Thursday, August 30, 2012

ஓணம் பண்டிகையும் கொண்டாட்டமும்


கேரள மக்களினால் இன்று ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக கொண்டாடப்படுகிறது.
சாதி, மத வேறுபாடின்றி அனைத்து மலையாளிகளாலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை, கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப்பழம்பெரும் பண்டிகைகளில் ஒன்றாக இணங்காணப்பட்டுள்ள ஓணம் பண்டிகைக்கு கிட்டத்தட்ட ஓராயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளது.

அத்தம், சித்திரா, சுவாதி என தொடங்கும் 10 நாள் விழா,  பத்தாம் நாள் திருவோணம் எனும் கொண்டாட்டத்துடன் முடிவடைகிறது.  ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு விசேஷம் இருக்கிறது. நான்காம் நாள், ஒன்பது சுவைகளில், ஓண சாத்யா எனும் உணவு தயார் செய்யப்படுகிறது.

அன்று புலிக்களி அல்லது கடுவக்களி என அழைக்கப்படும் புலி வேடமிட்ட நடனம் நடைபெறுகிறது. சிவப்பு, கருப்பு மற்றும் மஞ்ள் வண்ணத்தினால் புலி வேடமிட்டு நடனம் ஆடி மகிழ்கின்றனர்.


ஐந்தாம் நாள் கேரளாவின் பாரம்பரியமான படகு போட்டி நடத்தப்படுகிறது. தொடர்ந்து பத்து நாட்களும் கேரள வீட்டுப்பெண்கள் பூக்களினால் ஆன அத்தப்பூ எனும் கோலங்கள் இட்டு ஆடிப்பாடி மகிழ்கிறார்கள். 10ம் நாள் அதிகாலையிலேயே எழுந்து குளித்து வழிபாடு செய்து கசவு எனும்சொல்ல கூடிய சுத்தமான வெண்ணிற ஆடையை உடுத்துகின்றனர். அன்று சிறப்பு யானைத்திருவிழா நடைபெறுகிறது. யானைகளுக்கு விலை உயர்ந்த பொன் மற்றும் மணிகளால் ஆன தங்க கவசங்களாலும், பூ தோரணங்களாலும் அலங்கரித்து அணித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துகிறார்கள்.

சிவாலயமொன்றில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரியை தூண்டி பிரகாசமாக எரிய உபகாரம் செய்ததற்காக எலி ஒன்றுக்கு மூன்று லோகத்தையும் ஆட்சி செய்யும் அதிகாரத்தை சிவபெருமான் வழங்கியதாகவும், அந்த எலியானது மறுபிறப்பில் மகாபலி எனும் பெயருடன மாமன்னனாக பிறந்து கேரளத்தை சிறப்பாக ஆட்சி செய்து வந்ததாகவும் வரலாறு கூறுகிறது. அவரது ஆட்சிக்காலத்தில் மக்கள் மகிழ்ச்சியுடனேயே வாழ்ந்த போதும், அசுரகுலத்தின் அசுரவேக வளர்ச்சியை கண்ட தேவர்கள் மகாபலி மன்னனுடன் போரிட்டு தோல்வி அடைந்ததால், திருமாலிடம் அடைக்கலம் புகுந்தனர்.

மகாபலி மன்னர் ஒரு முறை வேள்வி செய்யும் போது திருமால் வாமணணாக (குள்ள உருவில்) உருவெடுத்து வந்து மூன்றடி மண் கேட்டார். ஒரு அடியால் இந்த பூமையும் மறு அடியால் விண்ணையும் அளந்த திருமாலுக்கு மூன்றாவது அடிக்காக தனது தலையை கொடுத்தான் பலி மகாராஜா. அவனுக்கு முக்தி அளிக்க வேண்டி அவன் தலையில் கால் வைத்து அவனை பாதாள உலகிற்கு தள்ளினார் திருமால்.

எனினும் தனது நாட்டு மக்கள் மிகுந்த அன்பு வைத்திருப்பதாலும், வருடம் ஒரு முறை பாதாளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களை கண்டு மகிழும் வரம் வேண்டியதாலும் ஒவ்வொரு திருவோணத்திருநாள் அன்றும் மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகத்திற்கு வந்து, தங்களது வீடுகளுக்கு வந்து செல்வதாக மக்கள் நம்புகின்றனர். முக்கியமாக ஓணம் பண்டிகை மகாபலி வதம் நடந்த இடமான திருக்காட்கரை காட்கரையப்பன் கோயிலில் மிகவும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் மட்டுமின்றி, மலையாள மொழி பேசும் மக்கள் அதிகமாக வாழும் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், போன்ற அண்டை மாநிலகங்களிலும் ஓணம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஓணத்தையொட்டி கேரளாவை ஒட்டிய குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது.
தகவல் உதவி : விக்கிபீடியா

Wednesday, August 29, 2012

சீனப் பெருஞ்சுவரை பற்றிய தகவகள் !!!

Photo: சீனப் பெருஞ்சுவரை பற்றிய தகவகள் !!!

உலகின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாக, சீனப் பெருஞ்சுவர் கருதப்படுகிறது. இந்த நீண்ட சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், இயற்கை சீற்றங்களையெல்லாம் எதிர்த்து இன்றும் உறுதியுடன் உள்ளது. இது தொடர்பாக, பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சீஜியாங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், சீனப் பெருஞ்சுவரின் உறுதி தன்மைக்கு, அரிசி கஞ்சி, சுண்ணாம்பு மற்றும் சுண்ணாம்புக்கல் கலந்த சாந்து பொருள் தான் காரணமென தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக விஞ்ஞானிகள் கூறியதாவது:பழங்கால சீன கட்டட கலைக்கு சான்றாக, சீனப் பெருஞ்சுவர் விளங்குகிறது. இந்த சுவர் கட்டப்பட்டு, 1,500 ஆண்டுகளை கடந்துவிட்டாலும், அதே உறுதியுடன் இருப்பதற்கு, அரிசி கஞ்சியுடன், சுண்ணாம்பு, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பொருட்களை கொண்டு, உருவாக்கப்பட்ட கலவையால், கற்களை இணைத்துள்ளது தான் காரணம்.

இந்த கலவையில், தாவர பொருட்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. உயிரற்ற பொருளான சுண்ணாம்பில், கால்சியம் கார்பனேட் உள்ளது. தாவரத்திலிருந்து எடுக்கப்படும் அரிசி கஞ்சியில், “அமிலோபெக்டின்’ என்ற மாவுச்சத்து உள்ளது.சுண்ணாம்பு மற்றும் அரிசி கஞ்சி உள்ளிட்ட பொருட்களை கலந்து கலவை உருவாக்கும்போது, அரிசி கஞ்சியில் உள்ள “அமிலோபெக்டின்’ கலவைக்கு ஒட்டும் தன்மையை கொடுக்கிறது. இந்த கலவையை, கற்களுக்கு இடையில் வைத்து கட்டும்போது, அந்த சுவர் மிகவும் உறுதியாக மாறுகிறது. மேலும், சுவர்களில், விரிசல் ஏற்படாமலும், அதில் காளான், பூஞ்சை போன்றவை ஏற்படாமலும் சுவரை பாதுகாக்கிறது.
இந்த கலவையை கொண்டுதான், சீனப்பெருஞ்சுவரும், அதில் உள்ள கண்காணிப்பு கோபுரங்களும் கட்டப்பட்டுள்ளன. இது கட்டப்பட்ட பின், பல்வேறு போர்களை சந்தித்துள்ளது. பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்களால், இதை உடைக்கும் முயற்சிகள் எல்லாம் தோற்றன.மேலும் நிலநடுக்கம் போன்ற பல்வேறு இயற்கை சீற்றங்களையும் தாங்கி, அதே உறுதியுடன் இந்த சுவர் நீடித்து நிற்கிறது.பழங்கால கட்டடக்கலை வல்லுனர்கள், எத்தகைய பொருட்களை பயன்படுத்தினர் என்பது குறித்த முழுமையான விவரங்கள் கிடைக்குமா என்பது தெரியாது. இருப்பினும் தொடர்ந்து எங்கள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளோம். இவ்வாறு விஞ்ஞானிகள் கூறினர்.

