் காளிக்கு ஊட்டுஆம்; காண்; சாழலோ.

கடகரியும் பரிமாவும் தேரும் உகந்து ஏறாதே,
இடபம் உகந்து ஏறியவாறு எனக்குஅறிய இயம்பேடீ!
தடமதில்கள் அவைமூன்றும், தழல்எரித்த அந்நாளில்,
இடபம் அதுவாய்த் தாங்கினான், திருமால்காண், சாழலோ.

நன்றாக நால்வர்க்கும் நான்மறையின் உட்பொருளை,
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம்உரைத்தான்; காணேடீ!
அன்று, ஆலின்கீழ் இருந்து, அங்கு அறம் உரைத்தான் ஆயிடினும்
கொன்றான்காண், புரம்மூன்றும் கூட்டோடே; சாழலோ.

அம்பலத்தே கூத்துஆடி, அமுதுசெயப் பலிதிரியும்
நம்பனையும் தேவன் என்று, நண்ணும் அது என்னேடீ!
நம்பனையும் ஆமாகேள்; நான்மறைகள் தாம் அறியா
என்பெருமான், ஈசாஎன்று ஏத்தின காண்; சாழலோ.

சலம் உடைய சலந்தரன் தன் உடல்தடிந்த நல் ஆழி,
நலம் உடைய நாரணற்கு, அன்று அருளியவாறு என்னேடீ!
நலம் உடைய நாரணன், தன் நயனம்இடந்து அரன் அடிக்கீழ்
அலர்ஆக இட, ஆழி அருளினன்; காண்; சாழலோ.

அம்பரம்ஆம், புள்ளித்தோல்; ஆலாலம் ஆர்அமுதம்;
எம்பெருமான் உண்டசதுர் எனக்கு அறிய இயம்பேடீ!
எம்பெருமான் ஏதுஉடுத்து, அங்கு ஏது அமுது செய்திடினும்
தம்பெருமை தான் அறியாத் தன்மையன்; காண்; சாழலோ.

அரும்தவர்க்கு ஆலின் கீழ் அறம்முதலா நான்கினையும்
இருந்து, அவர்க்கு அருளும் அது எனக்கு அறிய இயம்பேடீ!
அரும்தவர்க்கு, அறம்முதல் நான்கு அன்றுஅருளிச் செய்திலனேல்
திருந்த, அவருக்கு உலகுஇயற்கை தெரியா; காண்; சாழலோ.

திருச்சிற்றம்பலம்

03. விரோதிகளை அடங்கச் செய்யவும், எதிரிகள் உருவாகாமல் தடுப்பதற்கும் ஓத வேண்டிய பதிகம்

பாடியவர்: மாணிக்கவாசகர் தலம்: தில்லை

வளைந்தது வில்லு விளைந்தது பூசல்
உளைந்தனமுப்புரம் உந்தீ பற
ஒருங்குடன் வெந்தவா றுந்தீ பற

ஈரம்பு கண்டிலம் ஏகம்பர் தங்கையில்
ஓரம்பே முப்புரம் உந்தீ பற
ஒன்றும் பெருமிகை றுந்தீ பற

தச்சு விடுத்தலும் தாம் அடியிட்டலும்
அச்சு முறிந்ததென்று உந்தீ பற
அழிந்தன முப்புரம் உந்தீ பற

உய்யவல்லார் ஒருமூவரைக் காவல் கொண்டு
எய்ய வல்லானுக்கே உந்தீ பற
இளமுலை பங்கன் என்றுந்தீ பற

சாடிய வேள்வி சரிந்திடத் தேவர்கள்
ஓடியவா பாடி உந்தீ பற
உருத்திர நாதனுக் குந்தீ பற

ஆவா திருமால் அவிப்பாகங் கொண்டு அன்று
சாவாது இருந்தான் என்று (உ)ந்தீ பற
சதுர்முகன் தாதை என்று (உ)ந்தீ பற

புரந்தரனார் ஒரு பூங்குயிலாகி
மரந்தினில் ஏறினார் (உ)ந்தீ பற
வானவர் கோன் என்றே உந்தீ பற

