Saturday, July 23, 2011

லஷ்மிநரசிம்மர் 108 போற்றி

1. நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்த இடம்....
அஹோபிலம்(சிங்கவேள்குன்றம்)
2. நரசிம்மவழிபாட்டிற்கு மிக உகந்தவேளை....
பிரதோஷ வேளை(மாலை 4.30-6))
3. இரணியனை சம்ஹரித்த நாள்...
சதுர்த்தசி திதி
4. நரசிம்ம வழிபாட்டிற்குரிய நட்சத்திரம்...
சுவாதி(நரசிம்மரின் ஜென்ம நட்சத்திரம்)
5. பக்தன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படும் பக்தன்...
(பக்த) பிரகலாதன்
6. அஹோபிலத்தில் நரசிம்மருக்கு எத்தனை கோயில்கள் உள்ளன?
ஒன்பது (நவநரசிம்மர் கோயில்)
7. நரசிம்மருக்குரிய நிவேதனம்...
பானகம், தயிர் சாதம்
8. பிரகலாதனுக்கு ஹரி மந்திரத்தை உபதேசித்தவர்...
நாரதர்
9. நரசிம்மரின் பெயரைக் கொண்ட தமிழ்ப்புலவர்...
கம்பர்(தூணில் அவதரித்தவர் என்பதால் நரசிம்மருக்கு கம்பர் என்று பெயர்)
10. நரசிம்மரின் பெருமையை எப்படி குறிப்பிடுவர்?
""நாளை என்பது இல்லை நரசிம்மனிடத்தில்''




பிரதோஷம், செவ்வாய்க்கிழமை, சுவாதி நட்சத்திர நாட்களில் லட்சுமி நரசிம்மர் படத்தின் முன் விளக்கேற்றி, பானகம் (எலுமிச்சை, சர்க்கரை கலவை) நிவேதனம் செய்து, இந்த போற்றியை பக்தியுடன் சொல்லுங்கள். துன்பமெல்லாம் தீர்ந்து இன்பம் சேரும்.