உலக மக்கள் தொகையில் முத்லிடத்தை பிடித்த சீனாவின் கிழக்கில்ஷான்ஹாயில் தொடங்கி லோப்நூர் வழியாக மேற்க்கில் சென்று தெற்க்கெ மங்கோலியாவின் உட்ப்பகுதிவரை செல்கிறது சீனப்பெருஞ்சுவர், வானுயர்ந்த மலைகள் மணல் பாலைவனங்கள் பள்ளத்தாக்குகளை கடந்து செல்லும் சுவரின் நீளம் 6400கிலோமீட்டர்கள்,எந்தவொரு தொழில்நுட்ப்பமும் இல்லாத இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்படுள்ளது மிகப்பெரும் அதிசயம்.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு அதாவது கி.பி இரண்டாம் நூற்றாண்டில் சீனவிற்க்கு அச்சுறுத்தல்கள் அதிகம் திடீர் திடீரென்று அண்டை நாடுகள் சீனாவின் மீது படையெடுத்து வந்தன இது சீன அரசர்களுக்கு தீராத பிரச்சினையாக இருந்து வந்தது, இதை எப்படி தீர்ப்பது என்று ஆராய்ந்து பார்த்து இறுதியாக சீனாவின் எல்லைப்பகுதியில் மாபெரும் சுவர் ஒன்றை கட்டுவது என்று முடிவெடுத்து உடனடியாக வேலையில் இறங்கினார்கள், அதாவது கி.பி 206 இல் முதல் சின்வம்சத் அரசன் இதை கட்டத்தொடங்கினான் பதினைந்து வருடங்கள் இந்த பெருஞ்சுவரை கட்டினார்கள்

குடி மக்களில் வீட்டுக்கு ஒருவர் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்,கிட்டத்தட்ட மொத்த மக்கள் தொகையில் 70 % பேர் இப்பணியில் ஈடுபட்டனர், கி.பி 221ல் 5000 கிலொமீட்டர் தூரம்வரை கட்டினர் இதற்க்கு வான்-லி-குவான்ங்-கெங் என்று பெயர் வைத்தனர், 4.5 மீட்டர் முதல் 9 மீட்டர் வரை இதன் அகலம் இருந்தது, இவ்வளவு பெரிய சுவரை கட்டியும் ஏனோ அவர்களுக்கு திருப்தி ஏற்ப்படவில்லை, சுவரின் நீளத்தை அதிகரிக்க முடிவு செய்து கி.பி 1368 லிருந்து 1644 வரை ஆட்சி செய்த மிங் வம்ச மன்னர்கள் மீண்டும் சுவர் கட்டும் வேலையை தொடங்கினார்கள், மொத்தம் 6400 கிலொமீட்டர் வரை கட்டினார்கள், பின்பு இந்த சுவரில் மறு சீரமைப்பு பணியை தொடங்கினார்கள் இதுவெ 200 ஆண்டுகள் வரை நீடித்தது , சுவரில் குறிப்பிட்ட இடைவெளியில் வீரர்கள் தங்குவதற்க்கும் ஆயுதங்களை வைத்துக் கொள்ளுவதற்க்கும் அறைகள் கட்டப்பட்டுள்ளன, ஆபத்து காலங்களில் அந்த அறைகளில் இருந்து புகை போட்டு படை வீரர்கள் எச்சரிக்கை விடுப்பார்கள்.கி.பி1987ல் சீனப்பெருஞ்சுவர், உலக அதிசயங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது,மனிதனால் கட்டப்பட்டு விண்வெளியில் இருந்தும் பார்க்கக்கூடிய ஒரே இடம்சீனப்பெருஞ்சுவர்.
இந்த சுவர் சீனாவின் அடையாளமாக உள்ளது, தலைநகர் பெய்ஜிங்கில் இருந்து 50 கிலொமீட்டர் தொலைவில் இருக்கும் சைமைதாயு மற்றும் மடியான்யு என்ற இரண்டு இடங்களில் மட்டும் இப்போது சுற்றுலாப் பயணிகள் சுவரை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்

சீனப் பெருஞ்சுவர் - சில குறிப்புகள்

சீனப் பெருஞ்சுவரின் உயரம் 25 அடி. நீளம் 7500 கிலோ மீட்டர். சுவர்களுக்கு மத்தியில் உள்ள பாதையின் அகலம் 20 அடி. இது சில இடங்களில் 15 அடியாக உள்ளது. மேலும், இதுவரையிலான உலகின் மிகப்பெரிய கட்டுமானத் திட்டங்களில் இதுவே மிகப் பெரியதாகும். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
Posted by venkatesh at 10:35 AM 

சீனப் பெருஞ்சுவரின் நீளம் எவ்வளவு?

சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளத்தைக் கண்டுபிடிக்க, ஏப்ரல் திங்களில் பிரம்மாண்ட அளவீட்டுப் பணி தொடங்கியுள்ளது.

உலக அதிசயங்களில் ஒன்று, சீனப் பெருஞ்சுவர். பகைவர்களின் படை எடுப்பிலிருந்து சீனாவின் வட பகுதியைக் காப்பாற்ற, இந்த மாபெரும் பாதுகாப்பு அரண் கட்டப்பட்டது.

கி.மு. 220இல் தொடங்கிய இதன் கட்டுமானப் பணி இறுதியில், 1368-1644 வரையிலான மிங் வம்ச ஆட்சிக் காலத்தில் தான் நிறைவடைந்தது.

இதன் நீளம்,10 ஆயிரம் லீ அதாவது 5000கிலோ மீட்டர் என்றும், அகலம் சராசரியாக 6 மீட்டர் என்றும் கூறப்படுகிறது. எனினும் இவை தோராயமான அளவுகள் தான்.

இதனால், பெருஞ்சுவர் பற்றிய துல்லியமான புள்ளி விபரங்களைக் கண்டறிய வேண்டும் என்று சீன வரலாற்று அறிஞர்கள் வற்புறுத்தியுள்ளனர்.இதைத் தொடர்ந்து,பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் முயற்சிகள், 1980ஆம் ஆண்டு துவங்கின. ஆனால், தொழில் நுட்ப வசதிகள் குறைவாக இருந்ததால் இம்முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

தற்போது, தொழில் நுட்பத் துறையில் சீனா பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. எனவே, பெருஞ்சுவர் பற்றிய புள்ளிவிபரங்களைச் சேகரிக்கும் பணியை மீண்டும் தொடங்கச் சீன அரசின் தொடர்புடைய வாரியங்கள் முடிவு செய்துள்ளன.

இந்த மாபெரும் அளவீட்டுப் பணி,4 ஆண்டு காலம் தொடரும். இதன் மூலம் சீனப் பெருஞ்சுவரின் துல்லியமான நீளம், வரைபடம், தற்போதைய நிலை ஆகிய புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படும்.

டைடானிக் கப்பல் பற்றிய தகவல் !!!

Photo: டைடானிக் கப்பல் பற்றிய தகவல் !!!

டைடானிக் என்று சொன்னாலே டைடானிக் படம் தான் நமக்கு எல்லாம் நியபகதிர்க்கு வரும் .ஆனால் அந்த கப்பல் பற்றிய தகவல் அவளவாக நமக்கு தெரியாது . அதை பற்றிய சில தகவல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் 

முதல் முதலாக கப்பல் கட்டுமானத்தில் டைடானிக் மூழ்காத (Unsinkable) ஒரு கப்பலாக மிகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. டைடானிக் கப்பல் விபத்து முதலும் கடைசியுமாக மூழ்கிய கடல் பயணத்தின் சோகமான பதிவாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. டைடானிக் கப்பல் விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகளை 2012 ம் ஆண்டு கடக்கவுள்ளது.

டைடானிக் விபத்தின் பதிவுகள் இன்றுவரை பசுமையுடன் நினைவு கொள்ளப்படுகின்றது , இதனால் இது தொடர்பாக வெளியான புத்தகங்கள் , திரைப்படங்கள் எண்ணிக்கை வரலாற்றில் மிகப்பெரியது. இந்தவகையில் டைடானிக் கப்பல் விபத்தினை வெகு நேர்த்தியுடன் நிஜமாக மக்கள் கண்முன் 1997ம் வருடத்தில் வெளிவந்த "டைடானிக்" திரைப்படம் கொண்டுவந்தது. திரைப்படம் சொல்லிய காதல் கதை தவிர அனைத்து காட்சிகளும் சம்பவ தின நிகழ்வின் சாட்சியங்களின் அடிப்படையில் படமாக்கப்பட்டதாகும். 

பல நூறு பக்கங்களில் சொல்லமுடியாத சோக சம்பவத்தினை 194 நிமிடத்தில் தத்ரூபமாக காண்பித்து 11 ஆஸ்கார் விருதுகளை 1997 இல் மிகப்பெரிய சாதனை திரைப்படம் டைடானிக் பெற்றது . 200 மில்லியன் டாலர் செலவில் தயாரான டைடானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை பெற்ற சாதனை மட்டுமல்ல வசூலிலும் 1.85 பில்லியன் (1850 மில்லியன்) டாலர் மேலாக இதுவரை குவித்துள்ளது . மேலும் டைடானிக் கப்பல் விபத்து பற்றியதான 14 திரைப்படங்களும் , சின்ன திரைகளும் இதுவரை வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மிகவும் சோகம் நிறைந்த டைடானிக் கப்பல் விபத்து தொடர்பான முக்கிய தகவல்கள் கீழ்வருமாறு.

டைடானிக்கின் முழு பெயர் RMS Titanic (Royal Mail Steamer Titanic).
அயர்லாந்து (Ireland) நாட்டின் பெல்பாஸ்ட் (Belfast) நகரில் கட்டப்பட்டது.

டைடானிக் கப்பல் கட்டுமானம் 1909 மார்ச் 31 ம் திகதி தொடங்கி 1911 மே 31ம் திகதி முடிவுற்றது.

3,000 வேலையாட்கள் 3 மில்லியன் தறையாணி (கடாவி) களை பாவித்து கப்பலை கட்டிமுடித்தனர்.

அன்றய காலத்தில் டைடானிக்கை கட்டிமுடிக்க 7.5 மில்லியன் டொலர் பணம் செலவிட்டனர், அதன் இன்றய பெறுமதி 4,000 மில்லியன் டொலர் என கணக்கிடப்படுகின்றது.

முதலாவது பயணம் (கன்னி) 1912 ஏப்பிரல் 10 ம் திகதி தொடங்கப்பட்டது.

கப்பலின் நீளம் 882 அடி (269.1 மீற்றர்) , உயரம் 175 அடி (53.3 மீற்றர்) , மொத்த எடை 46,328 தொன் , வேகம் 21 நொட் (39 கிலோமீற்றர்/மணி) இதன் அதிகவேகம் 23 நொட் (43 கிலோமீற்றர்/மணி).
டைடானிக் கப்பல் அதிகபட்சம் 3,547 பயணியளையும் சிப்பந்திகளையும் கொள்ளக்கூடியது.