வெஞ்சின வேள்வி வியாத்திர னார்தலை
துஞ்சின வாபாடி உந்தீ பற
தொடர்ந்த பிறப்பற உந்தீ பற

ஆட்டின் தலையை விதிக்குத் தலையாகக்
கூட்டிய வாபாடி உந்தீ பற
கொங்கை குலுங்கநின்று (உ)ந்தீ பற

உண்ணப் புகுந்த பகன்ஒளித்து ஓடாமே
கண்ணைப் பறித்தவாறு (உ)ந்தீ பற
கருக்கெட நாமெலாம் உந்தீ பற

நாமகள் நாசி சிரம்பிர மன்படச்
சோமன் முகம்நெரித்து (உ)ந்தீ பற
தொல்லை வினைகெட உந்தீ பற

நான்மறை யோனும் மகத்துஇய மான்படப்
போம்வழி தேடுமாறு (உ)ந்தீ பற
புரந்தரன் வேள்வியில் (உ)ந்தீ பற

சூரிய னார் தொண்டை வாயினிற் பற்களை
வாரி நெரித்தவாறு (உ)ந்தீ பற
மயங்கிற்று வேள்வி என்று (உ)ந்தீ பற

தக்கனார் அன்றே தலைஇழந் தார்தக்கன்
மக்களைச் சூழநின்று (உ)ந்தீ பற
மடிந்தது வேள்வி என்று (உ)ந்தீ பற

பாலக னார்க்குஅன்று பாற்கடல் ஈந்திட்ட
கோலச் சடையற்கே உந்தீ பற
குமரன் தன் தாதைக்கே உந்தீ பற

நல்ல மலரின்மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற
உகிரால் அரிந்ததுஎன்று (உ)ந்தீ பற

தேரை நிறுத்தி மலைஎடுத் தான்சிரம்
ஈரைந்தும் இற்றவாறு (உ)ந்தீ பற
இருபதும் இற்றதென்று (உ)ந்தீ பற

ஏகாசமிட்ட இருடிகள் போகாமல்
ஆகாசங் காவலென் றுந்தீ பெற
அகற் கப்பாலுங் காவல் என்றுந்தீ பற

திருச்சிற்றம்பலம்

அனுமன் சாலீஸா

அனுமான் காயத்ரி

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
ராமதூதாய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

ஓம் ராமதூதாய வித்மஹே
அஞ்ஜனீ புத்ராய தீமஹி
தந்நோ மாருதி ப்ரசோதயாத்

ஸ்ரீராம ஜெயம்

யாராலும் சாதிக்க முடியாத காரியங்களையும் சாதிக்க வல்லவரான ராம தூதனே! கருணைக் கடலே! ப்ரபோ! என்னுடைய காரியங்களை எல்லாம் சாதித்துத் தருவீராக.

அனுமன் சாலீஸா

பாராயண முறை:

உடலைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தூய ஆடை அணிந்து, தூய உள்ளத்துடன் ஆஞ்சநேயரைத் தியானிக்க வேண்டும். நெய் விளக்கேற்றி, தூபம் காட்டியபின் பதினொரு முறை இந்த நாற்பது துதிகளையும் அன்புடன் ஓத வேண்டும். நூறு முறை ஓதுவது சிறப்பு. ஒவ்வொரு முறை முடியும் போதும் ஆஞ்சநேயரின் திருப்பாதங்களில் மலர்களைச் சமர்ப்பிக்க வேண்டும். கோயிலிலோ, வீட்டின் தூய்மையான இடத்தில் ஆஞ்சநேயர் படத்தின் முன்னாலோ பாராயணம் செய்யலாம். செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் பாராயணம் செய்ய வேண்டும். பக்தியுடனும் அன்புடனும் ஹனுமன் சாலீஸா பாராயணம் செய்யப்பட்டால் நினைத்தது நடக்கும் என்பது பெரியோர் கூற்று. அவரது அருளால் எதுவும் நடக்கும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீகுரு சரண் ஸரோஜ்ரஜ் நிஜ மன முகுர ஸுதார் பரணோம் ரகுவர விமல யச ஜோ தாயக பலசார்

எனது மனம் என்னும் கண்ணாடியை ஸ்ரீ குருதேவரின் திருப்பாதத் தூசியால் தூய்மைப் படுத்திக் கொண்டு நான்கு கனிகளைத் தருகின்ற ரகுகுலதிலகமான ஸ்ரீராமனின் மாசற்ற தெய்வீகப் பெருமைகளை விளக்கத் தொடங்குகிறேன்.