1. ஓம் திருக்கடிகைத் தேவா போற்றி
2. ஓம் திருமாமகள் கேள்வா போற்றி
3. ஓம் யோக நரசிங்கா போற்றி
4. ஓம் ஆழியங்கையா போற்றி
5. ஓம் அக்காரக் கனியே போற்றி
6. ஓம் அனுமனுக்கு ஆழி அளித்தாய் போற்றி
7. ஓம் எக்காலத்தும் எந்தாய் போற்றி
8. ஓம் எழில் தோள் எம்மிராமா போற்றி
9. ஓம் சங்கரப்ரியனே போற்றி
10. ஓம் சார்ங்க விற்கையா போற்றி
11. ஓம் உலகமுண்ட வாயா போற்றி
12. ஓம் உவப்பில் கீர்த்தியம்மா போற்றி
13. ஓம் அடியவர்க்கருள்வாய் போற்றி
14. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
15. ஓம் தாமரைக் கண்ணா போற்றி
16. ஓம் காமனைப் பயந்தாய் போற்றி
17. ஓம் ஊழி முதல்வா போற்றி
18. ஓம் ஒளி மணிவண்ணனே போற்றி
19. ஓம் ராவணாந்தகனே போற்றி
20. ஓம் இலங்கை எரித்த பிரான் போற்றி
21. ஓம் பெற்ற மாளியே போற்றி
22. ஓம் பேரில் மணாளா போற்றி
23. ஓம் செல்வ நாரணா போற்றி
24. ஓம் திருக்குறளா போற்றி
25. ஓம் இளங்குமார போற்றி
26. ஓம் விளக்கொளியே போற்றி
27. ஓம் சிந்தனைக்கினியாய் போற்றி
28. ஓம் வந்தெனை ஆண்டாய் போற்றி
29. ஓம் எங்கள் பெருமான் போற்றி
30. ஓம் இமையோர் தலைவா போற்றி
31. ஓம் சங்கு சக்கரத்தாய் போற்றி
32. ஓம் மங்கை மன்னன் மனத்தாய் போற்றி
33. ஓம் வேதியர் வாழ்வே போற்றி
34. ஓம் வேங்கடத்துறைவா போற்றி
35. ஓம் நந்தா விளக்கே போற்றி
36. ஓம் நால் தோளமுதே போற்றி
37. ஓம் ஆயர்தம் கொழுந்தே போற்றி
38. ஓம் ஆழ்வார்களுயிரே போற்றி
39. ஓம் நாமம் ஆயிரம் உடையாய் போற்றி
40. ஓம் வாமதேவனுக்கு அருளினாய் போற்றி
41. ஓம் மூவா முதல்வா போற்றி
42. ஓம் தேவாதி தேவா போற்றி
43. ஓம் எட்டெழுத்திறைவா போற்றி
44. ஓம் எழில்ஞானச் சுடரே போற்றி
45. ஓம் வரவரமுனி வாழ்வே போற்றி
46. ஓம் வட திருவரங்கா போற்றி
47. ஓம் ஏனம்முன் ஆனாய் போற்றி
48. ஓம் தானவன் ஆகம் கீண்டாய் போற்றி
49. ஓம் கஞ்சனைக் கடிந்தாய் போற்றி
50. ஓம் நஞ்சரவில் துயின்றாய் போற்றி
51. ஓம் மாலே போற்றி
52. ஓம் மாயப் பெருமானே போற்றி
53. ஓம் ஆலிலைத் துயின்றாய் போற்றி
54. ஓம் அருள்மாரி புகழே போற்றி
55. ஓம் விண் மீதிருப்பாய் போற்றி
56. ஓம் மண்மீது உழல்வோய் போற்றி
57. ஓம் மலைமேல் நிற்பாய் போற்றி
58. ஓம் மாகடல் சேர்ப்பாய் போற்றி
59. ஓம் முந்நீர் வண்ணா போற்றி
60. ஓம் முழுதும் கரந்துறைவாய் போற்றி
61. ஓம் கொற்றப் புள்ளுடையாய் போற்றி
62. ஓம் முற்ற இம் மண்ணளந்தாய் போற்றி
63. ஓம் அனைத்துலக முடையாய் போற்றி
64. ஓம் அரவிந்த லோசன போற்றி
65. ஓம் மந்திரப் பொருளே போற்றி
66. ஓம் இந்திரனுக்கருள்வாய் போற்றி
67. ஓம் குரு பரம்பரை முதலே போற்றி
68. ஓம் விகனைசர் தொழும் தேவா போற்றி
69. ஓம் பின்னை மணாளா போற்றி
70. ஓம் என்னையாளுடையாய் போற்றி
71. ஓம் நலம்தரும் சொல்லே போற்றி
72. ஓம் நாரண நம்பி போற்றி
73. ஓம் பிரகலாதப்ரியனே போற்றி
74. ஓம் பிறவிப் பிணியறுப்பாய் போற்றி
75. ஓம் பேயார் கண்ட திருவே போற்றி
76. ஓம் ஏழு மாமுனிவர்க்கு அருளே போற்றி
77. ஓம் ஏமகூட விமானத்து இறைவா போற்றி
78. ஓம் ஆனையின் நெஞ்சிடர் தீர்த்தாய் போற்றி
79. ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
80. ஓம் கச்சி யூரகத்தாய் போற்றி
81. ஓம் வில்லியறுத்த தேவா போற்றி
82. ஓம் வீடணனுக்கருளினாய் போற்றி
83. ஓம் இனியாய் போற்றி
84. ஓம் இனிய பெயரினாய் போற்றி
85. ஓம் புனலரங்கா போற்றி
86. ஓம் அனலுருவே போற்றி
87. ஓம் புண்ணியா போற்றி
88. ஓம் புராணா போற்றி
89. ஓம் கோவிந்தா போற்றி
90. ஓம் கோளரியே போற்றி
91. ஓம் சிந்தாமணி போற்றி
92. ஓம் சிரீதரா போற்றி
93. ஓம் மருந்தே போற்றி
94. ஓம் மாமணி வண்ணா போற்றி
95. ஓம் பொன் மலையாய் போற்றி
96. ஓம் பொன்வடிவே போற்றி
97. ஓம் பூந்துழாய் முடியாய் போற்றி
98. ஓம் பாண்டவர்க் கன்பா போற்றி
99. ஓம் குடந்தைக் கிடந்தாய் போற்றி
100. ஓம் தயரதன் வாழ்வே போற்றி
101. ஓம் மதிகோள் விடுத்தாய் போற்றி
102. ஓம் மறையாய் விரிந்த விளக்கே போற்றி
103. ஓம் வள்ளலே போற்றி
104. ஓம் வரமருள்வாய் போற்றி
105. ஓம் சுதாவல்லி நாதனே போற்றி
106. ஓம் சுந்தரத் தோளுடையாய் போற்றி
107. ஓம் பத்தராவியே போற்றி
108. ஓம் பக்தோசிதனே போற்றி