டைடானிக் கப்பல் கட்டுமானத்தில் அன்று இருக்கக்கூடிய அனைத்து தொழில்நுட்பமும் அதிகபட்சம் பாவித்து கட்டப்பட்டது.
ஒருநாளைக்கு 825 தொன் நிலக்கரியை டைடானிக் இயந்திரம் இயக்க பயன்படுத்தப்பட்டது.

டைடானிகில் மொத்தம் 9 தட்டுக்கள் (மாடிகள்) , அத்துடன் ஆழம் 59.5 அடி எனவும் உயரம் 60.5 அடி எனவும் சொல்லப்படுகின்றது.
மொத்தமாக 4 புகை போக்கிகள் , இவற்றின் மொத்த உயரம் 175 அடி , இதில் 3 புகை போக்கவும் 1 காற்று போக்கியாகவும் பயன்பட்டது.
ஒருநாளைக்கு கப்பலுக்கு தேவைப்படும் சுத்தமான தண்ணீர் 14,000 கலன் கொள் அளவு.

டைடானிக்11 மாடி உயரமான கட்டிடதிற்கு சமமாக ஒப்பிடப்படுகின்றது , இந்த கப்பலை வர்ணமூட்ட பெருமளவில் கறுப்பு மையுடன் வெண் வர்ணமும் பாவிக்கப்பட்டது.
முதலாவது நீச்சல் தடாகம் உள்ள கப்பலாக டைடானிக் வடிவமைக்கப்பட்டது.
விபத்து நடந்த தினம்....................................

1912 ஏப்ரல் 10 ம் திகதி அயர்லாந்தில் இருந்து பிரான்ஸ் வழியாக2,228 பேருடன் (1,343 பயணிகள் , 885 மாலுமிகள்) மறுநாள் (1912 ஏப்பிரல் 13 ம் நாள்) நியூயோர்க் நோக்கி டைடானிக் புறப்பட்டது.

அமைதியான கடலில் கரும் இருட்டில் (அமாவாசை) 5 நொட்டுக்கள் வேகத்தில் டைடானிக் பயணித்துக் கொண்டிருந்தது.

அன்றய தினம் (1912 ஏப்பிரல் 14 ம் நாள்) பயணிகள் தகவல் பரிமாறும் வானொலி தொடர்பில் பனிப்பாறை பற்றிய முன் எச்சரிக்கை இரு முறை ஒலிக்கப்பட்டது

220 அடியிலிருந்து 240 அடி நீளமான பனிப்பாறையுடன் இரவு 11.40 மணிக்கு டைடானிக் மோதல் நடைபெற்றது.

டைடானிக் கப்பலின் கீழ் பகுதியில் உத்தேசமாக12 சதுர அடி துளை (வெடிப்பு) மோதல் காரணத்தினால் உண்டாகின்றது.
அன்றிரவு 12 மணி இலிருந்து மூழ்க ஆரம்பித்த கப்பல் காலை 2.20 மணி (15ம் ஏப்பிரல்) முழுமையாக மூழ்கியது.

அன்றய பனிப்பாறை விபத்தில் மாட்டிய டைடானிக் கப்பலில் இருந்த 20 உயிர்காப்பு படகுகளில் 705 சிறுவர்கள் , பெண்கள் மட்டும் உயிர் தப்பியதுடன் மிகுதி 1,523 பேர் கடலில் மாண்டனர்.

டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பெரிய பகுதிகளாக உடைந்து மூழ்கியது உயிர் தப்பிய பயணிகளால் அவதானிக்கப்பட்டது.
அன்று கடல் விபத்தில் பலியான 1,523 பேரில் (பயணிகள், மாலுமிகள்) 300 பேரின் உடல்கள் மட்டும் பின்னர் மீட்கப்பட்டது.
74 வருடங்களின் பின்................

அத்திலாந்திக் சமுத்திரத்தின் அடியில் (12,600 அடி அல்லது 3,925 மீற்றர் அல்லது இரண்டரை மைல் ஆழத்தில் ) இயந்திர நீர்மூழ்கி (Alvin,robot) உதவியுடன் டைடானிக் சிதைவு கண்டுபிடிக்கப்பட்டது.
டைடானிக் மூழ்கும் வேளையில் இரு பகுதிகளாக உடைந்த பாகங்கள் சமுத்திர அடியில் 1,970 அடி தூரத்தில் இருக்க காணப்பட்டது.

மேலும் சில தகவல்...

அன்றய பயணத்தில் முதல் வகுப்பில் மட்டும் 870 பயணிகள் பயணம் செய்தனர். முதல் வகுப்பிற்கு ஒவ்வொருவரும் 4,350 டொலர்களை அன்று செலுத்தினர் எனவும் இது இன்றய பெறுமதியில் 80,000 டொலருக்கு சமமானது எனவும் சொல்லப்படுகின்றது

மூலிகை வளம் நிறைந்த குற்றால அருவிகள் !!!!

Photo: மூலிகை வளம் நிறைந்த குற்றால அருவிகள் !!!!

குற்றாலம் என்றதும் நமது நினைவுக்கு வருவது அழகிய நீர்வீழ்ச்சி.
பசுமையான மலைத்தொடரும்,அடர்ந்த வனங்களும், மூலிகைப் புதர்களும், அரிய வன விலங்குகளும், பறவைகளும் நிறைந்த அற்புத பூமி குற்றாலம். தென்னாட்டின் மூலிகைக் குளியலறை அல்லது தென்னகத்து ஸ்பா என்று பெருமையோடு அழைக்கப்படும் இந்த குற்றாலம் ஏழைகளும் அனுபவிக்கும் இயற்கை சீதனம். குற்றாலத்தின் குளுமையை அனுபவிக்கவே ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான மக்கள் இந்நகருக்கு வந்து செல்கின்றனர். தென் தமிழ்நாட்டில் உள்ள புகழ்மிக்க அருவி நகரான குற்றாலத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம். 

குற்றால சீசன் காலம் 

தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இந்த அருவி நீர் உடலையும், மனதையும் ஒருங்கே குளிர்வித்துக் கொண்டிருக்கும் இயற்கை அதிசயம். 

தென்மேற்குப் பருவ மழை உச்சத்தில் இருக்கும் பொழுது ஓயாத சாரலுடனும், பெருத்த காற்றுடனும், மழைநீர் பெருக்கெடுத்து வெள்ளமாக வெள்ளியை உருக்கி விட்ட அருவிகளாகக் கொட்டுகிறது. அந்த உச்ச கட்ட பருவ காலத்தில் குற்றாலத்தில் தங்கியிருந்து அந்த இதமான சாரலை அனுபவிப்பது பொன்னான அனுபவம். ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் வரை அருவிகளில் தண்ணீர் கொட்டும் காலமே "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. 

இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும். குற்றாலத்தில் பேரூராட்சி மற்றும் தனியாருக்கு சொந்தமான விடுதிகள் உள்ளன. முக்கிய அருவி எனப்படும் பேரருவியில் பெண்கள் குளிப்பதற்கு தனியான இடம் அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்கள் மிகவும் குளிர்ந்து காணப்படுவதால் அதற்கேற்ற உடைகளை எடுத்துச் செல்வது நல்லது.

மூலிகைகளும், பழவகைகளும் 

இந்த அருவி நீர் பல்வேறு மூலிகை குணங்கள் உடையனவாகவும், பல நோய்களுக்கு குணமளிப்பதாகவும் ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. மலையின் மேல் ஓடி வரும் மழைநீர் வெள்ளம், மூலிகைச் சாறுகளுடன் கலந்து தண்ணோடு பல்வேறு கனி மங்களையும் சேர்த்துக் கொண்டு, மலையின் பல பாகங்கள் வழியே கீழே பாய்கின்றன. பாக்கும், தெளிதேனும், பாகும், பலாவும் நிறைந்த மலை. இங்கு 2000 வகையான மலர்களும், செடிகளும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ரங்குஸ்தான், மலை வாழை, டொரியன், பலா, மங்குஸ்தான், சீதா, கொய்யா, சப்போட்டா, மா, நெல்லி, போன்ற எண்ணற்ற பழ வகைகள் இந்த மலைகளில் காய்க்கின்றன. பல அறிய மூலிகைகள் மலையின் மேலும் பண்ணைகளிலும் வளருகின்றன.

குற்றாலம் அருவியில் குளிப்பது என்பது குதூகலமான ஒன்று என்பதையும் விட, இந்த அருவிக்கு மருத்துவ குணம் இருப்பதும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் உள்ளது.

குற்றாலம் அருவி

குற்றாலம் அருவி
அமைவிடம் தென்காசி
ஆள்கூறு 8.9217° N 77.2786° E
மொத்த உயரம் 290 அடி

குற்றால அருவிகள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டகுற்றாலம் பேரூராட்சியில், மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளவை. இது தென்னகத்தின் "ஸ்பா" என்றழைக்கப்படுகிறது.

இது சிற்றாறு, மணிமுத்தாறு, பச்சையாறு மற்றும் தாமிரபரணி ஆறுகளின் பிறப்பிடமாகும்.பல்வேறு மூலிகைகளில் கலந்து வரும் தண்ணீர் ஆதலால் இதில் நீராடுவது ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒன்பது அருவிகள்

குற்றால அருவிகள் என மொத்தம் ஒன்பது அருவிகள் காணப்படுகின்றன.