நான்கு கனிகள்:

1. அறம்-நல்வழி 2.பொருள்-நல்வழியில் ஈட்டிய செல்வம் 3. இன்பம்-நல்வழியில் நிறைவேற்றப் பெறும் ஆசைகள் 4. வீடு-சம்சார வாழ்விலிருந்து விடுதலை.

புத்தி ஹீன தனு ஜானி கே, ஸுமிரௌ பவன குமார் பல புத்தி வித்யா தேஹு மோஹிம், ஹரஹு கலேச விகார்

எனது அறிவோ குறுகியது, வாயு மைந்தனான ஆஞ்சநேயா, உன்னைத் தியானிக்கிறேன், எனக்கு வலிமை, அறிவு, உண்மை ஞானம் எல்லாம் தருவாய். என்னைத் துன்பங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் விடுவிப்பாய்.

1. ஜய ஹனுமான் ஜ்ஞான குண ஸாகர ஜய கபீஸ திஹுலோக உஜாகர

ஆஞ்சநேயா, நீ கடலைப் போலப் பரந்த அறிவும் நற்குணங்களும் பொருந்தியவன், வானரர்களின் தலைவன் மூன்று உலகங்களையும் உணர்வுற்றெழச் செய்பவன். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.

2. ராமதூத அதுலித பலதாமா அஞ்ஜனி புத்ர பவன ஸுத நாமா

நீ ஸ்ரீராம தூதன், எல்லையற்ற ஆற்றலின் உறைவிடம், அஞ்ஜனையின் மைந்தன், வாயுபுத்திரன் என்னும் பெயர்பெற்றவன்.

3. மஹாவீர் விக்ரம பஜரங்கீ குமதி நிவார ஸுமதி கே ஸங்கீ

மிகுந்த ஆற்றல் வாய்ந்த உடலுடன் இணையற்ற வலிமை பொருந்திய வீரன் நீ. துய சிந்தனைகளை விரட்டுபவன் நீ. நல்லசிந்தனைகளின் நண்பன் நீ.

4. கஞ்சன பரண விராஜ ஸுவேசா கானன குண்டல குஞ்சித கேசா

பொன்னிறம் பொருந்தியவன் நீ, சிறந்த ஆடைகளை உடுத்தியுள்ளவன் நீ. ஒளி வீசுகின்ற குண்டலங்களையும் காதில் அணிந்துள்ளாய். உனது முடியோ அலையலையாக அழகாக உள்ளது.

5. ஹாத் வஜ்ர ஒள த்வஜா விராஜை காந்தே மூஞ்ஜ ஜனேவூ ஸாஜை

உனது கைகளை இடியும் கொடியும் அலங்கரிக்கின்றன. தோளையோ முஞ்ஜைப் புல்லாலான பூணூல் அணி செய்கிறது.

6. சங்கர ஸுவன கேசரீ நந்தன தேஜ ப்ரதாப மஹா ஜகவந்தன

நீ சிவபெருமானின் அவதாரம், கேசரியின் மகன், உனது தேஜசையும் வீரத்தையும் கண்டு உலகமே உன்னை வணங்குகிறது. அனுமனின் தந்தை கேசரி என்னும் வானரர் தலைவர். சிங்கத்தைப் போன்ற ஆற்றல் உடையவராக இருந்ததால் அவர் கேசரி என்னும் பெயர் பெற்றார். அனுமனின் தெய்வீகத் தந்தை வாயு பகவான்.

7. வித்யாவான் குணீ அதி சாதுர ராம காஜ கரிபே கோ ஆதுர

நீ அறிவாளி, நற்குணங்கள் நிரம்பப் பெற்றவன், மிகவும் கூரிய புத்தியை உடையவன், ஸ்ரீராமனின் பணிக்காக எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பவன்.

