Friday, August 24, 2012

மந்திரங்கள்

மந்திரங்கள் எழுகோடி
ஆதலினால் மன்னும்
அவர் இந்த வகை திருமுறைகள்
ஏழாக எடுத்தமைத்து"
என்பது திருமுறை கண்ட புராணக் கூற்று.

எழுகோடி என்றால் ஏழு கோடி மந்திரங்கள் என்பது பொருள் அல்ல. ஏழு முடிவுகளை உடைய மந்திரங்கள் என்பதே பொருளாகும்.

அவையாவன-
நமஹா,
சுவாஹா,
சுவதா,
பட்,
உம்பட்,
வௌஷட்,
வஷட் என்பனவாகும்.

நமஹா - ஐஸ்வர்யம் அளிப்பது.
சுவாஹா - தேவதைகளைத் திருப்தி செய்வது.
சுவதா - தைரியம், வசீகரம் கொடுப்பது.
பட் - விக்கினங்களைத் துரத்துவது.
உம்பட் - காமாதிகளைப் போக்குவது.
வௌஷட் - தேவதைகளை இழுப்பது.
வஷட் - தேவதைகளை வசம் செய்வது.

No comments:

Post a Comment