1. பேரருவி - இது பொதுவாக குற்றால அருவி என அழைக்கப்படுகிறது. இது 288 அடி உயரத்தில் இருந்து பொங்குமாங்கடல் என்ற ஆழமான ஒரு துறையில் விழுந்து பொங்கி பரந்து விரிந்து கீழே விழுகிறது.

2. சிற்றருவி - இது நடந்து செல்லும் தூரத்தில் பேரருவிக்கு மேல் அமைந்துள்ளது.

3. செண்பகாதேவி அருவி - பேரருவியில் இருந்து மலையில் 2 கி.மீ. தூரம் நடைப்பயணத்தில் செண்பகாதேவி அருவியை அடையலாம். இந்த அருவி தேனருவியிலிருந்து இரண்டரை கி.மீ. கீழ்நோக்கி ஆறாக ஓடி வந்து 30 அடி உயரத்தில் அருவியாக கொட்டுகிறது. அருவிக்கரையில் செண்பகாதேவி அம்மன் கோவில் உள்ளது. சித்ரா பவுர்ணமி நாளில் இந்த கோவிலில் சிறப்பான விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

4. தேனருவி - செண்பகாதேவி அருவியின் மேல் பகுதியில் உள்ளது. இந்த அருவி அருகே பல தேன்கூடுகள் அமைந்துள்ளதால் இந்த இடம் அபாயகரமானது. இந்த அருவிக்கு சென்று குளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.

5. ஐந்தருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 5 கி.மீ., தூரத்தில் உள்ளது. திரிகூடமலையின் உச்சியில் இருந்து 40 அடி உயரத்திலிருந்து உருவாகி சிற்றாற்றின் வழியாக ஓடிவந்து 5 கிளைகளாக பிரிந்து விழுகிறது. இதில் பெண்கள் குளிக்க ஒரு அருவி கிளைகளும், ஆண்கள் குழந்தைகளுக்கு 3 கிளைகளும் உள்ளன. இங்கு சபரிமலை சாஸ்தா கோயிலும், முருகன் கோயிலும் உள்ளது.

6. பழத்தோட்ட அருவி (வி.ஐ.பி. பால்ஸ்)- இது ஐந்தருவியில் இருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும்தான் குளிக்க அனுமதி உண்டு.


7. புலி அருவி - குற்றாலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்த அருவிக்கு பாசுபத சாஸ்தா அருவி என்ற மற்றொரு பெயரும் உண்டு.

8. பழைய குற்றாலம் அருவி - குற்றாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் சுமார் 4 கி.மீ., தொலைவில் அழகனாற்று நதியில் அமைந்துள்ளது. சுமார் 100 அடி உயரத்திலிருந்து இந்த அருவியில் தண்ணீர் விழுகிறது.

9. பாலருவி - இது தேனருவி அருகே அமைந்துள்ளது

ஆன்மீகம்

ஒரு நாட்டில் உள்ள அரசன் ஒருவன் இறைவன் மீது மிக்க பக்தி கொண்டிருந்தான். தினமும் கடவுளுக்கு பூஜை செய்யாமல் அவன் உணவு அருந்தியதே இல்லை. ஒரு சமயம் வேட்டையாடுவதற்காக காட்டுக்குள் சென்ற மன்னன், இரவு நெடுநேரம் ஆகிவிட்டதால், அங்கேயே தங்க வேண்டி வந்தது. மறுநாள் வழக்கம்போல் விழித்தெழுந்த மன்னன், காலைக்கடன்களை முடித்தபின் இறைவனை பூஜிக்கத் தயாரானான். சற்றே மேடான இடத்தில் மண்ணைக் குவித்து அதனையே கடவுளாக பாவித்து, காட்டு மலர்களால் பூஜித்துவிட்டு தியானத்தில் ஆழ்ந்தான். அப்போது, அந்தப் பக்கமாக ஒரு வேடன், மான் ஒன்றைத் துரத்திக் கொண்டு வந்தான். மான் ஓடிய பாதையில் தாண்டி, தாவிக் குதித்து ஓடித் துரத்தினான். அப்போது அவனது கால், மன்னன் கடவுளாக பாவித்து வழிபட்ட மண்மேட்டின் மேல் போடப்பட்டிருந்த பூக்களின் மேல் பட்டது. ஆனால், வேடன் அரசனையோ அங்கிருந்த மற்றவர்களையோ அர்ச்சிக்கப்பட்டிருந்த மலர்களையோ கொஞ்சமும் சட்டை செய்யவில்லை. அவனது கவனம் முழுக்க மான்மீதே இருந்தது.

தொடர்ந்து மானைத் துரத்தியபடி ஓடினான். எல்லாவற்றையும் கவனித்த அரசனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. பூஜிக்கப்
பட்ட பூக்களை மிதித்ததோடு என்னையும் மதிக்காமல் போகிறான். என்ன ஆணவம்? பிடியுங்கள் அந்த வேடனை...! என்று ஆணையிட்டான். உடனே புறப்பட்ட வீரர்கள், காட்டில் ஓடிப் பழக்கப்படாததால் வேடனின் வேகத்துக்கு ஈடுதர முடியாமல் தோல்வியோடு திரும்பினார்கள். அதனால் மன்னனின் கோபம் மேலும் அதிகரித்தது. கொஞ்சநேரம் கழிந்தது. அந்த வேடன், வேட்டையாடிய மானை சுமந்து கொண்டு அந்தப் பக்கமாக வருவதைப் பார்த்தார்கள் வீரர்கள். ஓடிப்போய் அவனைப் பிடித்து அரசன் முன் நிறுத்தினார்கள். அப்போதுதான் மன்னரைப் பார்த்தான் வேடன். வேந்தே வணக்கம். வேடர்களின் வசிப்பிடமான இங்கே வந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன். வணங்குகிறேன்! என்று அரசரைப் பணிந்தான். அவனை எரித்து விடுபவர் போல் பார்த்தார் மன்னர். இதே வழியாக மானைத் துரத்தியபடி சென்ற நீ, நான் இறைவனுக்கு சமர்ப்பித்த பூக்களை மிதித்ததோடு என்னையும் கவனிக்காதவன் போல் அவமானப் படுத்திவிட்டல்லவா போனாய். இப்போது மாட்டிக்கொண்டதும், பணிவானவன்போல் நடிக்கிறாயா? சீற்றமாக கேட்டார்.

மன்னிக்க வேண்டும் மன்னா, வேட்டையின் போது என் கவனம் முழுதும் மான் மேல்தான் இருந்தது. அதனால்தான் நான் எதையும் கவனிக்கவில்லை. வேடன் சொல்ல அரசனுக்கு ஏதோ உறுத்தியது; வேட்டையில் இருந்த வேடனின் கவனம் இரை மீது குவிந்திருந்திருக்கிறது. ஆனால் தியானத்தில் ஆழ்ந்திருந்த நம் மனம் இறை மீது குவிந்திருக்கவில்லையே.. அதனால் அல்லவா நாம் வேடனை கவனிக்க முடிந்தது.. நினைத்த அரசன், தனக்குப் பாடம் உணர்த்திய வேடனுக்கு வெகுமதியளித்து அனுப்பினான். பிறகு மவுனமாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தான். தன் மனம் இறை நினைவில் இருந்து விலகியது ஏன்? வழக்கம்போல் தன்னால் இறை தியானத்தில் ஆழமுடியாமல் போனது எதனால்? புதிய சூழல், அச்சமூட்டும் இடம், முதல் நாள் வேட்டையாடிய களைப்பு, சுற்றிலும் விதவிதமான பறவை, விலங்குகளின் சத்தம் இப்படி ஒவ்வொன்றாகப் புரிந்தது அரசனுக்கு. இந்த மன்னனைப் போன்றுதான் நாம் ஒவ்வொருவரும். லட்சியப் பாதையில் இருந்து மனம் விலகி சோர்வடைவதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும்.லட்சியத்துக்குத் தடையாக இருப்பதைக் கண்டுபிடித்து நீக்கிவிட்டால் போதும், வெற்றி நிச்சயம் நமக்கு கிட்டும்

நன்றி: சாம் மகேந்திரன்

Friday, August 24, 2012

கயிலைமலையானே போற்றி

கயிலைமலையானே போற்றி *


வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக்கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி
ஆற்றாகி அங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேதம் ஆனாய் போற்றி
காற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பிச்சாடல் பேயோ டுகந்தாய் போற்றி
பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சாடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி
மருவிஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய்ச்சார் புரமூன்றும் எய்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சாக நாகம் அசைத்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மருவார் புரமூன்றும் எய்தாய் போற்றி
மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
உருவாகி என்னைப் படைத்தாய் போற்றி
உள்ளாவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திருவாகி நின்ற திறமே போற்றி
தேசம் பரவப் படுவாய் போற்றி
கருவாகி ஓடும் முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி
வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி
தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கானத்தீ ஆடல் உகந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
ஊராகி நின்ற உலகே போற்றி
ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேராகி எங்கும் பரந்தாய் போற்றி
பெயராதென் சிந்தை புகுந்தாய் போற்றி
நீராவி ஆன நிழலே போற்றி
நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
காராகி நின்ற முகிலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
சில்லுருவாய்ச் சென்று திரண்டாய் போற்றி
தேவர் அறியாத தேவே போற்றி
புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் போற்றி
போகாதென் சிந்தை புகுந்தாய் போற்றி
பல்லுயிராய்ப் பார்தோறும் நின்றாய் போற்றி
பற்றி உலகை விடாதாய் போற்றி
கல்லுயிராய் நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
பண்ணின் இசையாகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்துஞ்சொல் லானாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனுந்தீ யானாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணியாகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
இமையாது உயிராது இருந்தாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி
ஊழி ஏழு ஆன ஒருவா போற்றி
அமையா வரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி
ஆதி புராணனாய் நின்றாய் போற்றி
கமையாகி நின்ற கனலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி
முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதி தேவர்தொழும் தேவே போற்றி
சென்றேறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவாய் அடியேனுக்(கு) எல்லாம் போற்றி
அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
நெடிய விசும்பொடு கண்ணே போற்றி
நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலிப் போற்றி
அங்கொன்று அறியாமை நின்றாய் போற்றி
கொடியவன் கூற்றம் உதைத்தாய் போற்றி
கோயிலா என்சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி
ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கைக்கோன் தன்னைப் போற்றி
இறைவிரலால்வைத்துகந்த ஈசாபோற்றி
பண்ணார் இசையின்சொல் கேட்டாய் போற்றி
பண்டேஎன் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி.