8. ப்ரபு சரித்ர ஸுனிபே கோ ரஸியா ராம லக்ஷமண ஸுதா மன பஸியா

இறைவன் திருப்புகழையும் பெருமையையும் கேட்பதில் நீ எப்போதும் பரவசம் கொள்கிறாய். ஸ்ரீராமனும் லட்சுமணனும் சீதையும் உனது மனத்தில் குடியிருக்கின்றனர்.

9. ஸூக்ஷ்ம ரூபதரி ஸியஹிம் திக்காவா விகட ரூப தரி லங்க ஜராவா

நீ மிகவும் நுண்ணிய உருவில் சீதையின் முன் வெளிப்பட்டாய், மிகவும் பயங்கார உருக்கொண்டு இலங்கையைக் கொளுத்தினாய்.

10. பீம ரூபதரி அஸுர ஸம்ஹாரே ராமசந்த்ர கே காஜ் ஸவாரே

மிகவும் பெரிய உருவம் கொண்டு அரக்கர்களை அழித்து ஸ்ரீராம காரியத்தை நிறைவேற்றினாய்.

11. லாய ஸஜீவன் லஷன ஜியாயே ஸ்ரீ ரகுவீர ஹரஷி உர லாயே

சஞ்சீவினி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனின் உயிரைக் காத்த போது ஸ்ரீராமன் உன்னை எத்தனை ஆனந்தத்துடன் தழுவிக் கொண்டார்!

12. ரகுபதி கீனி பஹுத் படாயீ தும் மம ப்ரிய ஹி பரதஸம பாயீ

ஸ்ரீராமன் உனது பெருமைகளை மிகவும் புகழ்ந்து, நீயும் பரதனைப் போலவே தமக்குப் பிரியமானவன் என்று கூறியருளினார்.

13. ஸஹஸ வதன தும்ஹரோ யச காவைம் அஸ கஹி ஸ்ரீபதி கண்ட லகாவைம்

ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட உனது பெருமைகளைப் புகழ்வதாக ஸ்ரீராமன் உன்னை அணைத்தபடியே கூறினார்.

14. ஸனகாதிக ப்ரஹ்மாதி முனீசா நாரத சாரத ஸஹித அஹீசா

ஸனகர் முதலான முனிவர்கள், பிரம்மா போன்ற தேவர்கள், சிவபெருமான், நாரதர், கலைமகள், ஆதிசேஷன் .

15. யம குபேர திகபால ஜஹாம் தே கவி கோவித கஹி ஸகைம் கஹாம் தே

எமன், குபேரன், திரைக் காவலர்கள், கவிஞர்கள், புலவர்கள், எல்லோரும் உனது பெருமைகளை விளக்க முயன்று தோல்வியே கண்டார்கள்.

16. தும் உபகார ஸுக்ரீ வஹிம் கீன்ஹா ராம மிலாய ராஜபத தீன்ஹா

ஸ்ரீராமனிடம் அறிமுகப்படுத்தி, சொந்த அரசை மீட்டுக்கொடுத்ததன் மூலம் நீ சுக்ரீவனுக்கு ஓர் இணையற்ற உதவியைச் செய்து விட்டாய்.

17. தும்ஹரோ மந்த்ர விபீஷண மானா லங்கேச்வர பயே ஸப் ஜக ஜானா

உனது அறிவுரைகளின்படி நடந்ததாலேயே விபீஷணன் இலங்கை அரசனானான் என்பது உலகம் முழுவதும் தெரிந்த விஷயம்.

18. யுக ஸஹஸ்ர யோஜன பர பானூ லீல்யோ தாஹி மதுர பல ஜானூ

பதினாறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்த சூரியனை, கனியென எண்ணி நீ விழுங்கிவிட்டாய்.

19. ப்ரபு முத்ரிகா மேலி முக மாஹீம் ஜலதி லாந்தி கயே அசரஜ் நாஹீம்

ஸ்ரீராமனின் முத்திரை மோதிரத்தை வாயில் தங்கியபடியே நீ கடலைக் கடந்துவிட்டாய். (உனது அளப்பரிய ஆற்றல்களைக் கணக்கிடும் போது) இது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல.

20. துர்கம காஜ் ஜகத் கே ஜேதே ஸுகம அனுக்ரஹ தும்ஹரே தேதே

எத்தனைக் கடினமான செயலும் உனதருளால் எளிதல் நிறைவேறிவிடும்.