சிவன் 108 போற்றி

வரும் 31ம் தேதி பிரதோஷத்தை ஒட்டி, மாலை 4.30-6 மணிக்குள், சிவாலயங்களில் சுவாமி பவனி வரும் போது, பக்தர்கள் இந்த 108 போற்றியை பாடியபடி வலம் வரலாம். திங்கள்கிழமைகளில் காலை, மாலையில் விளக்கேற்றியதும் வீட்டில் வைத்தும் ஒருவர் சொல்ல, குடும்பத்திலுள்ள மற்றவர்கள் தொடர்ந்து சொல்லலாம். பத்து நிமிட நேரமே ஆகும்.

1.ஓம் அகிலேஸ்வரா போற்றி
2.ஓம் அகிலாண்டீஸ்வரா போற்றி
3.ஓம் அர்த்தநாரீஸ்வரா போற்றி
4.ஓம் அம்பிகேஸ்வரா போற்றி
5.ஓம் அமுதீஸ்வரா போற்றி
6.ஓம் அமரேஸ்வரா போற்றி
7.ஓம் அனாதீஸ்வரா போற்றி
8.ஓம் அருணாசலேஸ்வரா போற்றி
9.ஓம் அத்தீஸ்வரா போற்றி
10.ஓம் அந்தகேஸ்வரா போற்றி
11.ஓம் அசரேஸ்வரா போற்றி
12.ஓம் ஆதீஸ்வரா போற்றி
13.ஓம் ஆனந்தீஸ்வரா போற்றி
14.ஓம் அவர்த்தேஸ்வரா போற்றி
15.ஓம் ஏகாம்பரேஸ்வரா போற்றி
16.ஓம் ஓங்காரேஸ்வரா போற்றி
17.ஓம் கடம்பேஸ்வரா போற்றி
18.ஓம் கங்கேஸ்வரா போற்றி
19.ஓம் கபாலீஸ்வரா போற்றி
20.ஓம் கார்த்தமேஸ்வரா போற்றி
21.ஓம் காரணீஸ்வரா போற்றி
22.ஓம் காளத்தீஸ்வரா போற்றி
23.ஓம் காமேஸ்வரா போற்றி
24.ஓம் கும்பேஸ்வரா போற்றி
25.ஓம் குற்றாலீஸ்வரா போற்றி
26.ஓம் குஸ்மேஸ்வரா போற்றி
27.ஓம் குமாரேஸ்வரா போற்றி
28.ஓம் குஞ்சேஸ்வரா போற்றி
29.ஓம் குபேரேஸ்வரா போற்றி
30.ஓம் கேதாரீஸ்வரா போற்றி
31.ஓம் கோதுமேஸ்வரா போற்றி
32.ஓம் கோட்டீஸ்வரா போற்றி
33.ஓம் கோகானேஸ்வரா போற்றி
34.ஓம் சங்கரேஸ்வரா போற்றி
35.ஓம் சத்தியகிரீஸ்வரா போற்றி
36.ஓம் சர்வேஸ்வரா போற்றி
37.ஓம் சரண்யேஸ்வரா போற்றி
38.ஓம் சங்கமேஸ்வரா போற்றி
39.ஓம் சக்கரேஸ்வரா போற்றி
40.ஓம் சந்திரேஸ்வரா போற்றி
41.ஓம் சண்டகேஸ்வரா போற்றி
42.ஓம் சப்தேஸ்வரா போற்றி
43.ஓம் ஜம்புகேஸ்வரா போற்றி
44.ஓம் ஜலகண்டேஸ்வரா போற்றி
45.ஓம் ஜாப்பீஸ்வரா போற்றி
46.ஓம் சிவனேஸ்வரா போற்றி
47.ஓம் சித்தேஸ்வரா போற்றி
48.ஓம் சிம்ஹேஸ்வரா போற்றி
49.ஓம் ஜீவனேஸ்வரா போற்றி
50.ஓம் சுந்தரேஸ்வரா போற்றி
51.ஓம் சூலேஸ்வரா போற்றி
52.ஓம் ஸூமேஸ்வரா போற்றி
53.ஓம் சூரியேஸ்வரா போற்றி
54.ஓம் ஜெகதீஸ்வரா போற்றி
55.ஓம் செப்பேஸ்வரா போற்றி
56.ஓம் சையகேஸ்வரா போற்றி
57.ஓம் சைலேஸ்வரா போற்றி
58.ஓம் சொக்கேஸ்வரா போற்றி
59.ஓம் சோமலிங்கேஸ்வரா போற்றி