பஞ்ச புராணம்

பஞ்ச புராணம் என்பது *

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு மற்றும் பெரியபுராணத்துள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பாடல்
******************************************
1- திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரம்
------------------------------------------------------------------------------
தோடு உடைய செவியன், விடை ஏறி, ஓர் தூ வெண்மதி சூடி,
காடு உடைய சுடலைப் பொடி பூசி, என் உள்ளம் கவர் கள்வன்---
ஏடு உடைய மலரான் முனைநாள் பணிந்து ஏத்த, அருள்செய்த,
பீடு உடைய பிரமாபுரம் மேவிய பெம்மான்---இவன் அன்றே!

2- திருப்பெருந்துறையில் அருளிய சிவபுராணம்
-----------------------------------------------------------------
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க

3- திருமாளிகைத்தேவர் அருளிய திருவிசைப்பா
------------------------------------------------------------------
ஒளிவளர் விளக்கே உவப்பிலா ஒன்றே !
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே !
தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !
சித்தத்துள் தித்திக்கும் தேனே !
அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !
அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

4- சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டு
------------------------------------------------------
மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க
அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.

5- திருத்தொண்டர் புராணம் என்ற பெரிய புராணம்; திருஞான சம்பந்த சுவாமிகள் புராணம்.
--------------------------------------------------------------------
வேத நெறி தழைத்து ஓங்க மிகு சைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனித வாய் மலர்ந்து அழுத
சீத வள வயல் புகலித் திருஞான சம்பந்தர்
பாத மலர் தலைக் கொண்டு திருத் தொண்டு பரவுவாம்

மந்திரங்கள்

மந்திரங்கள் எழுகோடி
ஆதலினால் மன்னும்
அவர் இந்த வகை திருமுறைகள்
ஏழாக எடுத்தமைத்து"
என்பது திருமுறை கண்ட புராணக் கூற்று.

எழுகோடி என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.

அவையாவன-
நமஹா,
சுவாஹா,
சுவதா,
பட்,
உம்பட்,
வௌஷட்,
வஷட் என்பனவாகும்.

நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது.
சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது.
சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.
பட் - விக்கினங்களைத் துரத்துவது.
உம்பட் - காமாதிகளைப் போக்குவது.
வௌஷட் - தேவதைகளை இழுப்பது.
வஷட் - தேவதைகளை வசம் செய்வது.

சிவமந்திரமும்-பலன்களும்

நமசிவய, சிவயநம, வயநமசி, சிவாய தத்புருட
சிவமந்திரமும்-பலன்களும் *** 


 நங்சிவயநம - திருமணம் நிறைவேறும்
அங்சிவயநம - தேக நோய் நீங்கும்
வங்சிவயநம - யோக சித்திகள் பெறலாம்.
அங்சிவயநம - ஆயுள் வளரும், விருத்தியாகம்
ஓம்அங்சிவாய - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
கிலிநமசிவய - வசிய சக்தி வந்தடையும்
ஹிரீநமசிவய - விரும்பியது நிறைவேறும்
ஐயும்நமசிவய - புத்தி வித்தை மேம்படும்.
நமசிவய - பேரருள், அமுதம் கிட்டும்.
உங்யுநமசிவய - வியாதிகள் விலகும்.
கிலியுநமசிவய - நாடியது சித்திக்கும்
சிங்வங்நமசிவய - கடன்கள் தீரும்.
நமசிவயவங் - பூமி கிடைக்கும்.
சவ்வுஞ்சிவாய - சந்தான பாக்யம் ஏற்படும்.
சிங்றீங் - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
சிவயநம - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
அங்நங் சிவாய - தேக வளம் ஏற்படும்.
அவ்வுஞ் சிவயநம - சிவ தரிசனம் காணலாம்
ஓம் நமசிவாய - காலனை வெல்லலாம்.
லங்ஸ்ரீறியுங் நமசிவாய - விளைச்சல் மேம்படும்
ஓம் நமசிவய - வாணிபங்கள் மேன்மையுறும்
ஓம் அங்உங்சிவயநம - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
ஓம் ஸ்ரீறியும் சிவயநம - அரச போகம் பெறலாம்.
ஓம் நமசிவய - சிரரோகம் நீங்கும்.
ஓங் அங்சிவாய நம - அக்னி குளிர்ச்சியைத் தரும்.

நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்

நடராஜருடைய கூத்தில் பொதிந்துகிடக்கும் தத்துவங்கள்

*******************************


 
நடராஜர் நடனமாடத் தொடங்குமுன் 14 முறை தன் கையிலுள்ள ‘டக்கா’ எனப்படும் உடுக்கையை ஒலிக்கிறார். அதனின்றும் வெவ்வேறு சப்தங்கள் எழுகின்றன. அவருடைய ஆட்டத்தைக் காணக் குழுமியிருக்கும் தேவர்கள், முனிவர்கள் ஆகியோரிடையே இருந்த பரதமுனி, நாரதமுனி, பாணினிமுனி, பதஞ்சலிமுனி, முதலானோருக்கு வெவ்வேறு வகையாக இந்த சப்தங்கள் ஒலிக்கின்றன; பொருளாகின்றன.

*பரதமுனிக்கு அவை நாட்டியசாஸ்திர சூத்ரங்களாகவும்
*நாரதமுனிக்கு சங்கீதசாஸ்திர சூத்ரங்களாகவும்
*பாணினிமுனிக்கு வியாகரணசாஸ்திர சூத்ரங்களாகவும்
*பதஞ்சலிமுனிக்கு யோக சாஸ்திர சூத்ரங்களாகவும் அவை ஒலிக்கின்றன.

அவரவர் துறையில் அவரவர் சிறப்பான நூல்களை உலகம் உய்ய அளிக்க அவை வழிசெய்கின்றன.

*பிரபஞ்ச இயக்கமே சிவதாண்டவம்*

அதனால்தான் சிவனின் நடனத்தை ஸ்ரீசக்ர பிந்துவில் நடைபெறும் நடனமெனக் கூறுவர். அவருடைய நடனத்தாலேயே பிரபஞ்சம் இயங்குகிறது. அவரைச் சுற்றி அனைத்தும் இயங்குகின்றன. பரதமுனிக்கு உடுக்கையின் ஒலியினால் விளக்கியது தவிர தனது நடன முத்திரைகளாலும், கரணங்களாலும், அவற்றின் சேர்க்கையான அங்கஹாரங்களாலும் நடனக் கலையின் சூக்ஷ்மங்களை நடராஜப் பெருமான் விளக்குகிறார். இதனை அடிப்படையாகக் கொண்டே தன் நூலில் நூற்றியெட்டு கரணங்களை பரதர் விளக்குகிறார். தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயப் பிராகாரத்திற்கு மேல் உள்ள கோபுர உள்சுற்றில் இந்த நூற்றியெட்டுக் கரணங்களையும் செதுக்கியுள்ள சிற்பி இறுதியில் ஒரு பிறையினை அதிகப்படியாக ஏதும் செதுக்காது விட்டுச் சென்றிருக்கிறார், இது வருங்காலத் தலைமுறைகளுக்கு அந்தச் சிற்பி விடுத்துள்ள சவால். ‘பரதமுனி கூறிய நூற்றியெட்டு கரணங்களையும் இங்கு நான் செதுக்கியுள்ளேன். இது தவிர வேறு ஏதாவது காரணம் உனக்குத் தெரிந்தால் இங்கு செதுக்கிவிடு’ என. இதுநாள் வரை அந்தப் பிறை ஏதும் செதுக்காது தான் வெற்றாக, நடனக் கலையின் முழுமைக் கொரு வெற்றிச் சான்றாக இருந்து வருகிறது.

உலகில் ஒருவர் அடையத்தகுந்த பேறுகளிலெல்லாம் மிகச் சிறந்த பெரும் பேறாகிய பெருவீட்டை, நாதனுடன் ஒன்றும் யோக நெறியை அறிந்த யோகிகள் அகக்கண்ணினால் காண, ஈசன் அந்த நடனத்தை, மக்களின் அறியாமை எனும் முயலகனை காலின் கீழ் அழுத்தி, ஆயிரம் தலைகள், ஆயிரம் கால்கள், ஆயிரம் கைகள், சடைமுடியுடைய ஆயிரம் உருவங்களுடன் மூவாசைகளை அழிக்கும் மூன்று முனைகளை உடைய சூலமேந்தி, பல்வேறு ஆயுதங்களைக் கைகளிலேந்தி வாயுவைத் தன் நடன வேகத்தினாலியக்கி, சந்திர, சூர்ய, அக்னிகளை தன் முக்கண்ணாக்கி, கோபமெனும் புலியையும், மதம் (கர்வம்) எனும் யானையையும் அடக்கித் தோலுரித்து, ஆடையாயுடுத்தி, வெவ்வேறு தீயசக்திகளெனும் விஷப் பாம்புகளை அணிகலன்களாக்கி கோடி சூர்யப் பிரகாசத்தோடு ஹிரண்ய கர்ப்ப முட்டையில் உள்ளும், புறமுமாக நின்று வேதங்களென்னும் காற்சிலம்புகள் ஒலிக்க ஆடுகின்றார்.