21. ராம துவாரே தும் ரக்வாரே ஹோத ந ஆஜ்ஞா பின பைஸாரே

ஸ்ரீராம ராஜ்யத்தின் வாயிற் காவலன் நீ. உனது அனுமதியின்றி அங்கு யாரும் நுழைய முடியாது.

22. ஸப் ஸுக லஹை தும்ஹாரீ ஸரனா தும் ரக்ஷக காஹூ கோ டர்னா

உன்னைச் சரணடைபவர்கள் எல்லா இன்பங்களையும் பெறுகின்றார்கள். நீ பாதுகாவலனாக இருக்கும் போது எதற்காகப் பயப்பட வேண்டும்

23. ஆபன் தேஜ் ஸம்ஹாரௌ ஆபை தீனோம் லோக ஹாங்க்தே காம்பை

உனது ஆற்றலைக் கட்டுபடுத்த உன்னால் மட்டுமே முடியும். உனது ஆற்றலின் முன் மூன்று உலகங்களும் நடுங்குகின்றன.

24. பூத பிசாச நிகட நஹிம் ஆவை மஹாவீர ஜப் நாம ஸுனாவை

மகாவீரன் என்னும் உனது திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது, துன்பம் விலகுகிறது.

25. நாசை ரோக் ஹரை ஸப் பீரா ஜபத நிரந்தர ஹனுமத் வீரா

உனது ஆற்றல் மிக்கத் திருநாமத்தை இடைவிடாது கூறினால் நோய் அகல்கிறது துன்பம் விலகுகின்றது. மனோ தைரியம் உண்டாகின்றது.

26. ஸங்கட ஸே ஹனுமான் சோடாவை மன க்ரம வசனத்யான ஜோ லாவை

மனம், வாக்கு, செயலால் அனுமனைத் தியானிக்கும் ஒருவனை, அவர் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுவிக்கிறார்.

27. ஸப் பர் ராம் தபஸ்வீ ராஜா தின்கே காஜ் ஸகல தும் ஸாஜா

தவம் புரிகின்ற பக்தர்களின் மேலான ஆசைகளை நிறைவேற்றுகின்ற ஸ்ரீராமனின் பணிகளை நீ நிறைவேற்றினாய்.

28. ஒளர் மனோரத ஜோ கோயி லாவை தாஸு அமித ஜீவன் பல பாவை

மேலும் பக்தனின் ஆசைகளை நிறைவேறுவதுடன் அவன் அழியாக்கனியாகிய இறையனுபூபதியையும் பெறுகிறான்.

29. சாரஹு யுக பரதாப தும்ஹாரா ஹை பரஸித்த ஜகத உஜியாரா

சத்திய, திரேதா, துவாபர, கலி என்னும் நான்கு யுகங்களிலும் உனது பெருமை போற்றப்படுகிறது. உனது திருநாமம் உலகம் முழுவதும் சிறக்கிறது.

30. ஸாது ஸந்த கே தும் ரக்வாரே அஸுர நிகந்தன ராம துலாரே

நல்லோரையும் ஞானியரையும் நீயே காக்கிறாய். ஸ்ரீராமனின் மனத்துக்கு உகந்தவனான நீயே தீய சக்திகளை அழிக்கிறாய்.

31. அஷ்ட ஸித்தி நவ நிதி கே தாதா அஸ் வர தீன் ஜானகீ மாதா

எட்டுவித சித்திகளையும் ஒன்பதுவிதச் செல்வங்களையும் கேட்பவருக்கு அளிக்கம் ஆற்றலை சீதா தேவி உனக்கு அருளினாள்.

எட்டுவித சித்திகள்:

1. அணிமா-அணு போலாதல் 2. மஹிமா-எல்லையற்று எடை உடையவராதல் 3. கரிமா-எல்லையற்ற எடை உடையவராதல் 4. லகிமா-எடையே இல்லாது போலாதல் 5. ப்ராப்தி-நினைத்த இடத்திற்குச் செல்ல முடிதல் 6. ப்ரகாம்யம்-விரும்பியது கைகூடல் 7. ஈசித்வம்-இறைவனைப் போலாதல் 8. வசித்வம்-அனைவரையும் அடக்கி ஆளுதல்

ஒன்பது விதச் செல்வங்கள் ஒன்பது வகை பக்தியைக் குறிக்கிறது.