60.ஓம் சோமேஸ்வரா போற்றி
61.ஓம் ஞானேஸ்வரா போற்றி
62.ஓம் தர்ப்பாரண்யேஸ்வரா போற்றி
63.ஓம் தர்மகேஸ்வரா போற்றி
64.ஓம் தணிகாசலேஸ்வரா போற்றி
65.ஓம் தாருவணீஸ்வரா போற்றி
66.ஓம் தானேஸ்வரா போற்றி
67.ஓம் தாரணேஸ்வரா போற்றி
68.ஓம் திரியம்பகேஸ்வரா போற்றி
69.ஓம் தியாகேஸ்வரா போற்றி
70.ஓம் தீக்ஷினேஸ்வரா போற்றி
71.ஓம் தீனேஸ்வரா போற்றி
72.ஓம் துந்தரேஸ்வரா போற்றி
73.ஓம் நந்திகேஸ்வரா போற்றி
74.ஓம் நந்தீஸ்வரா போற்றி
75.ஓம் நத்தேஸ்வரா போற்றி
76.ஓம் நடேஸ்வரா போற்றி
77.ஓம் நாகேஸ்வரா போற்றி
78.ஓம் நாடுகேஸ்வரா போற்றி
79.ஓம் நீலகண்டேஸ்வரா போற்றி
80.ஓம் நீலேஸ்வரா போற்றி
81.ஓம் பத்மேஸ்வரா போற்றி
82.ஓம் பரமேஸ்வரா போற்றி
83.ஓம் பட்டீஸ்வரா போற்றி
84.ஓம் பத்திகேஸ்வரா போற்றி
85.ஓம் பாரதீஸ்வரா போற்றி
86.ஓம் பாண்டேஸ்வரா போற்றி
87.ஓம் பிரகதீஸ்வரா போற்றி
88.ஓம் பீமேஸ்வரா போற்றி
89.ஓம் பீதாம்பரேஸ்வரா போற்றி
90.ஓம் பீமசங்கரேஸ்வரா போற்றி
91.ஓம் புரானேஸ்வரா போற்றி
92.ஓம் புண்டரிகேஸ்வரா போற்றி
93.ஓம் புவனேஸ்வரா போற்றி
94.ஓம் பூதேஸ்வரா போற்றி
95.ஓம் பூரணகேஸ்வரா போற்றி
96.ஓம் மண்டலீஸ்வரா போற்றி
97.ஓம் மகேஸ்வரா போற்றி
98.ஓம் மகா காளேஸ்வரா போற்றி
99.ஓம் மங்களேஸ்வரா போற்றி
100.ஓம் மணலீஸ்வரா போற்றி
101.ஓம் மவுலீஸ்வரா போற்றி
102.ஓம் யோகேஸ்வரா போற்றி
103.ஓம் வைத்தீஸ்வரா போற்றி
104.ஓம் ராமேஸ்வரா போற்றி
105.ஓம் ரோகணேஸ்வரா போற்றி
106.ஓம் லிங்கேஸ்வரா போற்றி
107.ஓம் லோகேஸ்வரா போற்றி
108.ஓம் வேங்கீஸ்வரா போற்றி

முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கே!


அருணகிரிநாதர் பாடியது
பாடல்-1

கைத்தல நிறைகனி அப்பமொடு அவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் என வினை கடிதேகும்
மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள் புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே
முத்தமி ழடைவினை முற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே
முப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம்
அச்சது பொடி செய்த அதிதீரா
அத்துயரது கொடு சுப்பிரமணி படும்
அப்புன மதனிடை இபமாகி
அக்குற மகளுடன் அச்சிறு முருகனை
அக்கண மணமருள் பெருமாளே.