அணுவிற்கணுவாய், அசையாப் பொருளாய் தங்கள் ஆன்மாவில் விளங்கும் ஈசனை, பிரபஞ்ச மூலகாரணராய், பிரபஞ்ச சுழற்சிக்குக் காரணராய் உள்ள மஹேசரை, புனித பிரஹ்மக் கருவான தங்கக் கருவாய்த் தங்கியுள்ளவரை, அதையடக்கிய ஹிரண்ய கர்ப்பமாகிய பொன் முட்டையுள் ஆடுவதை யோகிகள் காண்கின்றனர். இந்த ஹிரண்ய கர்ப்பமே பொன்னம்பலமென வழங்கப்படுகிறது. இந்த நடனத்தை கூர்ம புராணம் வர்ணிக்கிறது.

தாருகா வனத்தில் வேதங்களில் சிறந்து விளங்கி, அதனாலேயே செருக்கடைந்த முனிவர்களை செருக்கடக்கி உய்விக்க வந்த ஈசன் சுந்தரனாய், விஷ்ணுவை மோஹினியாக்கி, எழுந்தருளினார். முனிவர்களின் மனங்கள் மோஹினியின் எழிலுருவில் மயங்கின; முனிபத்னியர் சுந்தரரின் எழிலில் தம்மை இழந்தனர். சில கண நேரம் மதிமயக்கிய முனிவர்கள் புலனடக்கத்தை உடையவர்களாக வாழ்ந்திருந்த காரணத்தால் தங்கள் மதிமயங்கிய சுந்தரரையும், மோஹினியையும் எவரென அறியாது அழிக்க முற்பட்டனர். அவர்களின் மாயையினை விலக்க, அவர்களால் ஏவப்பட்ட கோபத்தின் உருவான புலியையும், மதத்தின் உருவான யானையையும் தோலுரித்து உடுத்திக்கொண்டு விட்டார் சுந்தரர். தீயசக்திகளாகிய பாம்புகளையும் தன் அணிகளாக்கிக்கொண்டார். இறுதியில் அவர்களிடம் எஞ்சியிருப்பது வேதங்கள்தான். அவற்றை அவர்கள் ஏவ அவற்றையும் தனது காற்சிலம்புகளாக்கி பிட்சாடனராக, கஜசம்ஹார மூர்த்தியாக, நடனமிட்டார், அவர்களுடைய மடமை அல்லது அஞ்ஞானமெனும் முயலகனை காலின் கீழிருத்தி. இந்த நடனத்தை நினைத்து பின்னொரு சமயம் விஷ்ணு மெய்சிலிர்க்க அதனைத் தானும் காண விழைந்த ஆதிசேஷன் பதஞ்சலி முனிவராகி தில்லையில் ஈசனின் நடனத்தைக் கண்டு களித்தார்.

பிரபஞ்சத்தின் சுழற்சிக்கு மைய இயக்கமாகத் திகழும் இந்த ஆட்டத்தில் சிவசக்தி ஐக்யத்துக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் சிவனது தாண்டவத்துடன் சக்தியின் லாஸ்யத்தையும் நாம் காண்கிறோம்.

ஈசனின் நடனத்தில் தான் எத்தனை வகை?
எத்தனை விதமாக தன் நடனத்தை எத்தனை பேர்க்கு அருளச் செய்கிறார் மஹேசர்?
அவற்றில் தாண்டவத்தில் தான் எத்தனை விதம்?

தாண்டவ - யோக நடனம்

ஒரு பெண்ணால் மட்டுமே தான் கொல்லப்பட வேண்டுமென வரம் பெற்ற தாருகாட்சன் என்ற அரக்கனிடமிருந்து தேவர்களைக் காக்க உமையுடன் கூடிய ஈசன், தன் மூன்றாவது கண்ணிலிருந்து நீலகண்டமுள்ள காளியைப் படைத்தார். அரக்கனை அழித்த பின்னரும், அவனது உதிரம் குடித்ததனால், உக்கிரம் தணியாத காளியின் உக்கிரத்தை அடக்க ஈசன் ஒரு குழந்தையாக மாறி காளியின் மார்பிலிருந்து பாலாக அவளது உக்கிரத்தை உறிஞ்சிவிட்டார். பிறகு காளியை மகிழ்விக்க பூதகணங்களுடன் தாண்டவமாடினார். இந்தத் தாண்டவத்தினை தேவர்களும், முனிவர்களும் யோக சக்தியினால் கண்டார். இது லிங்கபுராணத்தில் வர்ணிக்கப் படுகிறது.

ஊர்த்துவ தாண்டவம்

சும்பன், நிசும்பன் எனும் அரக்கர்களை அழிக்கும் காளி உக்கிர நடனம் புரிந்தாள். அவளை அடக்க இறைவனும் அவளுடன் நடனம் புரிந்தாள். ஒரு நிலையில் இறைவன் தன் காதினின்றும் கழன்று விழுந்த குண்டலத்தினை சுழன்றாடியபடியே காலினால் லாகவமாக எடுத்து ஊர்த்துவ தாண்டவ நிலையில் பழையபடி காதில் அணிந்த நிலையில், பெண்மை காளியை காலைத் தூக்க இயலாது தலைகுனியச் செய்தது. இது திருவாலங்காட்டில் நடந்தது. இதைக் காண ஆனந்த முனிவரும், கார்க்கோடகன் எனும் பாம்பரசனும் தவமியற்றிக் கண்டனர். யோக நிலையில் பிராணாயாமத்தால் மூச்சை ஊர்த்துவ நிலைக்கு கொண்டு செல்வதையே இந்த யோக நடனம் குறிக்கிறது என்பர்.

சந்தியா தாண்டவம்

சிவபெருமான் சமுத்திர மந்தனம் எனப்படும் பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிவந்த ஆலகால விஷத்தினை புவனங்களைக் காக்க வேண்டி, தன் கண்டத்தே நிறுத்தி அருளி நீலகண்டராகி தேவர்களால் அர்ச்சிக்கப்பட்டார். ஓர் ஏகாதசியன்று. இதையடுத்து திரயோதசியன்று மாலை சந்தியாகாலத்தில் ஒரு யாமப் பொழுது கையில் சூலமேந்தி உமையவள் காண நந்தியின் இரு கொம்பினுக்கிடையே நின்று தாண்டவ நடனம் புரிந்தார். இதை பிரதோஷ நடனம் என்பர். ஆகமத் திரட்டும், சோமதேவரின் கதாசரித் ஸாகரமும் இதை வர்ணிக்கின்றன. வைரங்களால் இழைக்கப்பெற்ற பொன் சிம்மாசனத்தில் ஜகன்மாதாவை இருத்தி கயிலாயத்தின் உச்சியில் ஈசன் சூலபாணியாக ஆடினான். தேவர்கள் நன்றிகூறி சூழ்ந்து நின்றனர். வாணி வீணை இசைத்தான். இந்திரன் குழலூதுகின்றான். திருமகள் பாடுகிறாள். திருமால் மத்தளம் இசைத்தான். பிரமன் குடம் இசைக்கிறான். நாரதர் தனது மஹதி எனும் தம்பூரில் சுருதி சேர்த்தார். கந்தர்வர்கள், யக்ஷர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், அமரர்கள், அப்ஸரஸ்கள், இன்னும் மூவுலக வாசிகளும் கண்டுகளிக்க சூலபாணியாக அம்பிகை காண இந்த சந்தியா தாண்டவத்தினை ஈசன் திருக்கைகள் சுழன்றாட அவருடன் மலைகளும், காற்றும், கடல்களும் உடன் சுழன்று புயல்வீசும் சூழல் ஏற்படுவதாக ரத்னாகரரின் சுபாஷிதரத்ன கோஷத்தில் சோமநாத பிரஸஸ்தியில் வர்ணிக்கப் படுகிறது. இந்த சந்தியா தாண்டவத்தில் ஈசனின் காலின் கீழ் முயலகன் இல்லை. காளிதாசரும் உஜ்ஜயினி மஹாகாளியின் சந்தியா தாண்டவத்தை இதே ரீதியில் வர்ணிக்கிறார். இதில் இவர் புஜதாருவனம் என்னும் பலவகைப் பாணியை எட்டு, பத்து, பன்னிரண்டு கைகள் அமைவதை வர்ணிக்கிறார். இதில் பாம்பை ஈசன் தன் அரையிலணிந்தும், தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டும் ஆடினார். ஜபாகுசும புஷ்பங்கள் அலரும் மாலைவேளையில் மஹாகாளர் இந்த நடனத்தை ஆடுவதாக காளிதாசர் வர்ணிக்கிறார். இத்தகைய நடனத்தை எல்லாரும் கயிலாசநாதர் கோவிலிலுள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பத்தில் காண்கிறோம்.