32. ராம் ரஸாயள தும்ஹரே பாஸா ஸதா ரஹெள ரகுபதி கே தாஸா

ஸ்ரீராம பக்தி என்பதன் சாரமே உன்னிடம் உள்ளது. எப்போதும் நீ அவரது சேவகனாகவே இருப்பாய்.

33. தும்ஹரே பஜன் ராம்கோ பாவை ஜன்ம ஜன்ம கே துக்க பிஸராவை

உன்னிடம் பக்தி கொள்வதால் ஒருவன் ஸ்ரீராமனை அடைகிறான். எத்தனையோ பிறவிகளில் தொடர்ந்து வந்த துன்பங்கள் அவனை விட்டு அகல்கின்றன.

34. அந்த கால ரகுபதி புர ஜாயீ ஜஹாம் ஜன்மி ஹரிபக்த கஹாயீ

அவன் தன் வாழ்வின் முடிவில் ஸ்ரீராமனின் உறைவிடம் செல்கிறான். அங்கு அவன் ஹரி பக்தனாக மதிக்கப்படுகிறான்.

35. ஒளர் தேவதா சித்த ந தரயீ ஹனுமத் ஸேயி ஸர்வ ஸுக கரயீ

அனுமனைத் தவிர வேறு எந்தத் தெய்வத்திடமும் மனத்தைச் செலுத்தாத ஒருவனுக்கும் எல்லா இன்பங்களும் நிறைகின்றன.

36. ஸங்கட ஹரை மிடை ஸப் பீரா ஜோ ஸுமிரை ஹனுமத பல பீரா

எல்லாம் வல்ல ஆஞ்சநேயரை நினைப்பவரின் துன்பங்களும் துயரங்களும் விலகி ஓடுகின்றன.

37. ஜய் ஜய் ஜய் ஹனுமான் கோஸாயீ க்ருபா கரஹு குருதேவ கீ நாயீ

ஓ ஆஞ்சநேயா, உனக்கு வெற்றி, வெற்றி, வெற்றி உண்டாகட்டும். ஓ பரம குருவே, எங்களுக்கு அருள்புரிவீர்களாக.

38. ஜோ சத பார் பாட கர ஜோயீ சூடஹி பந்தி மஹாஸுக ஹோயீ

இந்தத் துதிகளை நூறு முறை பக்தியுடன் படிப்பவர்களுக்கு உலகத்தளைகள் எல்லாம் நீங்கப் பெற்று பரமானந்தத்தை அனுபவிக்கின்றனர்.

39. ஜோ யஹ் படை ஹனுமான் சாலீஸா ஹோய் ஸித்தி ஸாகீ கௌரீஸா

இந்த ஹனுமான் சாலீஸாவைப் படிப்பவர்களுக்கு சிவபெருமான் அருள் புரிகிறார் அவன் பரிபூரண நிலையை அடைகின்றனர்.

40. துளஸீதாஸ ஸதா ஹரி சேரா கீஜை நாத ஹ்ருதய மஹ டேரா

என்றென்றும் தம் இதயத்தில் இறைவன் எழுந்தருளி வாழட்டும் என்று அவரது நித்திய சேவகனான துளஸுதாசன் பிரார்த்திக்கிறான்.

பவன தனய ஸங்கட ஹரன், மங்கள மூரதி ரூப ராமலஷமன் ஸீதா ஸஹித ஹ்ருதய பஸஹு ஸுரபூப

துன்பங்களைப் போக்குபவனுக்கு மங்கள உருவினனும் தேவர்களின் தலைவனும் வாயு மைந்தனும் ஆகிய ஸ்ரீ ஆஞ்சநேயர் எனது இதயத்தில் ஸ்ரீராம லட்சுமண சீதையுடன் நிலவட்டும்.

நன்றி: ஸ்ரீ வன்னி விநாயகர் புத்தக நிலையம், மீனாட்சி அம்மன் கோயில், மதுரை.