பொருள்: கை நிறைய கனிவகை, அப்பம், அவல், பொரி ஏந்தி விருப்பத்துடன் உண்ணுகின்ற விநாயகப்பெருமானே! உனது திருவடிகளை விருப்பத்துடன் வழிபடுபவர்கள் மற்றும் ஞானநூல்களைக் கற்றிடும் பக்தர்களின் புத்தியில் வீற்றிருப்பவரே! கற்பகமரம் போல விரும்பும் வரங்களை அருள்பவரே! முன்பு செய்த தீவினைகளுக்குரிய பாவத்தை விரைந்து போக்குபவரே! ஊமத்தம் பூவையும், பிறைநிலவையும் தலையில் சூடியிருக்கும் சிவபெருமானின் புத்திரரே! மல்யுத்தம் புரியும் வீரமிக்க திரண்ட தோள்களையும், மதநீரைப் பொழிகின்ற யானை முகத்தையும் கொண்டவரே! மத்தளம் போன்ற பெரிய வயிறுக்கு சொந்தக்காரரே! உத்தமியாகிய பார்வதியின் தவப்புதல்வரே! தேன் ஒழுகும் புத்தம் புதுமலர்களால் உன்திருவடிகளைப் பணிந்து வணங்குகிறேன்.
சிறந்த மகாமேருமலையை எழுதும் பலகையாக்கி, எல்லாமொழிகளுக்கும் முன்னதாக முத்தமிழின் முறையினை எழுதிய முதல் தெய்வமே! அசுரர்களின் மூன்று கோட்டைகளையும் எரிப்பதற்காக, சிவபெருமான் ஏறிச்சென்ற தேரின் அச்சினை முறித்து பொடியாக்கிய வீரரே! முருகப்பெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கி தினைப்புனம் காத்த வள்ளிநாயகியின் முன்னே யானையாக உருவெடுத்து வந்து வள்ளி திருமணத்திற்கு அருள்புரிந்த விநாயகப்
பெருமானே! உம்மைப் போற்றி வணங்குகிறேன்.

பாடல்-2
உம்பர் தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்கடலில் தேனமுதத் துணர்வூறி
இன்பரசத்தே பருகிப் பலகாலும்
என்றனுயிர்க்கு ஆதரவுற்று அருள்வாயே
தம்பி தனக்காக வனத் தணைவோனே
தந்தை வலத் தாலருள் கைக் கனியோனே
அன்பர் தமக்கான நிலைப் பொருளோனே
ஐந்துகரத் தானைமுகப் பெருமாளே.
பொருள்: கேட்டதைத் தரும் தேவலோகக் கற்பக மரம், காமதேனு, சிந்தாமணி போல விளங்குபவரே! பாற்கடலில் பிறந்த இனிய அமுதம் போல அன்புணர்வை மனதில் பெருகச் செய்பவரே! இன்ப உணர்வு பேரின்ப வெள்ளத்தை பலகாலமும் பருகி மகிழ அடியேனுக்கு ஆதரவு தந்து திருவருள் புரிய வேண்டும். தம்பி முருகனின் வள்ளி மீது கொண்ட காதலுக்காக யானை வடிவத்துடன் சென்றவரே! தந்தையாகிய ஈசனை வலம் வந்து அருட்கனியைப் பெற்றவரே! பக்தர்களுக்கு நிலைத்த இன்பத்தை வழங்கும் பரம்பொருளே! ஐந்துகரங்களையும், யானைமுகத்தையும் கொண்ட விநாயகப்பெருமானே! அருள்புரிவீராக.
விளக்கம்: ஒழுங்குமுறை மிக முக்கியம். விநாயகரே முழுமுதல் கடவுள் என சிவன் உட்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர். அப்படியானால், அவரை வணங்கிய பிறகல்லவா அசுரர்களின் கோட்டைகளை அழிக்க சிவபெருமான் தேரில் புறப்பட்டிருக்க வேண்டும். தந்தை என்ற காரணத்துக்காக அவரைச் சும்மா விட முடியுமா! அதற்காக தேர் அச்சை முறித்து தடையை உண்டாக்கினார் விநாயகர். தந்தைக்கு ஒரு நீதி...மற்றவர்களுக்கு ஒரு நீதியா! சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்பதை முதன் முறையாக செயல்படுத்தியவர் விநாயகர். நாமும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அருணகிரிநாதர் இப்பாடல் மூலம் சூசகமாக குறிப்பிடுகிறார். அத்துடன் திருப்புகழ் முருகனைப் பற்றியது என்றாலும், விநாயகரை வணங்கிய பிறகே தனது பாடல்களை பாடத்துவங்கினார்