இதைத் தவிர திருப்பரங்குன்றத்தில் அமைந்த லலித நடனத்தையும், மதுரை வெள்ளியம்பலத்தில் ஈசனின் கால் மாறியாடிய நடனத்தையும் சந்தியா தாண்டவம் என்பதுண்டு. இதில் ஈசனின் காலில் கீழ் முயலகன் உண்டு. பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த வங்கத்தைச் சேர்ந்த வல்லாளசேன மன்னரின் நைக்தி செப்புப் பட்டயத்தில் தொடக்கத்திலேயே சந்தியா தாண்டவ வழிபாடு காணப்படுகிறது. பதினான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்ரீ சைலம் கோவில் ஆனந்த தாண்டவத்தைப் போன்றுள்ள சந்தியா தாண்டவ சிற்பமும், முயலகனுடன் கூடிய மற்றொரு சிற்பமும் உள்ளன.

மணவை முனுசாமி எனும் புலவர் எழுதிய ‘நடராஜர் பத்து’ இந்த ஆனந்த தாண்டவத்தை விவரிக்கிறது. இதில் ஈசனின் ஆபரணங்களும், கையிலேந்திய ஆயுதங்களும், அவருடைய ஆட்டத்தினால் ஈர்க்கப்பட்டு அவருடன் சேர்ந்து ஆடியவர்களும் வர்ணிக்கப்படுவதைக் காண்கிறோம்.

ஈசனின் கையிலிருக்கும் ஜீவனின் மனமெனும் மான்ஆடுகிறதாம். மனம் ஒரு நிலையில் நிற்காது இங்குமங்கும் ஓடிக்கொண்டிருக்கும், ஒரு மானைப்போல். ஓரிடத்தில் நின்றாலும் அதன் கண்கள் இங்குமங்கும் அலையும். ஈசனின் கையிலிருக்கும் போதே அது நிலைபெறுகிறது. அதன் கண்களும் ஈசனை நோக்கி அவரிடத்திலேயே லயிக்கின்றன. ஈசன் ஆடும்போது அதுவும் ஆடுகிறதாம்.

ஈசனின் கையிலிருக்கும் மழுவென்னும் கோடாலியாடுகிறதாம். தன் தாள் சேர்ந்த ஜீவன்களின் பிறவித் தொடரை அந்த மழுவினால் வெட்டி பிறவியற்ற நிலையை அருளுகிறாராம் ஈசன். அவருடன் அந்த மழுவும் ஆடுகிறதாம்.

ஈசனின் தலையிலணிந்திருக்கும் மதியும், புனலான கங்கையும் ஆடுகின்றனவாம். நிறைமதியாய் எப்போதும் இருந்தவன், தன் இருபத்தேழு மனைவியருள் ரோஹிணியிடமே மிகுதியாகக் கொண்ட அன்பால், மற்ற மனைவியரின் மனத்தாங்கலையும், தனது மாமனாரின் சாபத்தையும் அடைந்து, அதனால் உடல் தேயத் தொடங்கி பொலிவிழந்த நிலையில் ஈசனின் தாள்களைச் சரணடைய, அவனைப் பிறைமதியாய் தனது சென்னியில் சூடினார் ஈசன். அதேபோல் பகீரதனின் தவத்திற்கிணங்கி வேகவதியாக வேகமாய் இறங்கிய ஆகாச கங்கையை உலகைக் காக்கும் பொருட்டு தன் விரிசடையில் சூடினார் ஈசன். அந்த மதியும், புனலும் ஆடலரசனின் ஆனந்த நடனத்தின்போது சேர்ந்தாடுகின்றனவாம்.

ஈசனின் பூணூலாடுகின்றதாம். கால் தண்டையயணிந்த மறைகள் ஆடுகின்றனவாம். ஈசனின் குண்டலங்களிரண்டும் ஆடுகின்றனவாம். அரையில் உடுத்தியிருக்கும் உடையான புலித்தோல் ஆடுகின்றதாம். தும்பை, அருகு மாலைகளாடுகின்றனவாம்.

ஈசன் ஆடுவதைக் கண்டால் எவருக்குத்தான் ஆடத் தோன்றாது?
மங்கை சிவகாமியும்,
சகோதரன் திருமாலும்,
மறை தந்த பிரமனும்,
வானவர்கோன் இந்திரனுடன் வானவர் கூட்டமும்,
குஞ்சர முகத்தோனும்,
குழந்தை முருகனும்,
ஞானசம்பந்தரோடு பதினெட்டு முனிவர்களும்,
அஷ்டதிக்பாலகரும்,
நந்தி வாகனமும்,
தேவலோகத்து நாட்டியப் பெண்களும் ஆட
இவர்களோடு திசையெங்கும் தன் குழல் பறந்தாட ஈசன்
ஆனந்தக் கூத்தாடினாராம்.

ஈசனின் கைகளில்
மானையும்,
மழுவையும் தவிர
உடுக்கை,
அக்னி,
சூலம்,
கத்தி,
கேடயம்,
பிரம்ம கபாலம்,
பாம்பு ஆகியவற்றையும் நாம் காண்கிறோம்.

வீசு கையினால் அர்த்த நாரீஸ்வர தத்துவத்தில் தன் ஆனந்த நடனத்தில் தேவியின் பாகமாகிய இடப் பதத்தினைக் காட்டுகின்றார் ஈசன், “தேவியின் பதத்தைப் பற்றிக் கொள். என் மறுகால் போல் ஸ்திரமான, அஞ்ஞானத்தை ஒடுக்கிய, வாழ்வினை அளிக்கிறேன்,” என்றுணர்த்தும் வகையில், வலக் கரத்தினால் அபயத்தையும் அருளுகின்றார். மதுரை வெள்ளியம்பலத்தில் மாறுகால் நடனமாடும் போதும் இவ்விரண்டு முத்திரைகளும் மட்டும் மாறுவதில்லை. சிவதாண்டவச் சிற்பங்களில் மாறாது காணும் மற்றொன்று ஈசனின் தலையில் காணும் விரித்த மயிற் பீலியும், விரித்த சடையும். சந்தியாகால அழகைக் கண்டு ஈசன் தனை மறந்தவராய் தன் சடைமுடிகளைத் தளர்த்திவிட்டு ஆடத்தொடங்கி விட்டார். ஆடலின் வேகத்திற்கேற்ப சடைகள் திக்கெங்கும் வீசிப் பனந்தன. அடியவர்களுக்கு வேண்டிய வளங்களை வாரிவழங்கும் கருணை மேகமான அவரைக் கண்டு மயில்களும் தோகை விரித்தாடின. அவற்றின் பீலிகளும் ஈசனின் சிரத்தை அலங்கரித்தன.

இந்த ஆனந்தத் தாண்டவத்தில் ஈசனின் கையிலிருக்கும் அக்னியை சம்ஹார சக்தியாகவும், உடுக்கையை ஸ்ருஷ்டி சக்தியாகவும் அறிஞர்கள் விவரித்த போதிலும், இலங்கையைச் சேர்ந்த பேரறிஞர் திரு. ஆனந்த குமாரஸ்வாமியும், இந்திய கலை, மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணரும், பேரறிஞரும், எனது தந்தையுமான, திரு. க. சிவராமமூர்த்தி அவர்களும் வேறுபட்ட கருத்தை உடையவர்களாக உள்ளனர். அவர்கள் தகுந்த ஆதாரத்துடன் அறுதியிட்டுக் கூறுவது ஈசன் கையிலிருக்கும் அக்னிதான் பரமாத்மாவின் ஸ்ருஷ்டி சக்தியான பேரொளியென்றும், அதனின்றும் தோன்றிய ஒளிச்சுடர்களான ஜீவாத்மாக்கள்தான் ஈசனின் பிரபாவலியிலுள்ள சிறு சிறு தீச்சுடர்களென்றும், அவை யாவும் லயமடைவது ஈசனின் வலக் கரத்திலிருக்கும் உடுக்கையின் நாதப் பிரஹ்மத்தில் என்பதும் தான். நாதமென்றாலே லயம் என்பது உடன் பிறந்த தொரு தத்துவமல்லவா! மேலும் அம்பாளின் பாகமான இடக் கரத்தில், தாயான அவளது செயலான ஸ்ருஷ்டியும், ஈசனின் பாகமாகிய வலக் கரத்தில் அவரது செயலான சம்ஹாரமும் இருப்பது தானே முறை?

இவை தவிர சதருத்ரீயத்தில், பார்வதியை மணப்பதற்கு விழைந்த சிவபெருமான், இமவானின் மனைவியான மேனையின் முன் இடக் கரத்தில் ஊது குழலும், வலக் கரத்தில் துடியும் ஏந்தி நடமிட்டதாக வர்ணிக்கப்படுகிறது.

பரத முனி பஞ்சபூதங்களின் உருவிலும் இறைவன் ஆடுவதாக ஜலமய மூர்த்தி, தேஜோமய மூர்த்தி, ஆகாஸமய மூர்த்தி என்றெல்லாம் குறிப்பிடுகிறார். சுழற்காற்றின் சுந்தர நடம், தீச்சுடரின் நெளியும் ஒளிநடம், ஒளிகளின் நடம், சூரிய, சந்திரர்களின் நடம், இவை யாவும் ஈசனின் நடமன்றோ! நடராஜ ஸ்தோத்திரத்தில் சிவனுக்கும், ஜீவனுக்கும் உள்ள இயற்கை நிலை ஒற்றுமையைக் கூறும் வகையில் “நடராஜரே, நீங்கள்தான் ஆடுகிறீர்களா? அல்லது பஞ்சபூத உடையில் உள்ள என்னை ஆடவைக்கிறீர்களா?” என வினவும் நிலையைக் காண்கிறோம்.

இவை தவிர வெவ்வேறு யோக நிலைகளைக் காட்டும் வீராட்ட தாண்டவங்கள் எட்டு வகைப்படும். அவை ஈசனின் வெவ்வேறு வெற்றிகளை முழங்குவனவாகவும் விளங்குகின்றன. திருவதிகையில் அட்டயோக சாதனையை விளக்கும் வகையில் திரிபுரசம்ஹாரராகவும், கண்டியூரில் விந்து ஜெயம், மூலாக்னி எழுப்புதல் ஆகியவற்றை விளக்கும் வகையில் பிரஹ்மசிரச்சேதம் செய்த நிலையிலும்; திருக்கொறுக்கையில் சிவதிருஷ்டி பெறல், ஞானக்கண் நிலைகளை விளக்கும் வகையில் காமதஹனராகவும்; திருவழுவூரில் முத்திச் சிறப்பு, சிவவொளி விளக்கம் ஆகியவற்றை விளக்கும் வகையில் கஜசம்ஹாரராகவும்; திருக்கோவிலூரில் அஞ்ஞான அழிப்பை விளக்கும் வகையில் அந்தகாசுர வதம் புரிந்த நிலையிலும்; திருப்பறியலூரில் சிவராஜயோகம், அக்னிகாரியம், பசித்துவ நீக்க அகவேள்வி ஆகியவற்றை விளக்கும் வகையில் தக்ஷன் வேள்வி தகர்த்த நிலையிலும்;திருவிற்குடியில் வாயுயோகசாதனை, மூலாதாரம் ஆகியவற்றை விளக்கும் வகையில் ஜலந்தர சம்ஹார மூர்த்தியாகவும்; திருக்கடவூரில் அங்கியோகம், மூலநாடி சுஷும்னை வைபவம் ஆகியவற்றை விளக்கும் வகையில் காலசம்ஹார மூர்த்தியாகவும் ஈசன் விளங்குகிறார்.

மும்மலங்களே முப்புரமாகக் கொண்டு ஈசன் ஆகியவற்றை நாசம் செய்து யோகியரைக் காத்தலே திரிபுர சம்ஹாரமென்பர். இந்நிலையில் ஈசன் கரங்களில் வழக்கமான சூலம், மழு, கத்தி, கேடயம் தவிர பினாகமெனும் வில்லையும், பாசுபதமெனும் அம்பையும் காண்கிறோம்.

யோகநெறியில் விந்து ஜெயம் சிறப்பானதொன்று. மூலாக்னியை மேலெழுப்பி விந்து நாசம் ஏற்படாது தடுத்தலை பிரம்ம சிரச்சேதமென யோகநெறியில் கூறுவர். தானும் ஐந்து சிரம் கொண்டவனே, ஈசனுக்கு சமமானவனே எனும் பிரம்மனின் கர்வத்தை அடக்க பைரவர் மூலம் அவனது நடுச்சிரத்தைக் கொய்து அந்த பிரம்ம கபாலத்தை பிக்ஷா பாத்திரமாய் ஏந்தி ஈசன் தாண்டவமாடுகிறார்.

வாசியோக மேன்மையால் குண்டலினியை மேலெழுப்பி மேனிலைப் பலன்களை எய்துவதை காமதஹனமாக யோகியர் கூறுவர். சிவத்தின் மேன்மையினை விளக்கவே காமதஹனம் விளைந்தது.

யோகநெறியில் ஆறு ஆதாரநிலைகளிலிருக்கும் தேவதைகளின் அருள்நிலைகள் மறைந்து சஹஸ்ராரத்தில் அக்னி தோன்றுதலை கஜசம்ஹாரமாகக் கூறுவர். சிவனைத்தவிர வேறு யாராலும் அழிவிலா வரம்பெற்ற கஜமுகாசுரனைக் கொன்று ஈசன் கரியுடை போர்த்து தாண்டவமாடுகிறார்.

முதுகெலும்பின் முடிவிடமாகிய குருத்து அல்லது குந்தகம் எனும் பகுதிக்கு மேல் சூரிய ஒளி, ஆன்ம ஒளி, சோம ஒளி, எனும் மூவொளி அமைந்த பகுதியை சூலம் என்பர். யோகப் பயிற்சியின் மூலம் அந்தகமாகிய அறியாமையினை நீக்கி சுஷும்னையில் ஆன்ம ஒளி காணுதலே அந்தகாசுர சம்ஹாரமென திருமந்திரம் கூறுகிறது. இந்நிலையில் ஈசனின் தாண்டவத்தை திருக்கோவிலூரில் காண்கிறோம்.

சிவசக்தி ஐக்கியமான ஆண்-பெண் அம்சக் கூட்டுறவு வேள்வி எனப்படும். இதனை ஈசனுக்கு அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். ஈசன் அருளின்றி யோகத்தில் விந்து ஜெயம் கிட்டுவது இயலாது என்பதைக் காட்டுவதே தக்ஷன் வேள்வி தகர்த்தல். ஈசனின் இந்நிலையை திருப்பறியலூரில் காண்கிறோம்.

யோகத்தின்போது கீழ்நோக்கு இயல்புடைய ஜலந்தரனெனப்படும் அபானவாயுவை மேல்நோக்கிப் பிராணனுடன் கலக்கச் செய்யும் யோகமுறையை அங்குலி யோகம் என்பர். இந்நிலையில் பிராணனுடன் கலந்து அபானன் சஹஸ்ராரத்தில் ஈசனின் பேரொளியில் இணைவதை ஜலந்தர யோகமென திருமந்திரம் கூறும். இந்நிலைத் தாண்டவத்தை திருவிற்குடியில் காண்கிறோம்.

மூலக்கனலை சுஷும்னை வழியாக சஹஸ்ராரத்துக்கு எழுப்பும்போது காலமெனும் யமபயம் ஒழியும். பிரஹ்மரந்திரப் பேரொளியில் லயித்து சாகாதிருத்தலை அங்கியோகம் என்பர். பிரஹ்மரந்திரத்தில் ஊர்த்துவதிருஷ்டியால் பார்த்து சஹஸ்ரார தளத்தில் சிவ - ஜீவ, சிவ - சக்தி ஐக்கியப் பேரொளியில் லயிக்கும்போது எழும் பேரொளி வைபவத்தை காலசம்ஹார வைபவம் என்பர். இத்தாண்டவத்தை திருக்கடையூரில் காண்கிறோம்.

இந்த எட்டு வீராட்டங்களின் அம்சமும் நடராஜரின் ஆனந்த தாண்டவத்தில் ஒருமை எய்துவதைக் காண்கிறோம். ஸ்ரீருத்ரத்தின் நடுமணியாம் ‘நம : சிவாய’த்தில் ஐந்து பூதங்களும், ஐந்து தொழில்களும், ஐந்து பிரஹ்ம நிலைகளும், ஐந்து திசைகளும், ஐந்து சக்திவேதங்களும் அடங்குவதுடன் சிவதாண்டவ உருவின் ஐந்து பாகங்களும் கூட அடங்குவதைக் காண்கிறோம்.

சிவதாண்டவத்தில் ஐம்பெரும் பாகமென ஐந்தெழுத்து மந்திரம், ஐந்து முகங்கள் (ஐந்து பிரஹ்மங்கள்), ஐந்து திசைகள், ஐந்து பூதங்கள், ஐந்தொழில்கள், ஐந்து சக்திபேதங்கள் ஆகியவை உள்ளடங்கியுள்ளன. துடி எனும் உடுக்கையில் ‘ந’ எனும் எழுத்தும், ஸத்யோஜாதமெனும் பிரஹ்மநிலையும், மேற்கு திசையும், பிருத்வி எனும் பூதமும், படைத்தலைச் செயும் பிரம்மனும், கிரியா சக்தியும் அடங்கக் காண்கிறோம்; அமைந்த கரத்தில் ‘ம’ எனும் எழுத்தும், தத்புருஷமும், கிழக்கு திசையும், வாயுவும், காத்தல் எனும் தொழில் புரியும் விஷ்ணுவும், ஞான சக்தியும் அடங்கக் காண்கிறோம்; அக்னியில் ‘சி’ எனும் எழுத்தும், அகோரமும், தெற்கு திசையும், தேஜஸும், அழித்தலெனும் பணிபுரியும் ருத்ரனும், இச்சா ஸக்தியும் அடங்கக் காண்கிறோம்; ஊன்றிய பாதத்தில் ‘வா’ எனும் எழுத்தும், வாமதேவமும், வடக்கு திசையும், நீரெனும் பூதமும், திரோதனமெனும் மறைத்தலைப் புரியும் சதாசிவனும், ஆதிசக்தியும் அடங்கக் காண்கிறோம்; குஞ்சித பாதத்தில் ‘ய’ எனும் எழுத்தும், ஈஸானமும், உச்சிதிசையும், ஆகாயமும், அருளலைப் புரியும் மஹேஸ்வரரும், பராசக்தியும் அடங்கக் காண்கிறோம்.

அவரது ஆனந்த நடனம் மூலம் அவரே உணர்த்தும் தத்துவத்தை உணர்ந்து தூக்கிய திருவடியாம் அம்பிகையின் பாதத்தை சிக்கெனப் பற்றி, அவரருளால் அபஸ்மாரம் நீங்கப் பெற்று ஸ்திர வாழ்வை நாம் அடைவோமாக. அவரது இடக்கரம் அமைந்த தேஜஸினின்று ஒரு பொறியாகப் பிறந்த நாம், அவரருளால் அவரது நினைவில் வாழ்ந்து அவரது வலக்கரமமர்ந்த துடியில் லயத்தை அடைய அவரது திருவடி போற்றி வேண்டுவோமாக.

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி